Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 யானை சறுக்கும் போது எலியும் ஒரு உதை விடுமாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 யானை சறுக்கும் போது எலியும் ஒரு உதை விடுமாம்!

"பூமியில் மனிதனின் இருப்பிற்கு ஒரேயொரு பாரிய சவால் வைரசுகளே!" - டாக்டர். ஜோஷுவா லெடபெர்க், (மருத்துவ நோபல் பரிசு 1958).

கோவிட் 19 கடந்த டிசம்பரில் ஆரம்பித்து ஒரு உலக வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப் படி, 2020 குளிர் காலத்திலும் கோவிட் தொற்று எங்களோடு இருக்கப் போவதாகவே நம்பப் படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் , நாம் இன்னும் சில வைரஸ் நோய்களால் சுவாசப் பாதிப்பிற்குள்ளாவது வழமை. இன்புழுவன்சா எனப்படும் fபுளூ வைரஸ் தான் இந்த குளிர்கால சுவாசத்தொற்றுகளின் பிரதான காரணி. இன்புழுவன்சாவோடு சேர்ந்து முக்கியத்துவம் குறைந்த மூன்று வகையான கொரனாவைரசுகளும், றைனோ வைரஸ் எனப்படும் மூக்கொழுகல் வைரசும், RSV எனப்படும் இன்னொரு வகையான வைரசும் எம்மைக் குளிர்காலங்களில் தாக்குகின்றன.ஆனால், எல்லா வைரசுகளும் ஒன்றாக ஒரே காலத்தில் இப்படி வலம் வரும் போது, கோவிட் தொற்றையும் இவற்றையும் எப்படி இனம்பிரித்து அறிவது? 

இன்புழுவன்சாவுக்கு தனியான பரிசோதனை உண்டு
அதிர்ஷ்டவசமாக இன்புழுவன்சா வைரஸ் எங்கள் மூக்கில்/தொண்டையில் இருக்கிறதா என்று 15 நிமிடங்களில் கண்டறிந்து கொள்ளக் கூடிய பரிசோதனைகள் ஏற்கனவே புளக்கத்தில் இருக்கின்றன. சாதாரணமாக வலம் வரும் இன்புழுவன்சா அனேகமானோரில் தீவிரம் குறைந்த நோயை மட்டுமே ஏற்படுத்துவதால், இந்த பரிசோதனையைச் செய்யாமலே இது காலவரை நாம் சமாளித்து வந்திருக்கிறோம். எதிர் வரும் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கப் போகிறது. சுவாச அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இந்த இன்புழுவன்சா பரிசோதனையை அதிகம் செய்ய வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வெறும் பரிசோதனையோடு மட்டுமன்றி, மக்களும் சில விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால், கோவிட் இன்புழுவன்சாக் குழப்பங்களைக் குறைக்கலாம்!  

இன்புழுவன்சா தடுப்பூசி
ஒவ்வொரு ஆண்டும், உலகில் வலம் வரும் மூன்று வகையான இன்புழுவன்சா வைரசுகளுக்கெதிராக தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் தயார் செய்து வழங்குகின்றன. இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒருவருக்கு, இன்புழுவன்சா தொற்று ஏற்பட்டால் அவருக்கு நோய் வரலாம், ஆனால் தீவிர நோயாக அது இருக்காது. எனவே தான், வருடாந்தம் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 50% பேரில் நோய் வந்தாலும் கூட, அது தீவிர நோயையோ, மரணத்தையோ ஏற்படுத்தாமல் தடுப்பதால், இன்புழுவன்சா தடுப்பூசி என்பது ஒரு உயிர் காப்பு மருந்து போலக் கருதப் படுகிறது. இன்புழுவன்சா தடுப்பூசியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு காரணம் herd immunity எனப்படும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி". எந்த சமூகத்திலும் இன்புழுவன்சா நோயினால் அதிகம் பாதிக்கப் படக்கூடிய ஆனால் மருத்துவ காரணங்களால் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முடியாத மக்கள் சிலர் இருப்பர். அவர்கள் இன்புழுவன்சா நோயினால் தாக்கப் படாமல் இருக்க வேண்டுமெனில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உடல் நிலை கொண்டோர் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், சமூகத்தில் இன்புழுவன்சா வைரசு பரவுவது குறைந்து, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டோர் காக்கப் படுவர்! இது தான் herd immunity இன் பயன் பாடு!

