Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னிகோசிப் 19

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண அழைப்பிதழ் அண்மையில் கிடைத்தது பார்த்தா வழமையா சிட்னி டமிழ்சை மாதிரி திரு.திருமதி பெயர் மட்டும் போட்டு வந்திருந்தது.வழமையாக ஊரில் போடுவது போல் திரு.திருமதி மற்றும் குடும்பத்தினர் என்று புலத்தில் இப்ப ஒருத்தரும் போடுவதில்லை அதற்கு காரணம் பிள்ளைகள் வந்தா எல்லாத்தையும் மெஸ்யாக்கி போடுவீனமாம்,மற்றது புலத்தில் சாப்பாடுக்கும் மண்டபத்துக்கும் ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு அதாவது பெற்றோர் இரு குழந்தைகள் கொடுப்பதிலும் பார்க்க இரு குடும்பத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தா செலவு மிச்சம் என்று நினைக்கிறார்கள்.

முக்கியமாக புலத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் எங்களுடைய கல்யாண முறைகளை பார்க்க வேண்டும் ஆனால் நாம் அதுகளுக்கு அழைபிதழை கொடுப்பது இல்லை ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு எங்களுடைய கலாச்சாரம் ஒன்றும் தெறியாது என்று நாகரிகமாக கதைத்து கொள்ளுவோம்.

சரி உது தான் போகட்டும்,கென்ஸ் பார்ட்டி,பக்ஸ் பார்ட்டி என்று கல்யாண கட்டும் ஆணும்,பெண்ணும் தங்களுடைய பழைய நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பார்கள் இது தனியாக ஆணும் பெண்ணும் பிரிவாக வைப்பார்கள்,ஊரில கல்யாணம் என்று சொல்லும் போது உறவுகள் எல்லாம் ஒரு கிழமைக்கு முதலே ஒன்று கூடி சோம பாணம் அருந்தி சந்தோசமாக இருப்பார்கள் ஆனால் இந்த பக்ஸ் பார்ட்டி,கென்ஸ் பார்ட்டி எல்லாம் இப்ப புதுசா நம்முடைய கலாச்சாரத்திற்குள் வந்துள்ளது இதை இராமர்,சீதை காலத்திலும் இருந்தது இராமர் கல்யாண கட்ட முதல் அயோத்தியில் பக்ஸ் பார்ட்டி வைத்தவர் என்றும் சீதை கென்ஸ் பார்ட்டி சீதாஎலியாவில் வைத்தவர் என்றும் விவாதிப்பதற்கு நமது சமுதாயத்தில் மக்கள் உண்டு.

புதுசா என்னொன்று முளைத்துள்ளது கேனா நைட் இது குஜராத் கலாச்சாரம் ஆனால் இப்பொழுது புலதமிழர்கள்(சிட்னி தமிழர்கள்) அநேகம் கொண்டாடுகிறார்கள் அதாவது கல்யாண வைபதிற்கு 2நாட்களுக்கு முன் கை,கால் கேனா பூசி அலங்கரித்தல் இதற்கு பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி பலகாரம் எல்லாம் சாப்பாடு வகைகள் எல்லாம் செய்து கொண்டாடுவார்கள்,இதுவும் எமது கலாச்சாரம் என்று கூறுவதிற்கு ஆட்கள் உண்டு.

அடுத்தது அழைப்பிதழில் ஒரு சிறிய காகிதத்தில் நோ பொஸ் கிவ்ட் என்று இருக்கும் அவர்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலை அனுப்புவார்கள் அதில் உள்ள பொருட்களை தான் கொடுக்க வேண்டும்(அன்பளிப்பு என்பது அன்பால் கொடுப்பது தவிர அதை கேட்டு வாங்குவதில்லை) இதுவும் எமது கலாச்சாரம் என்று அடம்பிடிக்க சிலர்.

அடுத்து திருமணத்திற்கு வருவீங்களோ இல்லையோ என்று இவர்களுக்கு தொடர்பு கொண்டு சொல்ல வேண்டும் நீங்கள் போகவில்லை என்று சொன்னா அதை வேறு ஒருவருக்கு கொடுப்பீனம் இது தான் கலாச்சாரம்.

