Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D--720x450.jpg

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின்  உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவினை விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மீண்டும் ஆலையை திறக்குமாறும் கோரி உத்தரவு பிறப்பித்தது.

பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில், தமிழக அரசின் மனுவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் மனுத்தாக்கல் செய்தது.

இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன்  வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஸ்டெர்லைட்-ஆலையை-திறக்க-3/

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு அறிவித்தனர்.

அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 



மேலும் தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், “ நல்ல வரவேற்க தகுந்த தீர்ப்பு. ஏற்கெனவே அரசு எடுத்த நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் வலு சேர்த்துள்ளது. அரசின் நிலைப்பாடு என்பதே கொள்கை முடிவுதான். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குமாறு நடிப்பவர்களை எழுப்பமுடியாது. இந்த ஆலையே தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதகுலத்தை காத்திடும் மகத்தான தீர்ப்பு. என்றும், இந்த தீர்ப்பினை வரவேற்று அமைச்சரவைத் தீர்மானம் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நீதி கிடைத்துள்ளது” என்று கூறினார்.

தீர்ப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி தெரிவிக்கையில், “சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது” என்று தெரிவித்தார்.

தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவிக்கையில், “மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு ஒரு சான்று. நீதிமன்ற தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி. தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை அருகில் இருந்து உணர்ந்தவன் நான்” என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/18121312/High-Court-ruling-against-Sterlite-Welcome-to-various.vpf

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது.

 



இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர்.

பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், டெல்லி மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல்கள் மாசிலாமணி, பி.எஸ்.ராமன், ஏ.எல்.சுந்தரேசன், ஆரியமா சுந்தரம், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் வைகை, வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகோ, டி.மோகன், பாலன் அரிதாஸ், யோகேஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர். இவர்களது வாதம் 45 நாட்களுக்கும் மேலாக நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிறப்பித்துள்ளனர்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது.  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. தீர்ப்பின் முழு விவரம் மதியம் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கக் கோரிய வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/18115056/Chennai-High-Court-orders-permanent-closure-of-Sterlite.vpf

  • கருத்துக்கள உறவுகள்

 

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி: வைகோ

vaiko-1-720x450.jpg

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கும் தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்கக் கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி, மக்கள் பேராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.

அனைத்துத் தரப்பு மக்களும் நடத்திய போராட்டத்துக் கிடைத்த வெற்றி, 13 உயிர்கள் பலியாகிற்றே அவர்கள் சிந்திய இரத்தத்துக்குக் கிடைத்த நீதி.

கடந்த 26 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இடைவிடாத போராட்டங்கள், எண்ணற்ற போராட்டங்களை  நடத்தி வந்த மதிமுகவுக்கு இதை விட மகிழ்ச்சியான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ஸ்டெர்லைட்-ஆலை-தொடர்பான-2/

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

 

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 
அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்வரை தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆலையை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை கொண்டாடினர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

815 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் முழு விவரம் இன்று பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/08/18111838/1800989/Thoothukudi-people-burst-firecrackers-after-verdict.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

117946540_326176248502160_976438404123467773_o.jpg?_nc_cat=103&_nc_sid=dbeb18&_nc_ohc=xndvZqOKwtwAX_pl4jL&_nc_ht=scontent-frt3-2.xx&oh=0bfaf5647dcd72bf330524a9df56aaee&oe=5F635C2F

 

118121234_3285720294855402_5910002846005838978_o.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=tEVLdkdk0FQAX8-bwMk&_nc_ht=scontent-frt3-2.xx&oh=13d8ee70cd0c189d26a5f51c75309d48&oe=5F6081FA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.