இன்புழுவன்சாவிற்கு மருந்து இருக்கிறது.

1970 களில் இருந்தே இன்புழுவன்சா நோய் தீவிரமாக வரக் கூடிய ஆட்களில் பயன் படுத்தக் கூடிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பாவனைக்கு வந்து விட்டன. நோய் குணங்குறிகள் வெளிப்பட்ட 48 மணிநேரத்திற்குள் வழங்கப் பட்டால், இந்த மருந்துகள் நோய் முற்றாமல் தடுக்கும் சக்தியுடையவை. சில சமயங்களில், இன்புழுவன்சா தொற்று வராமல் தடுக்க வேண்டிய நோயாளிகளில், முன் கூட்டிய (prophylaxis) தடுப்பு மருந்துகளாகவும்  இவை பயன்படுத்தப் படலாம்!. 

யானையை உதைக்கும் எலியாக இன்புழுவன்சா மாறுமா?
இரண்டு நாட்கள் முன்பு சீனாவில் இருந்து வந்திருக்கும் ஒரு தகவல் கோவிட் பற்றிய கவனத்தை கொஞ்சம் குறைத்து இன்புழுவன்சாவின் பக்கம் ஈர்த்திருக்கிறது. பன்றிகளில் இருந்து வெகுவாக மனிதனுக்குத் தொற்றும் வாய்ப்புள்ள ஒரு இன்புழுவன்சா வைரசு இனங்காணப் பட்டிருக்கிறது. இது மனிதனில் பெருந்தொற்றாக உருவாகும் வாய்ப்பு என்னவென்று தெரியாத போதும், எச்சரிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கிறது. உண்மை என்னவெனில், இன்புழுவன்சா வைரஸ் கோவிட் 19 இனை உருவாக்கும் வைரசை விட 30 மடங்கு வேகமாக மாறக் கூடியது! இதனால் தான் சாதாரண இன்புழுவன்சா வைரசுக்கே ஒவ்வொரு வருடமும் புதிதாக தடுப்பூசி தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. காலத்திற்குக் காலம் இன்புழுவன்சா வைரசு மிக வீரியம் பெற்று பெருந்தொற்றை ஏற்படுத்தி வருவது நடக்கிறது. மிகப் பாரிய 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் H1N1 என்ற வீரியம் மிக்க இன்புழுவன்சாவினால் உருவானது. முப்பது முதல் ஐம்பது மில்லியன் மக்கள் ஸ்பானிஷ் காய்ச்சலால் இறந்தனர். இதே போன்ற இன்னொரு H1N1 வடிவத்தில் வந்த 2009 பெருந்தொற்றில் அரை மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எனவே , இது மீண்டும் நிகழலாம். 

ஆனால், நிலைமை பயப்படும்படி பயங்கரமாக இல்லை. மனிதர்களில் இந்த புதிய இன்புழுவன்சா வராமல், தடுப்பூசி அதற்கெதிராக தயார் செய்து வழங்குவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால், இந்த புதிய வைரஸ் இன்புழுவன்சா  எதிர்ப்பு மருந்துகளால் கொல்லப் படக்கூடியதாகவே இருக்கும் என்பதால், தீவிர நோய், மரணம் என்பன தவிர்க்கப் படக் கூடியவையாக இருக்கும். 