அடுத்து திருமணத்திற்கு வந்ததிற்கு நன்றி தெறிவித்து ஊரில் வெற்றிலை,பாக்கு,எலுமிச்சம் பழம் ஒரு பையில் வைத்து அவர்களின் தம்பதிகளின் பெயர்கள் அச்சிடபட்டு வந்தவர்களுக்கு வழங்குவார்கள் ஆனால் இங்கு அலங்கரிக்கபட்ட சீலையால் தைக்கபட்ட பைகள்,குங்கும சிமிழ்கள்,குத்து விளக்குகள்(சிறிய),பலகாரங்கள்,

Edited by putthan

கல்யாண மேடையில் மணவறைக்கு பக்கத்தில் ஒரு கதிரை சிவப்பு கப்பளத்தால் போர்த்து அழகாக அலங்கரிக்கபட்டு இருந்தது அதன் கைபிடியில் ஒரு கைகுட்டையும் வைத்திருந்தார்கள்,பக்கத்தில
  • கருத்துக்கள உறவுகள்

உதில சிலதுகள் இங்கு கனடாவிலும் தொடங்கிட்டுது. எங்களுக்கும் போன கிழமை ஒரு அழைப்பிதழ் வந்தது. அதில், நாங்கள் வருவோமா, அப்படி வருவதாயின் எத்தினை பேர் வருவோம் என e-mail notification தர சொல்லி இருந்தார்கள். e-mail notification தர சொல்லி இருந்ததை பார்த்திட்டு , வயோதிபர்கள் சிலர் "எங்களுக்காகவும் உதை ஒருக்கா அனுப்பு எண்டு" திரியினம்.

இவர்கள் முன்னர் ஒருமுறை விடுமுறைக்காக யாழ்பாணம் போனார்கள். போகுமுன் அங்குள்ளவர்களை தொடர்புகொண்டு மலசல கூடத்தில் இருக்கை வடிவிலான toilet (இங்குள்ள மாதிரி) மாத்தச்சொல்லி மாத்தினதா சொல்லிச்சினம். அங்கை இருக்கிற squat toilet வடிவிலான இல குந்தி இருக்க கால்நோகுமாம்.

நான் நண்பர்களுக்கு சொன்னேன் "அங்கை இருக்கிற பின்னல் கதிரையின் அடி பின்னலை வட்டமா வெட்டிப்போட்டு இருக்கலாமே எண்டு"

உப்பிடியான கூத்துக்களை கண்டுகொள்ளாமல் விட்டால் மனநிம்தியோட இருக்கலாம்.

...தமிழ் மொழி தெறியுதோ இல்லையோ பூ ,பொட்டு ,சேலைகள்,சிலைகளுக்கு,குருத்த
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன், நீங்களும் சிட்னி கோசிப் என்று ஒரு தொடராக எழுதி வருகின்றீர்கள். உங்களிடம் ஓரிரு கேள்விகள் கேட்டால் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கின்றேன்.

இந்த கோசிப் எழுதுவதன் மூலம் நாம், அதாவது வாசகர்கள் என்ன பயன் அடையலாம் என நினைக்கின்றீகள்? நீங்கள் என்ன பலன் அடையலாம் என நினைக்கின்றீர்கள்? இதன் மூலம் சமுதாயத்தை திருத்தலாம் என நினைக்கின்றீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசகர் என்ன பயன் அடைகிறார்கள் என்பது பற்றி நான் கூறமுடியாது வாசகர்கள் தான் கூறமுடியும் ஆனால் நான் நல்ல பயன் அடைகிறேன் என்று நினைகிறேன் வழமையான நான் எழுதுகிற லொள்ளுகளே பத்திரிகைகளிள்,சஞ்சிகைகளில் பிரசுரிக்க முடியாது ஏனென்றா அது வந்து வியாபார நோக்குடன் நடத்தபடுபவை அங்கு போய் இந்த கருத்தை முன்வைத்தால் உரிமையாளரும் பிரசுருக்கமாட்டார்,வாங்குவொ

நீங்கள் என்ன பலன் அடையலாம் என நினைக்கின்றீர்கள்? இதன் மூலம் சமுதாயத்தை திருத்தலாம் என நினைக்கின்றீர்களா?

சிட்னியில இருக்கிற சமுதாயத்தில் சில பேர் இந்த சிட்னி கோசிப்பால திருந்தவில்லை ஆனால் பயம் இருக்க தான் செய்கிறது,கோசிப்பில சிறிலங்கா ஜேர்சியுடன் கிரிக்கட் போன தமிழரை பற்றி எழுதினார் அதன் பிறகு அவர்களில் சிலர் புத்தனுக்கு முன்னால சிறிலங்கா அணிக்கு சபோட் பண்ணாத மாதிரியும் சிறிலங்கா ஜேர்சி அணிய பயந்தும் இறுதியாட்டத்தில் அவுஸ்ரேலியாவிற்கு கஷ்டபட்டு சப்போட்டும் பண்ணிணவர்கள்,கேட்டால் இந்த மனுசன் போய் யாழில எழுதிவும் என்று,எனக்கு அதில ஒருத்தர் சொன்னவர் தன்னை பற்றி நான் எழுதினாலாம் சிட்னியில வெள்ளை வான் வைத்து கடத்துவாராம்,கடத்த நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் அவுஸ்ரேலியா அரசாங்கமும் பார்க்த்டு கொண்டு தானே இருக்கும் அவர் யாழுக்கு வருவார் என்று தெறிந்து தான் இதை எழுதுறேன்

