Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 வது அரசியல் யாப்புத் திருத்த வரைவு தயார் – 19 இல் பாரிய மாற்றங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 வது அரசியல் யாப்புத் திருத்த வரைவு தயார் – 19 இல் பாரிய மாற்றங்கள்

 

இலங்கையின் அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவு தயார் செய்யப்பட்டு நீதியமைச்சினால், வர்த்தமானி மூலம் இன்று பொது அறிவிப்பிற்கு விடப்படுகிறது. இதில், 19 வது திருத்தத்திலுள்ள முக்கிய அம்சங்கள் பல மாற்றப்படுகின்றன என அறியப்படுகிறது.

இவ் வரைவில் முன்மொழியப்பட்ட முக்கிய மாற்றங்கள்:

அரசியலமைப்புச் சபை (Constitutional Council)

அரசியலமைப்புச் சபை (Constitutional Council) பாராளுமன்றச் சபை (Parliamentary Council) எனப் பெயர் மாற்றப்படுகிறது. தற்போது இருக்கும் அரசியலமைப்புச் சபையில் 10 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பரிந்துரைக்கப்படும் ஐவர் (நியமன உரிமை ஜனாதிபதிக்குண்டு), பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரியப்படும் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி அல்லாத கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் எனப் 10 பேர் அடங்குவர். இதில் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பரிந்துரைக்கும் 5 பேரில் மூவர் வெவ்வேறு சபைகளை அல்லது பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 3 வருட தவணையைக் கொண்ட இப்பதவிகளில், ஆரம்பத்தில் (2015-2018) ஏ.ரி.ஆரியரத்னா (சிங்களவர்), ராதிகா குமாரசாமி (தமிழர்) மற்றும் சிப்லி அசிஸ் (முஸ்லிம்) ஆகியோர் இருந்தார்கள். பின்னர் (2018-2021), ஜயந்த தனபால, நாகநாதன் செல்வகுமாரன், ஜாவிட் யூசுஃப் ஆகியோர் இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

பாராளுமன்றச் சபை (Parliamentary Council)

புதிதாக மாற்றீடு செய்யப்படும் பாராளுமன்றச் சபையில் 5 பேர் மட்டுமே அடங்குவர். இதில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவரால் பரிந்துரைக்கப்படும் ஒருவர் ஆகியவர்கள் அடங்குவர். பரிந்துரைக்கப்படும் இருவரும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள்

19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி எந்தவித அமைச்சுப்பதவிகளையும் வைத்திருக்க முடியாது மட்டுமல்ல அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருந்தது. 20வது திருத்த வரைவில், ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்கலாம் என்பது மட்டுமல்ல அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும் உள்ளது.

https://marumoli.com/இலங்கை-20-வது-அரசியல்-யாப்ப/?fbclid=IwAR0hqe2lqangEoHEgBuPTqdi46VLUJ0888LOkDKiIy6uw-jBm2MlAPOmC48

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியை எதிர்ப்போம்; சுமந்திரன் அறிவிப்பு

sumanthiran-500.png

 

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு – ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“எமக்கு முன்பாக பாரிய சவால் உள்ளது. எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமென மார்தட்டினோமோ, அவர்கள் அதைவிட மோசமான விதத் தில், அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள னர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரே தேர்தலில் பெற்றுள்ளனர். யுத்த வெற்றிக்கு பின்னர் வந்த 2010 தேர்தலில் கூட, மூன்றில் இரண்டை பெறவில்லை. பின்னர் பணம்கொடுத்து பெற்றனர். எங்களது பலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இப்போது புதிய அரசமைப்பை உருவாக்க அரசு முயற்சிக்கிறது. அதற்கு முன்னதாக 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து, 20 ஆவது திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மிக விரைவாக அதை செய்கிறார்கள். சட்டமா அதிபருக்கு வரைவைச் சென்ற வாரமே அனுப்பி விட்டனர். சட்டமா அதிபர், சர்வஜனவாக் கெடுப்பின்றி நிறைவேற்றக்கூடியது எனத் தனது கருத்தைச் சொல்லியுள்ளார்.

2015ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர நான்கைந்து மாதங்களுக்கு மேல் சென்றது. அது 18 ஆவது திருத்தத்தை அகற்றி, 17ஆவது திருத்தத்தை கொண்டு வருவதுதான். ஆனால் நான்கைந்து மாதங்கள் எடுத்தது. இவர்களுக்கு நான்கைந்து வாரங்கள் கூடத் தேவையில்லை. சிலருக்கு சரியானதைச் செய்வதற்கு பயம். இவர்களுக்கோ பிழையானதை செய்யவும் பயமே கிடையாது. அப்படியான அரசையே எதிர்கொள்கிறோம்.”

http://www.ilakku.org/19-ஆவது-திருத்தத்தை-இல்லாத/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.