இதை விடவும், அனைத்து இன்புழுவன்சா வைரசுகளும், கோவிட் 19 இன் வைரசு போலவே சவர்க்காரத்தினாலும், அல்ககோல் கொண்ட தொற்று நீக்கிகளாலும் இலகுவாக அழிக்கப் படக் கூடியவை என்பதால், நாம் இப்போது பயன் படுத்தும் தொற்று தடுப்பு முறைகளும் எம்மை எந்த இன்புழுவன்சா வைரசுகளில் இருந்தும் பெரிதும் காக்கும்! 

எனவே, எதற்கும் இந்தக் குளிர்காலத்தில் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், கோவிட் 19 தொற்றுத் தடுப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். சுவாசக் குணங்குறிகள் ஏற்பட்டால் வைத்தியரை நாடி ஒரு தடவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்! இவையே இப்போதைக்கு இன்புழுவன்சா எமக்கு மேலதிக தலையிடி தராமல் இருக்க நாம் எடுக்கக் கூடிய இலகு வழிகள்!  

 தொடர்பு பட்ட செய்தி: https://www.sciencemag.org/news/2020/06/swine-flu-strain-human-pandemic-potential-increasingly-found-pigs-china 

 நன்றி
-ஜஸ்ரின்

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

கோவிட் 19 கடந்த டிசம்பரில் ஆரம்பித்து ஒரு உலக வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப் படி, 2020 குளிர் காலத்திலும் கோவிட் தொற்று எங்களோடு இருக்கப் போவதாகவே நம்பப் படுகிறது.

புளூ வருவது போல இனிமேல் கொரோனாவும் வந்து போகும் என்கிறார்கள்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

புளூ வருவது போல இனிமேல் கொரோனாவும் வந்து போகும் என்கிறார்கள்.
 

இது ட்ரம்ப் குழு கோவிட் வந்த போது ஜனவரியில் சொன்னது! இப்ப கோடை காலமும் வந்து கொரனாவும் எங்களோடு தொடர்ந்து வருகிறது!

கொரனா தானாகப் போகாது! அதனால் சீசனோடு அது வந்து போகும் வாய்ப்புகள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

 யானை சறுக்கும் போது எலியும் ஒரு உதை விடுமாம்!

"பூமியில் மனிதனின் இருப்பிற்கு ஒரேயொரு பாரிய சவால் வைரசுகளே!" - டாக்டர். ஜோஷுவா லெடபெர்க், (மருத்துவ நோபல் பரிசு 1958).

கோவிட் 19 கடந்த டிசம்பரில் ஆரம்பித்து ஒரு உலக வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப் படி, 2020 குளிர் காலத்திலும் கோவிட் தொற்று எங்களோடு இருக்கப் போவதாகவே நம்பப் படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் , நாம் இன்னும் சில வைரஸ் நோய்களால் சுவாசப் பாதிப்பிற்குள்ளாவது வழமை. இன்புழுவன்சா எனப்படும் fபுளூ வைரஸ் தான் இந்த குளிர்கால சுவாசத்தொற்றுகளின் பிரதான காரணி. இன்புழுவன்சாவோடு சேர்ந்து முக்கியத்துவம் குறைந்த மூன்று வகையான கொரனாவைரசுகளும், றைனோ வைரஸ் எனப்படும் மூக்கொழுகல் வைரசும், RSV எனப்படும் இன்னொரு வகையான வைரசும் எம்மைக் குளிர்காலங்களில் தாக்குகின்றன.ஆனால், எல்லா வைரசுகளும் ஒன்றாக ஒரே காலத்தில் இப்படி வலம் வரும் போது, கோவிட் தொற்றையும் இவற்றையும் எப்படி இனம்பிரித்து அறிவது? 