:angry: :angry: :angry: :angry:

சரி அப்ப திருமண அழைப்பிதழை எப்படி அடிப்பது என்று சொல்லித் தாங்கோ....

நானும் .... எதிர்காலத்தில் (திருமணம் செய்தால்) உங்கள் ஆலோசனையை பின்பற்றுகின்றேன்..

திருமண அழைப்பிதழ் அனுப்பும் போது Self addressed stamp envelop இல் நீங்கள் விரும்பும் உணவு என்ன என்று கேட்டு அதற்கேற்றபடி உணவு பரிமாறினால் நன்றாக இருக்குமோ??

வெளிநாட்டவரும், நம்மவரும் திருமணத்திற்கு வரும்போது பரிமாறும் உணவு வகைகளில் குழப்பம் ஏற்படுகின்றது. எனவேதான் கேட்டேன்.

மற்றவர்கள் எது செய்கின்றார்களோ அவற்றைபினபற்றுவதில் நம்மவர்கள் அதாவது தமிழர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்: அது சரியோ பிழையோ என்பதையெல்லாம் சிந்தித்துப்பார்ப்பதில்லை

மேலே புத்தன் குறிப்பிடட பலவிடயங்கள் மேலைநாட்டவர்களின் பழக்கவழக்கங்கள். அதைத்தான் நம்மவர்கள் பின்பற்றுகிறார்கள்.தமிழர்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்கள் எது செய்கின்றார்களோ அவற்றைபினபற்றுவதில் நம்மவர்கள் அதாவது தமிழர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்: அது சரியோ பிழையோ என்பதையெல்லாம் சிந்தித்துப்பார்ப்பதில்லை

மேலே புத்தன் குறிப்பிடட பலவிடயங்கள் மேலைநாட்டவர்களின் பழக்கவழக்கங்கள். அதைத்தான் நம்மவர்கள் பின்பற்றுகிறார்கள்.தமிழர்கள

ஜஙரழவந யெஅநஸ்ரீ'உhரஅஅய....' னயவநஸ்ரீ'துரn 3 2007இ 09:17 Pஆ' pழளவஸ்ரீ'310602'ஸ

மன்னிக்க வேண்டும். நீங்கள் முற்று முழுதாக எல்லா தமிழரையும் இப்படி கூற முடியாது. ஓரிரு தமிழ் திருமணங்களுக்கு மட்டும் தான் நான் சென்றிருக்கின்றேன்...ஆனாலும் பெரியவர்களிடம் கேட்டு சாஸ்திர சம்பிரதாயங்களை நான் அறிந்து வைத்துள்ளேன்... எனது குடும்பத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் (2006) இப்படியான எதுவும் நடைபெறவில்லை...

ஜஃஙரழவநஸ

நீங்கள் மற்றைய தமிழர்கள்போல் அல்லாது வேறுபட்டிருப்பதையிட்டு ரொம்ப சந்தோசம்...சும்மா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம நம்ம இன்விடேசனில குடும்ப சமேதராக என்டு தான் அடித்திருக்கிறோம்

நாம நம்ம இன்விடேசனில குடும்ப சமேதராக என்டு தான் அடித்திருக்கிறோம்

கண்டிப்பா நான் வாரேன் ஆனா எனகு குடும்பம் இல்லை

:P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டிப்பா நான் வாரேன் ஆனா எனகு குடும்பம் இல்லை

:P

அப்ப உங்களுக்கு இன்விடேசனும் இல்லை :P

அப்ப உங்களுக்கு இன்விடேசனும் இல்லை :P

அண்ணாவுக்கு என்னதுக்கு இன்விடேசன்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி எல்லாம் உங்க சிட்னி இல நடக்குதா? இதை எல்லாம் பார்க்கேக்க இங்க நடக்கிறதுகள் பறவாயில்லை போல இருக்கே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கல்யாண மேடையில் மணவறைக்கு பக்கத்தில் ஒரு கதிரை சிவப்பு கப்பளத்தால் போர்த்து அழகாக அலங்கரிக்கபட்டு இருந்தது அதன் கைபிடியில் ஒரு கைகுட்டையும் வைத்திருந்தார்கள்,பக்கத்தில

