Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

 

IMG20200811083516-720x450.jpg

வவுனியாவில் முள்ளாள் போராளி  மீது இனந்தெரியாத நபர்கள்  தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியும்,சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே நேற்று (திங்கட்கிழமை)  இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த மர்மநபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுடன் அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

முன்னாள் போராளி மீதான தாக்குதல் தொடர்பாக அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், நோயாளர் காவுவண்டி மூலம் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வவுனியாவில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி வன்னி பகுதி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் ஊடாக மனிதாபிமான சேவைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   by : Vithushagan

http://athavannews.com/வவுனியாவில்-முன்னாள்-போர/

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசு வந்து.... இன்னும் பாராளுமன்றம் ஆரம்பிக்கபில்லை. அதற்குள்.... குரங்கு சேட்டைகளை ஆரம்பித்து விட்டார்கள்.  😡

இவர் ஏன் தாக்குப்படடார் என்று தெரியாது. ஆனால்
இனி எல்லாம் அரசாங்கம் ஊடாகச் செய்ய வேண்டும் என்று வந்தாலும் அதிசயமில்லை. இதன் மூலம் யார் எவர் என்று அறிய முட்படலாம். சிலருக்குச் சாதகம் சிலருக்கு விரக்தி 🙄

  • கருத்துக்கள உறவுகள்

      வடக்கின் வாள் வெட்டு, ஆவா குழுவின் கதா நாயகனை மக்கள் இனங்கண்டிருப்பார்கள் என நினைக்கிறன். இளம் சமுதாயத்தை சீரழிகிறவன் தான், எம் இனத்தின் இன்றைய தலைவன். தமிழர் வோட்டு போடும்வரை துரோகிகளும், இனத்தை விற்று பிழைப்பு நடத்துபவர்களும் இனி வெற்றி பெறுவார்கள். நீதிக்கான தெரிவு இனி மெல்லச் மெல்ல சாயும், சாய்க்கப்படும். நாளைக்கு தனி சிங்களவன் வடக்கு, கிழக்கில் போட்டியிடுவான். நம்ம இனம் அவனுக்கு வோட்டுப் போட்டு எம். பியாக தெரிவார்கள்.  இதை தடுப்பதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். நம் தலைவர்கள் பிடுங்கியது லாபம் என்று கடந்து போவார்கள். இனத்தின் நன்மை கருதி யாரும் உழைக்க முன் வரார். எம் இளைய தலைமுறையினரை தவறான பாதையில் இழுத்துவிட்டார்கள். போர் ஓய்ந்த கையோடு எதிரி செய்த முதல் வேலை, தம் முகவர் மூலம் நம் இளைய தலை முறையினரை போதைப்பொருள், வாள்வெட்டு, சமூகச் சீரழிவு போன்ற செயல்களில் ஈடுபடுத்தி சமூக சிந்தனை அற்றவர்களாக்கி, தலையாட்டும் பொம்மைகளாக, சுயமாக சிந்திக்காது பலிக்கடாவாக்கி விட்டார்கள். எம் சமுதாயத்தை நினைக்க விரக்தியும், வேதனையும், பயமுமாக இருக்கிறது. கல்வியில், ஒழுக்கத்தில், பொருளாதாரத்தில் சிறந்து  இருந்த சமுதாயம் கையேந்தும், தறுதலை கூட்டமாக மாறிக்கொண்டு போகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

புதிய அரசு வந்து.... இன்னும் பாராளுமன்றம் ஆரம்பிக்கபில்லை. அதற்குள்.... குரங்கு சேட்டைகளை ஆரம்பித்து விட்டார்கள்.  😡

நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து ஆரம்பித்து விட்டார்கள்.இனி சிறிலங்கா களைகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை எப்போதும் சமூக விரோத செயலில் துரிதமாய் செயற்பட வைத்து தனது காரியங்களை கனகச்சிதமாய் நடத்துவதில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறான் சிங்களவன். இதற்கு நமது தலைமகள் உடன் போவதும், இளைஞரை  பலியாக்குவதும், பலியாகுவதும் கோவமாயும் கவலையாயும் இருக்கிறது. இங்கே எழுதி கொட்டுவதால் பயனேதும் இல்லை. எப்படி இதிலிருந்து வெளிவருவது? நமது சந்ததி விஜயன் போல படகேற்றி நாடுகடத்தவும் முடியாமல், தவித்து அழியப்போகுது. சிங்களவனிடம் மண்டியிட்டாலும் நம் அழிவைத் தடுக்க முடியாது. அடிமையாய் தத்து கொடுத்து விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.