இன்புழுவன்சாவுக்கு தனியான பரிசோதனை உண்டு
அதிர்ஷ்டவசமாக இன்புழுவன்சா வைரஸ் எங்கள் மூக்கில்/தொண்டையில் இருக்கிறதா என்று 15 நிமிடங்களில் கண்டறிந்து கொள்ளக் கூடிய பரிசோதனைகள் ஏற்கனவே புளக்கத்தில் இருக்கின்றன. சாதாரணமாக வலம் வரும் இன்புழுவன்சா அனேகமானோரில் தீவிரம் குறைந்த நோயை மட்டுமே ஏற்படுத்துவதால், இந்த பரிசோதனையைச் செய்யாமலே இது காலவரை நாம் சமாளித்து வந்திருக்கிறோம். எதிர் வரும் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கப் போகிறது. சுவாச அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இந்த இன்புழுவன்சா பரிசோதனையை அதிகம் செய்ய வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வெறும் பரிசோதனையோடு மட்டுமன்றி, மக்களும் சில விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால், கோவிட் இன்புழுவன்சாக் குழப்பங்களைக் குறைக்கலாம்!  

இன்புழுவன்சா தடுப்பூசி
ஒவ்வொரு ஆண்டும், உலகில் வலம் வரும் மூன்று வகையான இன்புழுவன்சா வைரசுகளுக்கெதிராக தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் தயார் செய்து வழங்குகின்றன. இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒருவருக்கு, இன்புழுவன்சா தொற்று ஏற்பட்டால் அவருக்கு நோய் வரலாம், ஆனால் தீவிர நோயாக அது இருக்காது. எனவே தான், வருடாந்தம் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 50% பேரில் நோய் வந்தாலும் கூட, அது தீவிர நோயையோ, மரணத்தையோ ஏற்படுத்தாமல் தடுப்பதால், இன்புழுவன்சா தடுப்பூசி என்பது ஒரு உயிர் காப்பு மருந்து போலக் கருதப் படுகிறது. இன்புழுவன்சா தடுப்பூசியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு காரணம் herd immunity எனப்படும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி". எந்த சமூகத்திலும் இன்புழுவன்சா நோயினால் அதிகம் பாதிக்கப் படக்கூடிய ஆனால் மருத்துவ காரணங்களால் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முடியாத மக்கள் சிலர் இருப்பர். அவர்கள் இன்புழுவன்சா நோயினால் தாக்கப் படாமல் இருக்க வேண்டுமெனில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உடல் நிலை கொண்டோர் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், சமூகத்தில் இன்புழுவன்சா வைரசு பரவுவது குறைந்து, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டோர் காக்கப் படுவர்! இது தான் herd immunity இன் பயன் பாடு!

இன்புழுவன்சாவிற்கு மருந்து இருக்கிறது.

1970 களில் இருந்தே இன்புழுவன்சா நோய் தீவிரமாக வரக் கூடிய ஆட்களில் பயன் படுத்தக் கூடிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பாவனைக்கு வந்து விட்டன. நோய் குணங்குறிகள் வெளிப்பட்ட 48 மணிநேரத்திற்குள் வழங்கப் பட்டால், இந்த மருந்துகள் நோய் முற்றாமல் தடுக்கும் சக்தியுடையவை. சில சமயங்களில், இன்புழுவன்சா தொற்று வராமல் தடுக்க வேண்டிய நோயாளிகளில், முன் கூட்டிய (prophylaxis) தடுப்பு மருந்துகளாகவும்  இவை பயன்படுத்தப் படலாம்!. 

