Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவால்னி விவகாரத்தில் ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் கடலடி குழாய் திட்டம் கைவிடப்படும்: ஜேர்மனி எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Navalny-poisoning-Merkel-says-Russian-opposition-leader-was-victim-of-attempted-murder-as-lab-identifies-Novichok.jpg

நவால்னி விவகாரத்தில் ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் கடலடி குழாய் திட்டம் கைவிடப்படும்: ஜேர்மனி எச்சரிக்கை

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், விசாரணைகளுக்கு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும் என ஜேர்மனி எச்சரித்துள்ளது.

அலெக்ஸி நவால்னி விவகாரத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவரும் ஜேர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் இதுகுறித்து கூறுகையில்,

‘நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷ்யா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால், அந்த நாட்டுடன் மேற்கொண்டுள்ள ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும்.

அந்த திட்டம் தொடர்பான எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு ரஷ்யா எங்களைக் கொண்டு செல்லாது என்று நம்புகிறேன். நவால்னி விவகாரத்தில் நாங்கள் விரைவில் தொடங்கவிருக்கும் விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், கடலடிக் குழாய் திட்டத்தில் தொடர்புடைய மற்ற நாடுகளுடன் இதுதொடர்பாக நாங்கல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும்’ என கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவர்களில் முக்கிய தலைவரான 44 வயதான அலெக்ஸி நவால்னி, அதற்காக பல முறை சிறை சென்றுள்ளார்.

ஏற்கெனவே, அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், புடினை எதிர்த்துப் போட்டியிட அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், அலெக்ஸி நவல்னி, கடந்த 20ஆம் திகதி சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குடித்த சூடான திரவத்தில் விஷம் கலந்திருப்பதாக சந்கேதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அலெக்ஸி நவல்னியின் குடும்பத்தினர், ரஷ்யாவில் நவல்னியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அவரை ஜேர்மனிக்கு கொண்டு செல்ல விரும்பினர். தற்போது ஜேர்மனியில் பெர்னிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனிடையே, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவான்லியின் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் பெர்லின் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அலெக்ஸிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

http://athavannews.com/நவால்னி-விவகாரத்தில்-ரஷ்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

நவால்னி விவகாரத்தில் ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் கடலடி குழாய் திட்டம் கைவிடப்படும்: ஜேர்மனி எச்சரிக்கை

ஜேர்மனிக்கு தேவையில்லாத வேலை....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனிக்கு தேவையில்லாத வேலை....

நவால்னிக்கு ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கபட்ட நஞ்சே கொடுக்கபட்டுள்ளது.
நீங்கள் நினைபது மாதிரியே எமது பிரச்சனையிலும் எங்களுக்கு தேவையில்லாத வேலை என்று நாடுகள் நினைக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நவால்னிக்கு ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கபட்ட நஞ்சே கொடுக்கபட்டுள்ளது.
நீங்கள் நினைபது மாதிரியே எமது பிரச்சனையிலும் எங்களுக்கு தேவையில்லாத வேலை என்று நாடுகள் நினைக்கின்றன.

அப்பிடி தேவையில்லாத வேலை எண்டு நினைக்கிற மேலைத்தேய நாடுகள் என்னத்துக்கு தமிழரை அழிக்க ஆயுதங்கள் குடுத்தது?
இல்லாட்டி புறா சுட குடுத்ததாய் இருக்குமோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நவால்னிக்கு ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கபட்ட நஞ்சே கொடுக்கபட்டுள்ளது.
நீங்கள் நினைபது மாதிரியே எமது பிரச்சனையிலும் எங்களுக்கு தேவையில்லாத வேலை என்று நாடுகள் நினைக்கின்றன.

ஆனால் யாரால் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்துத் தெளிவில்லாத நிலையே நீடிக்கிறது. ☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.