Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலுக்கு வரப் போவதில்லை: அறிவிக்கத் தயாராகும் ரஜினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு வரப் போவதில்லை: அறிவிக்கத் தயாராகும் ரஜினி

spacer.png

 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா, கொரோனா ஊரடங்கால் அவரது அரசியல் வருகை தள்ளிப் போகிறதா, ரஜினி அரசியலுக்கு வந்து கட்சி தொடங்குவதற்காகவே வரும் சட்டமன்றத் தேர்தலைக் கூட ஒன்றிய அரசு தள்ளிவைக்கிறதா என்றெல்லாம் ரஜினியை மையமாக வைத்து கேள்விகள் ஆயிரம் சுற்றிச் சுழன்று வருகின்றன.

இந்த நிலையில் ரஜினி ஜூலை 20 ஆம் தேதி தனது மாப்பிள்ளையின் லம்பார்ஹினி காரில் வலம் வந்ததை ஒட்டி, ‘ஊரடங்கால் அடங்கிப் போவார் என்று நினைத்தீர்களா? ரஜினி வருவார்’ என்றனர் அவரது ரசிகர்கள். லயன் இன் லம்பார்ஹினி என்று ட்விட்டரிலும் கொண்டாடினார்கள். சில நாட்களுக்கு முன், “ரஜினி ஆகஸ்டிலேயே கட்சி தொடங்கியிருக்க வேண்டும். அதுதான் திட்டம். ஆனால் கொரோனாவால் தள்ளிப் போகிறது. நவம்பர் மாதம் அவர் கட்சியை முறைப்படி தொடங்கி அறிவிப்பார்” என்று ரஜினிக்கு நெருக்கமான அரசியல் பிரமுகரான கராத்தே தியாகராஜன் அறிவித்திருந்தார்.

இதையெல்லாம் தாண்டி ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “தலைவர் அறிவிக்கத்தான் போகிறார். ஆனால் அது கட்சி தொடர்பான அறிவிப்பாக இருக்காது. அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பாகவே இருக்கும்” என்று ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னார்கள்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் மே 27 ஆம் தேதியன்று  ரஜினியின் அரசியல் திட்டம்: உடைக்கிறதா ஊரடங்கு? என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்ட சில விஷயங்களை நினைவுபடுத்திவிட்டு மீண்டும் இப்போதைய நிலவரத்துக்கு வருவோம்.

“ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை, அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவரது இந்த மருத்துவப் பின்னணியில் கொரோனா வைரஸ் காலத்தில் ரஜினி வீட்டிலேயே இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் ரஜினி முழுக்க முழுக்க குடும்பத்தோடே இருக்கிறார்

 

2020 மார்ச் மாதம் தனது மாற்று அரசியலை அறிவித்த ரஜினி, ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சென்று மருத்துவ செக்கப்பை முடிக்கத் திட்டமிட்டிருந்தார். அரசியல் கட்சி துவங்குவது, அடுத்தடுத்து சுற்றுப் பயணம் என்ற முடிவில் இருந்த ரஜினி இதுபற்றி அமெரிக்க மருத்துவர்களிடம் ஒப்பினியன் கேட்கவும் திட்டமிட்டிருந்தார். ஏனெனில் ஏற்கனவே ராமச்சந்திராவில் இதய சிகிச்சை பெற்றவர் ரஜினி, அதன் பின் சிங்கப்பூர், அமெரிக்கா என்று சிறுநீரக சிகிச்சை பெற்றார். தனது இத்தகைய சிகிச்சைப் பின்னணியில் அரசியல் என்ட்ரி, அதன் பிறகான பயணங்கள் பற்றி மருத்துவர்களின் கருத்தறிய விரும்பினார் ரஜினி. இதற்காக அங்கே அப்பாயின்மென்ட் மற்றும் பயண ஏற்பாடுகள் எல்லாம் செய்து தயாராக இருந்தார்.

அமெரிக்கா சென்று வந்த பிறகு சினிமா ஷூட்டிங் பணிகளையும் சில மாதங்களில் இடைவிடாமல் மேற்கொண்டு செப்டம்பரில் முடிப்பது என்று ப்ளான் வைத்திருந்தார். அதன் பின் கட்சிப் பணிகள், 234 தொகுதிகளுக்கும் சென்று கொடியேற்று விழா என்று மிகத் துல்லியமாக பட்டியலிட்டு திட்டம் வகுத்து வைத்திருந்தார் ரஜினி. ஆனால் கொரோனா ஊரடங்கால் எல்லாமே முடங்கிவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் அவரை பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே ஷூட்டிங் கூட செப்டம்பருக்குப் பிறகுதான் என்பதே இப்போதைய நிலைமை” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் மீண்டும் இப்போது ரஜினிக்கு மருத்துவர்கள் கொடுத்துள்ள அறிவுரையில், “கொரோனா தொற்றின் வீரியம் இந்தியாவில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. உங்கள் உடல்நிலை, மெடிக்கல் ரிப்போர்ட்டை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது பலர் கூடும் இடத்தில் நீங்கள் இருக்கவே கூடாது. அப்படி செல்லும்பட்சத்தில் பலவிதத்திலும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நீங்கள் வீட்டில் தனிமையில் ஓய்வெடுப்பதே உங்களுக்கு நல்லது” என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் தெரிவித்த இந்த கருத்துகளை ரஜினி தனது மனைவி, மகள்கள், மாப்பிள்ளை உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் முன் வைத்து பேசியிருக்கிறார். அவர்களும், “இத்தனை காலத்துக்குப் பிறகு உங்களுக்கு அரசியல் எல்லாம் வேண்டாம். நிம்மதியான வாழ்வுதான் இப்போது நமக்கு முக்கியம்” என்று ரஜினியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனாலும் மனதுக்குள் ஏதோ குடைந்துகொண்டிருந்த ரஜினி தனது நெருக்கமான சில நண்பர்களை கடந்த சில நாட்களாக நேரில் சென்று பார்த்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவர்களும், “சேவை செய்வதற்கு அரசியல் மட்டுமே வழி அல்ல. பல வகைகளிலும் சேவை செய்யலாம். எனவே உடல் நலனை முன்னிறுத்தி ஒரு முடிவெடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து, தான் அரசியலுக்கு வருவதில்லை என்ற முடிவை ஆகஸ்டு மாதம் அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார் ரஜினி என்பதுதான் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் உறுதியாகச் சொல்லும் செய்தி.

 

https://minnambalam.com/politics/2020/07/22/34/rajinikanth-no-to-politics-ready-to-announce-doctors-advice

 

  • கருத்துக்கள உறவுகள்

"அண்ணாமலை இதுக்காக வாய்யா எழுச்சி , புரட்சி , கவுச்சி , வறட்சின்னு உருட்டிகிட்டு இருந்த..! " 😢..😢

hqdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"அண்ணாமலை இதுக்காக வாய்யா எழுச்சி , புரட்சி , கவுச்சி , வறட்சின்னு உருட்டிகிட்டு இருந்த..! " 😢..😢

hqdefault.jpg

Image may contain: one or more people and text

படித்த புத்தகம் எல்லாம், வீணாக போச்சே...  :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.