ஏன் புத்தன் ஒவ்வொருத்தருக்கு ஒரு நம்பிக்கை அதை நீங்கள் இழிவுபடுத்துவது சரியில்லை அவைக்கு பிடித்திருக்குது வைக்கினம் உங்களுக்கு விருப்பம் இல்லாடி செய்யாம விடுகிறது தானே

:angry:

பெரிய அறிவாளி என்று தெறியுது

:angry: :angry:

சோனு அன்டி அதை போல் நீங்களும் விருப்பம் என்றா இதை கேட்கலாம் விருப்பம் இல்லாட்டி கேட்காம விடலாம் யாரும் எதையும் பற்றி எழுத உரிமை இருக்குது சரியோ அத்தோட நான் அறிவாளி என்று சிட்னிக்கே தெறியும்

:angry: :P

புத்தரெ, உங்கள் ஆதாங்கம் புரிகிறது. ஆனாலும், புல வாழ்கையில் சில மாற்றங்கள் அவசியம் என்பது எனது கருத்து. எனது நண்பனின் மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்து. அவர் நீங்கள் சொன்ன சில்லொடுப்பு ஒன்றும் இல்லாமல், ஊர் மாதிரி நடத்தினார். நடந்தது என்ன? 25 கோப்பை செட், 10 கரண்டி செட், இப்படி தோவை இல்லாத மலிவான சாமான்களை எல்லாம் சீனன் கடையில் வோண்டி கொண்டு வந்து தள்ளி போட்டு போட்டினம். அவர் இந்த அன்பளிப்புகளை எல்லாம் வைத்து என்ன சொய்வார்? இதுகளை எல்லாம் வீட்டை கொண்டு போய் சோர்க்க போதும் போதும் என்று ஆகி விட்டது.

ஆனா படியால், இதற்கு ஒரு புதிய அணுகு முறை தோவைப்படுகிறது. அன்பளிப்பாக பணத்தை பொற்று, தாய் நாட்டுக்கு அனுப்பாலாம் என்பது எனது கருத்து.

கல்யாண வீடுகளில் நம்ம சிறுசகள் படுகிற ஆட்டாகாசம் கொன்ச நன்சம் இல்லை. அம்மா, அப்பா ஒரே கோசிப்..பிள்ளைகளை கவனிப்பது இல்லை. அதுகள் தலை கால் தெரியாமல் ஒடி திரியிதுகள். விழுதுகள், சண்டை பிடிக்குதுகள். இதுக்கு என்ன சொய்வது புத்தரெ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தரெ, உங்கள் ஆதாங்கம் புரிகிறது. ஆனாலும், புல வாழ்கையில் சில மாற்றங்கள் அவசியம் என்பது எனது கருத்து. எனது நண்பனின் மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்து. அவர் நீங்கள் சொன்ன சில்லொடுப்பு ஒன்றும் இல்லாமல், ஊர் மாதிரி நடத்தினார். நடந்தது என்ன? 25 கோப்பை செட், 10 கரண்டி செட், இப்படி தோவை இல்லாத மலிவான சாமான்களை எல்லாம் சீனன் கடையில் வோண்டி கொண்டு வந்து தள்ளி போட்டு போட்டினம். அவர் இந்த அன்பளிப்புகளை எல்லாம் வைத்து என்ன சொய்வார்? இதுகளை எல்லாம் வீட்டை கொண்டு போய் சோர்க்க போதும் போதும் என்று ஆகி விட்டது.

ஆனா படியால், இதற்கு ஒரு புதிய அணுகு முறை தோவைப்படுகிறது. அன்பளிப்பாக பணத்தை பொற்று, தாய் நாட்டுக்கு அனுப்பாலாம் என்பது எனது கருத்து.

கல்யாண வீடுகளில் நம்ம சிறுசகள் படுகிற ஆட்டாகாசம் கொன்ச நன்சம் இல்லை. அம்மா, அப்பா ஒரே கோசிப்..பிள்ளைகளை கவனிப்பது இல்லை. அதுகள் தலை கால் தெரியாமல் ஒடி திரியிதுகள். விழுதுகள், சண்டை பிடிக்குதுகள். இதுக்கு என்ன சொய்வது புத்தரெ?

நீங்கள் சொல்லுறதிலையும் நியாயம் இருக்குது தான் சப்பட்டைகடையில நானும் சாமான் வாங்கி கொடுக்கிறது அது மலிவு தானே இதுவும் எங்களின்ட கலாச்சாரம் தானே

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.