Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gana.jpg

ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர்

பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால்  நான் கடத்தப்பட்டேன் என அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரான  வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் வசிக்கும் விகாரையில் இருந்த அரம்பேபொல ரதனசார தேரர், இனந்தெரியாத குழுவினரினால் தாக்கப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற அரம்பேபொல ரதனசார தேரரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை மையமாக வைத்தே அண்மையில் நான் கடத்தப்பட்டேன்.

அதாவது, கல கொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோர் என்னை கடத்திச் சென்று, துப்பாக்கியால் தாக்கினார்கள்.

 அதனால்தான்  எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் பல இடங்களில் தடுத்து வைப்பதற்காக, கட்சி செயலாளர்கள் குறித்து விசாரித்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ஞானசார-தேரர்தான்-என்னை-க/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில மொடடைகள் எல்லாம் ஒரு மார்க்கமா திரியினம். அதிலும் இந்த ஞானசார தேரர் கொஞ்சம் வில்லங்கம் பிடிச்ச ஆள்.

உள்ள வேற இருந்து போட்டு வந்தவர்.....

கடத்திக் கொண்டு போனவர் ஏதாவது ஏடாகூடமா செய்திருப்பாரோ தெரியவில்லை. காயம் வார அளவுக்கு எண்டால்..... கொஞ்சம் கவலை தான்.

எதுக்கும் டாக்குதர் ஐயாவிடம் காட்டுங்கோ...

சீதை தீக்குளிச்ச மாதிரி, நீங்களும் தீக்குளிச்சா தான் நாங்க நம்புவோம், ஞானசாரர்  நல்ல மனிசன் எண்டு.😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

இலங்கையில மொடடைகள் எல்லாம் ஒரு மார்க்கமா திரியினம். அதிலும் இந்த ஞானசார தேரர் கொஞ்சம் வில்லங்கம் பிடிச்ச ஆள்.

உள்ள வேற இருந்து போட்டு வந்தவர்.....

கடத்திக் கொண்டு போனவர் ஏதாவது ஏடாகூடமா செய்திருப்பாரோ தெரியவில்லை. காயம் வார அளவுக்கு எண்டால்..... கொஞ்சம் கவலை தான்.

எதுக்கும் டாக்குதர் ஐயாவிடம் காட்டுங்கோ...

சீதை தீக்குளிச்ச மாதிரி, நீங்களும் தீக்குளிச்சா தான் நாங்க நம்புவோம், ஞானசாரர்  நல்ல மனிசன் எண்டு.😉

ஞானசார தேரர்....   துவக்கு 🔫   வைத்திருப்பதால்,

ரதனசார தேரர்.... நடந்த விசயங்களை மறந்து விட்டு, “கம்முன்னு” இருக்கிறது தான் சிறந்த வழி. 😄

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஞானசார தேரர்....   துவக்கு 🔫   வைத்திருப்பதால்,

ரதனசார தேரர்.... நடந்த விசயங்களை மறந்து விட்டு, “கம்முன்னு” இருக்கிறது தான் சிறந்த வழி. 😄

எங்கண்ட மட்டக்கிளப்பு தூசண பிக்கர் தேர்தலில் தோத்துப் போனார் எண்டது சரியான கவலை பாருங்கோ.

ஆளை பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருந்தா, அந்தாள் உருக்கொண்டிருந்தால், மகிந்தா, இரண்டு காதையும் பொத்திக் கொண்டு ஓடி இருப்பார். 

மட்டக்கிளப்பு சனம் பிழை விட்டுடுது.

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த தேசியவாதத்தை பாதுகாக்க பாராளுமன்றம் செல்ல வேண்டிய தேவை இல்லை - அத்துரலிய ரத்ன தேரர்

(இராஜதுரை ஹஷான்)

 பௌத்த தேசியவாதத்தை  பாதுகாக்கவும்,  கட்டியெழுப்பவும்  பாராளுமன்றம்   செல்ல வேண்டிய தேவை  எமக்கு   கிடையாது.  நான் கடத்தப்பட்டதாகவும்,  தலைமறைவாகியுள்ளதாகவும்  பிரதான  ஊடகங்களில் வெளியாகும்   செய்திகள் முற்றிலும் தவறானது தேசிய பட்டியல் ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு  சட்டரீதியில் முரண்பாடற்ற தீர்வை பெற்றுக் கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே  ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அபேஜன பலவேகய கட்சிக்கு  கிடைக்கப் பெற்ற  ஒரு தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில்  பிரச்சினை  தோற்றம் பெற்றுள்ளது. இல்லாத பிரச்சினைகளை பிரதான ஊடகங்கள் பெரிதுப்படுத்தி தங்களை பிரபல்யப்படுத்திக் கொண்டார்கள்.  தேசிய பட்டியல்  முரண்பாட்டினால்  நான் தலைமறைவாகி விட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும்   போலியான செய்திகபளை வெளியிடுவதை முதலில் இந்த பிரதான ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பௌத்த தேசியவாதத்தை  பாதுகாக்கவும், கட்டியெழுப்பவும்     பாராளுமன்றம் செல்ல  வேண்டிய தேவை  கிடையாது.     பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டோம். 67ஆயிரம் மக்களின்  ஆதரவினால் ஒரு தேசிய   பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனாலேயே  தற்போது முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளது.

 அபேஜனபல வேகய அமைப்பில் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிட்டோம். கூட்டணியின் பொதுச்செயலாளராக  நான்  செயற்படுகிறேன் ஆகவே தவறான தரப்பினர் தேசியபட்டியல் ஆசனத்தை கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது. சட்ட வழிமுறை ஊடாக  பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற விதத்தில் தீர்வை  பெற்றுக்கொள்வேன் என்றார்.

https://www.virakesari.lk/article/88292

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

ஆளை பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருந்தா

    அந்தாள் உருட்டுகட்டையோடதான் பாராளுமன்றம் போய் பேசியிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.