Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்டார்கள் என்றால் யார் கொன்றது? – சவேந்திரவிடம் சுரேஸ் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்டார்கள் என்றால் யார் கொன்றது? – சவேந்திரவிடம் சுரேஸ் கேள்வி

Suresh-Premachandran_1.jpg?189db0&189db0

காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (28) முற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

‘இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனது கருத்தில் சில விடையங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஒன்று தாம் எந்த இராணுவ முகாம்களையும் வடக்கில் இருந்து அகற்ற மாட்டோம் என்பதாகும். தொடர்ச்சியாக இங்குள்ள மக்களுடைய காணிகள் முப்படையினருடைய வசம் இருக்கின்றது. இவர்கள் தங்களுடைய இருப்பை குறைத்தால் மாத்திரம் தான் காணிகளை விடுவிக்க முடியுமென்ற சூழல் இருக்கின்றது.

யுத்தம்நிறைவுற்று பத்து வருடம் முடிந்து விட்ட பின்பு வடக்கு மாகாணத்தில் எந்த விதமான தேசிய பாதுகாப்புக்கான குந்தகமான சூழ்நிலையும் ஏற்படவில்லை. தென்மாகாணங்களில் மிக மோசமாக துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன, பாதாளக்குழு செயற்பாடுகள் மிக தாராளமாக இடம்பெறுகின்றது. காலி கடலிலும், கொழும்பு கடலிலும் கிலோ கணக்கான போதைவஸ்துகள் கடத்தப்பட்டு வருகின்றது.

ஆகவே இராணுவத்தினர் குவிக்கப்பட எ வேண்டிய இடமாக கொழும்பும், காலியும், மாத்தறையும் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற இடங்கள் இருக்கின்றது. அப்படியிருந்தும் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினரை குவித்து வைத்திருப்பது என்பது தமிழ் மக்களை தொடர்ச்சியாக அடக்கு முறைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அவர்களுடைய சிந்தனையின் வெளிப்பாடே.

யார் என்ன சொன்னாலும் நாங்கள் வடக்கை விட்டு இராணுவத்தினரை அகற்ற மாட்டோம் என்று சவேந்திர கூறுவது ஏற்புடையது இல்லை. தேவைக்கு மேலதிகமான இராணுவத்தினரை குறைத்து அதனூடாக தமிழ் மக்களுக்கு காத்திரமான ஜனநாயக சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். மாறாக இவர்கள் என்ன காரணத்திற்காக தமிழ் மக்களை தொடர்ந்தும் இராணுவ அடிமைத் தனத்துக்குள் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றனர்.

வடக்கில் வாள் வெட்டு என சிறிய சிறிய விடயங்கள் நடக்கிறதே தவிர இது ஒரு அமைதியான பிரதேசமாக இருக்கின்றது. பொலிஸார் மனம் வைத்தால் இந்த வாள்வெட்டு கும்பலை இல்லாது செய்ய முடியும். அதே போல கஞ்சா கடத்தல் போன்ற விடயங்களை நிறுத்த முடியும்.

இதற்கெல்லாம் இராணுவமயமாக்கப்பட வேண்டும் என்ற தேவைகள் நிச்சயமாக இல்லை என்பதை சவேந்திர சில்வாவுக்கு நாங்கள் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். ஆகவே இந்த நிலைமைகள் வடக்கு மாகாணத்தில் மாற்றமடைய வேண்டும் அல்லாதுவிட்டால் இவர்கள் தாங்களாகவே தமிழ் மக்களை ஜனநாயக போராட்டமோ – வேறெந்த போராட்டமோ அவற்றின்பால் தள்ளக்கூடாது.

ஜே.ஆ.ஜெயவர்த்தன ஆட்சியிலும் அடக்குமுறைகள்தான் மக்களை போராட்ட களங்களுக்கு தள்ளியது என்பதை தயவு செய்து இந்த இராணுவ உயர் அதிகாரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் இப்போது இவர்கள் எடுத்திருக்கக் கூடிய முடிவுகள் என்பது ஏற்புடைய முடிவுகளாக தெரியவில்லை.

அதேபோலதான் சவேந்திர சில்வா இன்னுமொரு விடையத்தையும் கூறி இருக்கின்றார். அதாவது காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருப்பார்களோ அல்லது இறந்துபோய் இருப்பார்கள் என அவர் கூறுகின்றார். ஒரு விடையத்தை இராணுவத் தளபதி மறந்துவிட்டார். அதாவது சரனடைந்தவர்கள், பொது மக்களுக்கு முன்னால் சரனடைந்தவர்கள், தமது பெற்றோர்களால் கையளிக்கப்பட்டவர்கள். இவர்கள் இறந்து போனார்கள் என்றால் எவ்வாறு இறந்து போனார்கள் என்பதை சவேந்திர சில்வா வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் இறந்து போனதுக்கான காரணம் என்ன சரனடைந்தவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களும் இறந்து போய்ட்டார்கள் என்று கூறினால் எவ்வாவாறு இறந்து போனார்கள் கொலை செய்யப் பட்டார்களா? யாரால் கொல்லப்பட்டார்கள்? அல்லது நூற்றுக்கணக்கா, ஆயிரக்கணக்கா அவர்கள் இறந்திருப்பதாக எந்தவித காரணங்களும் நிச்சயமாக கிடையாது.

ஆகவே ஒரு இராணுவ தாக்குதலின் போது, இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டதுக்கு அப்பால் அரசாங்கத்திடம் சரணடைந்தவர்கள், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று கூறினால் அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும்.

அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படையாக சொல்லவேண்டும். அவ்வாறு சொல்ல தகுதியற்ற அரசாங்கமாக அது இருக்குமாயின் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மீது ஏவி விடுகிறதென்பது அப்பட்டமான வெளிப்படையான ஒரு விடையமாக இருக்கும்.

ஆகவே இராணுவத் தளபதி சொன்னது உண்மையாக இருந்தால் அரசாங்கம் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது சொல்லப்படவேண்டு. இல்லை என்றால் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டு அந்த விசாரணைக்கு அவர்கள் தங்களை தாங்களே உட்படுத்த வேண்டும். இவ்வாறான விடையங்கள் நடந்தால் மாத்திரம்தான் தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச நீதியாவது கிடைக்குமென நான் கருதுகின்றேன்.’ – என்றார்.

 

https://newuthayan.com/கொல்லப்பட்டார்கள்-என்றா/

5 hours ago, உடையார் said:

காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய கொலைகார ராணுவத்துடன் சேர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படுத்துவாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.