Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானைத் தொடர்ந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கும் நாடாளுமன்றம் செல்ல அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

premlal.jpg

பிள்ளையானைத் தொடர்ந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கும் நாடாளுமன்றம் செல்ல அனுமதி

கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட எச்.எல்.பிரேமலால் ஜயசேகரவிற்கும் நாளை ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார்.

தற்பொழுது தடுப்புக் காவலில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) நாடாளுமன்றில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எல்.பிரேமலால் ஜயசேகரவுக்கும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருப்பதாக நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருப்பதாகவும் இதுகுறித்து படைக்கல சேவிதர் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட எச்.எல்.பிரேமலால் ஜயசேகர ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 37 வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பிள்ளையானைத்-தொடர்ந்து-ம/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாராளுமன்றம், நீதிமன்றம், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாமே கேலிக்கூத்தாகி விட்டது. நீதிபதி யோசித்திருப்பார் நான் என்ன தண்டனை கொடுத்தாலும் ஜனாதிபதி சம்பந்தப்பட்டவரை விடுவித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுப்பார். தான் எதுக்கு நேரத்தை வீணாக்குவான்? தானே அனுமதியை வழங்கி விட்டால் தனக்கும் பாதுகாப்பு என்று.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

இலங்கை பாராளுமன்றம், நீதிமன்றம், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாமே கேலிக்கூத்தாகி விட்டது. நீதிபதி யோசித்திருப்பார் நான் என்ன தண்டனை கொடுத்தாலும் ஜனாதிபதி சம்பந்தப்பட்டவரை விடுவித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுப்பார். தான் எதுக்கு நேரத்தை வீணாக்குவான்? தானே அனுமதியை வழங்கி விட்டால் தனக்கும் பாதுகாப்பு என்று.

இன்னும் 5 வருடங்களில் மகி & கோவின் தர்பார் ஆட்சிதான், 5 வருடத்திற்குள் சிங்கள மக்கள் விழித்தொழ முதல் அவர்கள் 25வருடத்திற்கு ஆட்சி செய்ய வழி வகுத்திருப்பார்கள், இனி மீட்சியில்லை, அதிசயம் ஏதாவது நடந்தால் ஒழிய

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஒரு சட்டத்தை மாற்றி தமக்கு சாதகமான சட்டத்தை ஏற்படுத்துவார்கள். அடுத்து வாறவர்கள் அதனை மாற்றி தமக்கேற்றதாய் உருவாக்குவார்கள். போனமுறை மகிந்தா ஜனாதிபதியாக இருக்கும்போது நாமலை ஜனாதிபதியாக ஏற்படுத்தும்வரை தான் ஜனாதிபதியாக இருக்குமாறு சட்டத்தை மாற்ற  எண்ணி அவசரப்பட்டு முந்தி தேர்தலை வைத்ததால் கைநழுவி, வேறொரு சட்டம் இயற்றப்பட்டது. இது மாதிரி நிலைமை மாறலாம், அரசியற் புரட்சி வரலாம். இவருக்கு நிகராக இன்னொருவர் தோன்றாமலா இருப்பார்? எல்லாம் இராணுவ மயம் காட்சிகள் மாறலாம், அண்ணன் தம்பிகள் அடிபடலாம். முஷாரப் பாதுகாப்பு தேடி இன்னோர் நாட்டில் அடைக்கலம் போவேன் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? ஐந்து வருடத்துக்கு முன்னும் நிலைமை மாறலாம். யார் கண்டார்?

இப்படி பேசி , இப்படி எழுதி  சமாதானமடைவோம். தமிழனுக்கு வேறு வழி எது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.