Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனஅடிப்படையில் நாட்டை பிரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்களுக்கு அடிபணியமாட்டோம்- மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனஅடிப்படையில் நாட்டை பிரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்களுக்கு அடிபணியமாட்டோம்- மகிந்த

 
August 2, 2020

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை பயன்படுத்தி பெற முடியாமல் போனதை பெறுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சண்டே ஒப்சேவருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இனஅடிப்படையில் நாட்டை பிரிக்கவேண்டும் என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்களுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் அரசாங்கத்தின் கீழ் தனிநாட்டுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

mahinda-023-300x196.jpg
 

மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசத்தை பாதித்த பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடித்தோம் என குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச அனைத்து சமூகத்தவர்களும் ஐக்கியத்துடனும் அமைதியுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கினோம் எனவும் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளும் பயங்கரவாதமும் நிரம்பிய இருண்ட யுகத்தை சிலர் மறந்துவிட்டனர் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச 1980களின் கிளர்ச்சியின் போது 60,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன்னொரு கிளர்ச்சி ஏற்படுவதை தடுப்பதற்கான முயற்சிகளை முறியடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாகயிருக்கவேண்டும் என விரும்பினால் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கு பதில் தமிழ் சமூகத்தின் பரந்துபட்ட நன்மையை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


இன்று நாட்டிலிருப்பது 42 வருடகாலத்துக்குமுந்தைய முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினால் 1978 இல் கொண்டுவரப்பட்ட அரசமைப்பு என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த அரசமைப்பு 19 முறை திருத்தப்பட்டுள்ளது,இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய மாற்றம் பாரியதவறை செய்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் நிறைவேற்றதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தாத புதிய அரசமைப்பினை கொண்டுவரமுயல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

http://thinakkural.lk/article/59593

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இனஅடிப்படையில் நாட்டை பிரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்களுக்கு அடிபணியமாட்டோம்- மகிந்த

ஒருமித்த எண்டு கூத்தமைப்பு காட்டுக்கத்து கத்துது.இந்தாள் நாட்டை பிரிக்கமாட்டம் எண்டுது.....இதென்னடாப்பா இது?

2 hours ago, குமாரசாமி said:

ஒருமித்த எண்டு கூத்தமைப்பு காட்டுக்கத்து கத்துது.இந்தாள் நாட்டை பிரிக்கமாட்டம் எண்டுது.....இதென்னடாப்பா இது?

நீங்க வேற அவனுகள் சிங்க கொடி பிடித்து ஆட்டி 10 வருஷம் ஆகுது அது தெரியாமல் மாத்தையா இப்படி சொல்லுரார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஒருமித்த எண்டு கூத்தமைப்பு காட்டுக்கத்து கத்துது.இந்தாள் நாட்டை பிரிக்கமாட்டம் எண்டுது.....இதென்னடாப்பா இது?

உது தெரியாதா இம்முறை பதவிகளை பெற்று மக்களுக்கு சேவை செய்ய மக்கள்
ஆணை தரவேண்டும் என்று கூத்தாடிகள் கூவினார்கள் அல்லவா 
அதற்க்கு மஹிந்த மாத்தையா அடித்திருக்கும் சாவுமணி தான் இது  

பக்கத்திலேயே வந்திராதிங்க என்று சொல்லாம சொல்லியிருக்கிறார் 

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.