Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு தலா 34 இலட்சம் ரூபா

Featured Replies

பங்களாதேஷ் தொடரில் வெற்றி வாகை சூடிய இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தலா 34 இலட்சம் ரூபா அள்ளிச் செல்கின்றனர்.

சமீபத்தில் பங்களாதேஷ் சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. உலகக் கிண்ணத் தோல்விக்குப் பின் வீரர்களுக்கான சம்பள முறையை இந்திய கிரிக்கெட் சபை மாற்றியமைத்தது.

வெற்றி அடிப்படையில் ஊக்கத் தொகை, போனஸ் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதன்படி பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்றதற்கு சம்பளமாக ஒவ்வொரு வீரருக்கும் 3 இலட்சம் ரூபா (ஒரு போட்டிக்கு 1.5 இலட்சம் ரூபா வீதம்) வழங்கப்படும்.

* ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபா (வெற்றி பெற்ற இரண்டு போட்டிக்கு ரூபா 2.5 இலட்சம் வீதம்) வழங்கப்படும். விளையாடாத வீரர்கள் இதில் பாதித் தொகையை பெறுவர்.

* அந்நிய மண்ணில ஒருநாள் தொடரை வென்றால் ரூபா 75 இலட்சம் போனஸ் என்ற அறிவிப்பின்படி, அனைத்து வீரருக்கும் (15 பேருக்கும்) தலா ரூபா 5 இலட்சம் வழங்கப்படும்.

* மேலே சொன்ன அனைத்து தொகையும் சேர்த்தால் ஒருநாள் போட்டித் தொடரை வென்ற அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் ரூபா 13 இலட்சம் கிடைக்கும்.

இதேபோல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கு சம்பளமாக ரூபா 5 இலட்சம் வழங்கப்படும். (ஒரு போட்டிக்கு 2.5 இலட்சம் வீதம்)

* ஊக்கத் தொகையாக டிரா செய்த போட்டிக்கு ரூபா 4 இலட்சம் வழங்கப்படும். விளையாடாத வீரர்களுக்கு இதில் பாதி தொகை வழங்கப்படும்.

* ஊக்கத் தொகையாக வெற்றி பெற்ற போட்டிக்கு ஒவ்வொரு வீரருக்கும் ரூபா 6 இலட்சம் வழங்கப்படும்.

* அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றால் ரூபா 90 இலட்சம் போனஸ் என்ற விதியின்படி, அனைத்து வீரருக்கும் (15 பேருக்கும்) ரூபா 6 இலட்சம் வழங்கப்படும்.

* ஒட்டுமொத்தமாக சேர்த்தால் டெஸ்ட் தொடரை வென்ற அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் ரூபா 21 இலட்சம் கிடைக்கவுள்ளது.

ஒருநாள் ( ரூபா 13 இலட்சம்),டெஸ்ட் (21 இலட்சம்) என இரண்டு தொடரிலும் இடம்பெற்ற ராவிட், தோனி, சகிர்கான், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் தலா ரூபா 34 இலட்சம் பெறவுள்ளனர். இதனை கிரிக்கெட் சபை அதிகாரி ஆர்.எஸ்.ஷெட்டி தெரிவித்தார்.

ஊக்க தொகை, போனஸ் போன்றவற்றை புதிய சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகே வீரர்கள் பெற முடியும். முந்தைய சம்பள ஒப்பந்தத்தின் படி வீரர்கள் `ஏ' (ரூபா 50 இலட்சம்), `பி' (ரூபா 35 இலட்சம்), `சி' (ரூபா 20 இலட்சம்) என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டனர்.

இது ரத்து செய்யப்பட, சிரேஷ்ட வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதைய சம்பள விதிகளின்படி அதிகமான தொகை கிடைப்பதால், வீரர்கள் எதிர்ப்பை கைவிட்டு உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

-thinakkural--

பார்த்த ஆட்களுக்கு என்ன கொடுக்கினம்?

:P

இது கொஞ்சம் ஓவரா இருக்கு... இந்தியாவின் நிலம இப்படியாப் போச்சு... வண்டி ஒடத்திலும் ஓடம் வண்டியிலும் போகும் உலகமடா இது... எல்லாம் காலம்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

34 லட்சமா??? எங்க இருந்து தான் இவ்வளா காசு வருதோ தெரியாது. என்னமோ உலக சம்பியன் ஆனா மாதிரி எல்லோ இருக்கு இவையள் இப்படி படம் காட்டுறது. செத்த பாம்புக்கு அடிச்சுபு;போட்டு இப்படி படம் காட்டுறது கொஞ்சம் ஓவர் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.