Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவு

 

 

 by : Dhackshala

dc-Cover-48n768dts1ru0aetg9pkg1aa72-2017

மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இம்ப்ரோ மருந்துக்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்பது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ந்து ஓகஸ்ட் 3ஆம் திகதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்திய பாரம்பரிய மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மருத்துவ நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து, அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/மதுரை-சித்த-மருத்துவர்-க/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் கண்டுபிடித்த மருந்தை ஆய்வு செய்ய... உச்ச நீதிமன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்குது. 🧐

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

கொரோனாவிற்கு மருத்து கண்டறிவது தொடர்பான விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதினறம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
பதிவு: ஜூலை 09,  2020 15:53 PM
சென்னை,

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சென்னை உயர்நீதிமன்றம் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, நீதிபதிகள் மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அதன்படி, “கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்? கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்?

தமிழகத்தில் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவ வளர்ச்சிக்கு இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது?

நாட்டில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனைகள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும், நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

https://www.dailythanthi.com/News/State/2020/07/09155309/If-Siddha-doctors-found-medicine-for-Corona-why-doubt.vpf

 

On 7/7/2020 at 18:37, தமிழ் சிறி said:

தமிழன் கண்டுபிடித்த மருந்தை ஆய்வு செய்ய... உச்ச நீதிமன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்குது. 🧐

எல்லாம் தமிழன் என்ற ஒரு இழக்காரம். அத்துடன் எம்மவர்களுக்கும் சித்த மருத்துவம் என்றால் பேதி மட்டும்தான் தெரியும்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சித்த மருத்துவம் : மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சித்த மருத்துவம் : மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

த்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 20,  2020 15:06 PM
சென்னை, 

சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

“பிற மருத்துவத்துறைகளை விட சித்த மருத்துவத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது. ஆயுஷ் என்ற பெயரில் இருந்து சித்தாவை குறிப்பிடும் 'எஸ்' ஐ நீக்கி விடலாமே எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/20150603/Chennai-High-Court-Upset-on-Central-Govt.vpf

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.