Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியின் விளிம்பில் த.தே.கூ.: ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியின் விளிம்பில் த.தே.கூ.: ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்

 

Suresh-Premachandran.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியின் விளிம்பில் நிற்பதால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளினுடைய பெயர்களைக் கூறுவதனூடாக வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளலாம் என நினைப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்காகத்தான், ஜனநாயகப் போராளிகளை வைத்து ஊடக சந்திப்புக்களை கூட்டமைப்பினர் நடத்துகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் மீன் சின்னத்துக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என்று பரவலாகக் கருதுகின்றார்கள்.

இப்போதுள்ள, பிரச்சினை என்னவென்றால், ஒரு தோல்வியின் முகத்தில் நிற்கக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது ஜனநாயகப் போராளிகளுடன் இணைந்து அவர்களும் நாங்களும் ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுவதன்மூலம் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டு செயற்படுகிறார்கள்.

ஆனால், ஜனநாயகப் போராளிகள் ஒரு புலனாய்வுப் பிரிவினர் என்று கூறியது சம்பந்தன் ஐயாதான். போராளிகள் எல்லோரும் சயனைட் சாப்பிட்டு இறந்துவிட்டார்கள் என்று கூறியது ஸ்ரீதரன். இன்றைக்கு தாங்கள் போராளிகள் என்று ஜனநாயக போராளிகள் கூறுகிறார்கள். ஆகவே தமிழ் மக்கள்தான் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கோ போராளிகளுக்கோ நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் அரசாங்கத்துக்கு விலைபோனவர்கள் தங்களை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவ்வாறு முத்திரை குத்திக்கொண்டு அவர்கள் பேசுவதென்பது விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் போராளிகள் அனைவரையும் கொச்சைப்படுத்துகின்ற செயற்பாடாகத்தான் இருக்கும்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியை பொறுப்பேற்போம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவர் இன்பராசா சொல்கிறார். ஒரு பக்கத்தில் ஜனநாயகப் போரளிகள், இன்னொரு பக்கத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் என்று இருக்கின்றார்கள். யார் யார் எதனைப் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. குறித்த இன்பராசா தரப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்பது வெளிப்படையானது

குறித்த இரு தரப்பினரும் போராளிகளாக இருக்கலாம். ஆனால் இவர்களை யார் கையாளுகிறார்கள், இவர்கள் ஏன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்?

ஒரு விடயம் வெளிப்படையாகத் தெரிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியின் விளிம்பில் நிற்பதால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளினுடைய பெயர்களைக் கூறுவதனூடாக வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளலாம் என்ற நோக்கில்தான் குறித்த தரப்பினருடன் ஊடக சந்திப்புக்களை அவர்கள் மேற்கொள்கின்றார்கள்” என்று குறிப்பிட்டார்.

     by : Litharsan

https://athavannews.com/தோல்வியின்-விளிம்பில்-த/

நீங்களும் ஈழத்தை பெற்று தருவதட்காக மக்களின் மண்டையில் போடட தலைவர்தானே. அப்படி போராடிய உங்களை மக்கள் நிராகரித்தார்கள்தானே. இப்போ எதட்கு புலிகளைப்பற்றி கதைக்கீறிர்கள். அவர்களைப்பற்றி பேசுவதட்கு உங்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. உங்கள் சகோதரனுக்கு மாகாண சபையில் அமைச்சு பதவி கிடைக்காததால் கூட்ட்டமைப்பில் இருந்து வெளியேறிய உங்களுக்கு பதவி ஆசையை தவிர வேறு என்ன இருக்கிறது? இன்னும் நிறைய எழுதலாம். கூட்ட்டமைப்பு ஈழம் பெற்று தந்துவிட்ட்து , நார் நாராய் எல்லாவற்றையும் கிழித்துவிடடார்கள் என்று சொல்லவில்லை. முதலில் உங்கள் அழுக்குகளை கழுவிப்போட்டு மத்தவர்களை சுத்தப்படுத்த பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமே அழுக்குத் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகப் பேராளிகளை குற்றஞ்சாட்டுவது ஏற்புடையது அல்ல - சி.வி.கே.சிவஞானம்

(எம்.நியூட்டன்)

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இன்று வெளியேறி கூட்டமைப்பையும் அதனோடு இணைந்து செயற்படுகின்றவர்களையும் கொச்சைப்படுத்துகின்றார்கள்.

இது ஏற்கத்தக்கதலல்ல. தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு தங்கள் பலமான வாக்குகளைச் செலுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

CVK_new.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற ஜனநாயக் போராளிகள் கட்சியை பல்வேறு விமர்சனங்களை விசமத்தனமாக தெரிவித்து வருகின்றார்கள்.

இது ஏற்புடையது அல்ல. ஆயுதப் பேராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக வழியில் திரும்பிய முன்னாள் போராளிகள் இணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றார்கள்.

அவ்வாறு செயற்பட்டு வருபவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் கட்சி ஆரம்பிக்கின்றபோது அனைத்துக் கட்சிகளுடனுமே கலந்துரையாடினார்கள். 

அவ்வாறானபோது, கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றாரகள். இதனைப் பொறுக்காதவர்கள்தான் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள்.

இவ்வாறு கூறி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கின்றார்கள். கூட்டமைப்புக்குள் வந்து தங்களின் முகவரியைப் பெற்று விட்டு இன்று வெளியேறி கூட்டமைப்பையும் ஜனநாயகப் போராளிகள் கட்சிகள் மீதும் குறை கூறுகின்றார்கள்.

ஜனநாய பேராளிகள் கட்சி பல்வேறு நிகழ்வுகளை திறம்பட ஒழுங்குபடுத்திச் செய்கின்றார்கள். அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு விட்டு தேர்தல் என்றவுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். 

அரசியல் தேவைக்காக பொய்ப்பிரச்சாரங்கள் செய்யக்கூடாது, போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தக் கூடாது.

எனவே, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தங்கள் பலத்தை வழங்கி ஒருமித்த குரலாக செயற்பட ஆணை வழங்கவேண்டும் என்றார்.

 

 

https://www.virakesari.lk/article/87047

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.