Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா-புலிகளை மோத விட இலங்கை சதி: நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா-புலிகளை மோத விட இலங்கை சதி: நெடுமாறன்

ஜூன் 01, 2007

மதுரை: இந்தியாவுடன் கூட்டு ரோந்து என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் இந்தியாவை மோத விட இலங்கை சதி செய்வதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம் என தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் கூறியிருப்பது ஆபத்தில் போய் முடியும். இதே போலத்தான் அமைதி காப்புப் படையை அனுப்புமாறு ராஜிவ் காந்தியை அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே தவறான பாதை காட்டினார்.

இப்போது கூட்டு ரோந்து என்று சொல்வதும் அதுபோலத் தான். இதன் மூலம் இந்தியாவையும் புலிகளையும் மோத விட இலங்கை சதி செய்கிறது.

இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்டு ரோந்து திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

http://thatstamil.oneindia.in/news/2007/06/01/nedumaran.html

நரியாணன் :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவால் இனி ஒரு போரிலும் குதிக்க முடியாது. வளர்ந்து வரும் பொருளாதாரம தரைமட்டமாகிவிடும். சுற்றி வர எதிரி நாடுகளே உள்ளன. இந்தியா அடிக்கடி வீர அறிக்கைகள் விட்டு தாமும் இன்னும் உயிருடன் இருக்கிறறோம் என்பதை காட்டிக்கொள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மோதல் நேற்று இன்று நடப்பவை அல்ல சிங்கள அரசர்கள்,தமிழ் அரசர்கள் காலத்திலும் நடந்தவை தான்.சிங்கள அரசர்களுடன் மோதும் போதும் இந்தியா சென்று படை திரட்டி வந்த சரித்திரங்கள் உண்டு.

யுத்தத்தில் தன்னால் வெல்ல முடியாத இலங்கை நரித்தந்திரமாக இந்தியாவை யுத்தத்தில் மாட்டி தனது படைகளை காப்பாற்ற பயங்கர முயற்சியின் வெளிப்பாடுதான் நாரயணனன் போன்ற வாங்கப்பட்டவர்களின்

அறிக்கைகள்,தமிழகமீனவர்களின் கடத்தல் நாடகங்கள் என்பது எல்லோராலும் அறியப்பட்டதே.

தமிழ் நாட்டு மக்களும் முதலமைச்சர் கருணா நிதி அவர்களும் விழிப்பாக இருக்கும் மட்டும் மத்திய அரசின் திட்டங்கள் சரிவராது... மீறி நடந்தால் தமிழ் நாடே அதிரும் படியான போரட்டங்கள் , பந்துகள் மூலம்

மத்தியரசிற்கு கட்சி பேதம் இன்றி நடத்திக்காட்டுவார்கள் என நம்பலாம்....

இன்னும் ஒரு தந்திரமாக இலங்கை பாகிஸ்தான் சீனாவிடம் ஆயுதம் வாங்குவேன் என சுண்டெலி நாட்டு

வெருட்டுக்கு இந்தியா பயப்படுவதும் வெட்கக்கேடான அரசியல் நாடகம்.....

இலங்கையை ஒரு நாட்டாளும் திருத்த முடியாது....

வியட்னாம் யுத்தம் போன்ற ஒன்று தான் ஒரு வழிக்கு கொண்டு வரும்.......

வணக்கம்!!

நண்பர்களே, முதலில் தமிழக பச்சைதமிழர்களை, பிராமிர பிரபுக்களிடமிருந்து காப்பாற்ற வேணும். தமிழருக்கு பிராமிரருக்கு என்னெ சம்பந்தம். அப்படியிருக்கும் போது தமிழக ட்.ஜி.பி மற்று நாராயனண் (இராணுவ கயவன்) சுப்பரமணியம் சுவாமி போன்றவர்கள் தான் தமிழ் நாடு பிரபுக்கள். இவர்களை தான்டி எந்த திராவிட காழகமும் எதுவும் செய்ய முடியாது. திராவிட இனத்தின் உயிருள்ள முத்திரைகளான, நெடுமாறான் போன்றவெர்கள விடுதலை வேங்ககள். அவர்களின் வேகத்தில் தான் ஆயுதம் இந்தியாவுக்கு திருப்பி எடப்பது தங்கி இருக்கு.

பிராமிரர் பல 100 ஆணுகளாக திராவிடைரை ஆட்சி செய்கிறார்கள். செய்துகொண்டு இருக்கிறார்கள். புரியாத மனிதர்களும் புரிந்த நரிகர்களும் விளையாடும் கழம் தான் தமிழக அரசியல்.

www.tamil.2.ag

  • கருத்துக்கள உறவுகள்

கவுதமனின் கருத்து உண்மை தான். ஆனால் இப்படி ஆனதற்கு திராவிடக் கட்சிகளின் வட இந்திய அடிவருடித்தனம் தான் காரணம் என்பது என் கருத்து. பேருக்கு தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்கள் மட்டுமே உண்டு, மற்றபடி ஹிந்தியில் பேசினால் பெருமை என்கிற மனப்பான்மை தான் நடுத்தர மட்டத்தினரிடம் (தமிழக சகோதரர்கள் மன்னிக்கவும், இது எனது படித்த தமிழ் நாட்டு நண்பர்களுடனான எனது பழக்கத்தின் போது அவதானித்தது; தவறாயிருந்தால் திருத்துங்கள்). தற்போது நல்ல வாய்ப்புகள் உண்டு இதை மாற்ற. தொழில் துறை முதலீடுகள் இப்போது தமிழ் நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களை நோக்கித் திரும்புகின்றன. இந்தப் பொருளாதார மேலாண்மையை வைத்துக் கொண்டாவது திராவிடர்களுக்கு சுயமதிப்பு வருமா தெரியாது.

ஜஸ்டின் கூறுவது போல் இந்தியில் பேசுவதை தமிழகத்தமிழர் பெருமையாக என்றும் நினைப்பதில்லை..... மாறாக தமிழை விட ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என நினைக்கும் ஆங்கில மோகம் கொண்ட மக்கள் எங்கள் மக்கள்... என்றுமே இந்தி இனி தமிழகத்தில் காலடி வைக்க முடியாது.... ஆனால் ஆங்கிலத்திற்கு சிவப்பு கம்பளம்.... அதனால் தான் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் தமிழரின் ஆங்கில அறிவுக்காகவே தமிழகத்தை விரும்புகின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.