யானையை உதைக்கும் எலியாக இன்புழுவன்சா மாறுமா?
இரண்டு நாட்கள் முன்பு சீனாவில் இருந்து வந்திருக்கும் ஒரு தகவல் கோவிட் பற்றிய கவனத்தை கொஞ்சம் குறைத்து இன்புழுவன்சாவின் பக்கம் ஈர்த்திருக்கிறது. பன்றிகளில் இருந்து வெகுவாக மனிதனுக்குத் தொற்றும் வாய்ப்புள்ள ஒரு இன்புழுவன்சா வைரசு இனங்காணப் பட்டிருக்கிறது. இது மனிதனில் பெருந்தொற்றாக உருவாகும் வாய்ப்பு என்னவென்று தெரியாத போதும், எச்சரிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கிறது. உண்மை என்னவெனில், இன்புழுவன்சா வைரஸ் கோவிட் 19 இனை உருவாக்கும் வைரசை விட 30 மடங்கு வேகமாக மாறக் கூடியது! இதனால் தான் சாதாரண இன்புழுவன்சா வைரசுக்கே ஒவ்வொரு வருடமும் புதிதாக தடுப்பூசி தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. காலத்திற்குக் காலம் இன்புழுவன்சா வைரசு மிக வீரியம் பெற்று பெருந்தொற்றை ஏற்படுத்தி வருவது நடக்கிறது. மிகப் பாரிய 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் H1N1 என்ற வீரியம் மிக்க இன்புழுவன்சாவினால் உருவானது. முப்பது முதல் ஐம்பது மில்லியன் மக்கள் ஸ்பானிஷ் காய்ச்சலால் இறந்தனர். இதே போன்ற இன்னொரு H1N1 வடிவத்தில் வந்த 2009 பெருந்தொற்றில் அரை மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எனவே , இது மீண்டும் நிகழலாம். 

ஆனால், நிலைமை பயப்படும்படி பயங்கரமாக இல்லை. மனிதர்களில் இந்த புதிய இன்புழுவன்சா வராமல், தடுப்பூசி அதற்கெதிராக தயார் செய்து வழங்குவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால், இந்த புதிய வைரஸ் இன்புழுவன்சா  எதிர்ப்பு மருந்துகளால் கொல்லப் படக்கூடியதாகவே இருக்கும் என்பதால், தீவிர நோய், மரணம் என்பன தவிர்க்கப் படக் கூடியவையாக இருக்கும். 

இதை விடவும், அனைத்து இன்புழுவன்சா வைரசுகளும், கோவிட் 19 இன் வைரசு போலவே சவர்க்காரத்தினாலும், அல்ககோல் கொண்ட தொற்று நீக்கிகளாலும் இலகுவாக அழிக்கப் படக் கூடியவை என்பதால், நாம் இப்போது பயன் படுத்தும் தொற்று தடுப்பு முறைகளும் எம்மை எந்த இன்புழுவன்சா வைரசுகளில் இருந்தும் பெரிதும் காக்கும்! 

எனவே, எதற்கும் இந்தக் குளிர்காலத்தில் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், கோவிட் 19 தொற்றுத் தடுப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். சுவாசக் குணங்குறிகள் ஏற்பட்டால் வைத்தியரை நாடி ஒரு தடவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்! இவையே இப்போதைக்கு இன்புழுவன்சா எமக்கு மேலதிக தலையிடி தராமல் இருக்க நாம் எடுக்கக் கூடிய இலகு வழிகள்!  

 தொடர்பு பட்ட செய்தி: https://www.sciencemag.org/news/2020/06/swine-flu-strain-human-pandemic-potential-increasingly-found-pigs-china 

 நன்றி
-ஜஸ்ரின்

ஒரு வேளை இதை எழுதிய ஐஸ்டின் வேறையோtw_lol: உங்களுக்கு நீங்களே நன்றி எல்லாம் சொல்லில் கொண்டு 🤣😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

ஒரு வேளை இதை எழுதிய ஐஸ்டின் வேறையோtw_lol: உங்களுக்கு நீங்களே நன்றி எல்லாம் சொல்லில் கொண்டு 🤣😂

வாசித்தவர்களுக்கு நன்றி என்று முடித்திருக்கிறேன். இப்படி தான் என் எல்லா ஆக்கங்களையும் முடித்திருக்கிறேன்! தமிழ் முறை என்று நினைத்துச் செய்து வருகிறேன். எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இன்னும் நட் லூசாகி விடவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

வாசித்தவர்களுக்கு நன்றி என்று முடித்திருக்கிறேன். இப்படி தான் என் எல்லா ஆக்கங்களையும் முடித்திருக்கிறேன்! தமிழ் முறை என்று நினைத்துச் செய்து வருகிறேன். எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இன்னும் நட் லூசாகி விடவில்லை! 

ஓ ...மன்னிக்கவும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.