Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீர்விட்டு அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அற்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது- மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மாவை சேனாதிராசா தோல்வி! - Today Jaffna News - Jaffna Breaking News  24x7

கண்ணீர்விட்டு அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அற்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது- மாவை

எங்களுக்கு கண்ணீர்விட்டு அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அற்ற நிலைமை தற்போது, நாட்டில் ஏற்பட்டுள்ளதென இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘கோப்பாய் கோமகன்’ என்று அழைக்கபடுபவருமான அமரர் வன்னியசிங்கத்தின் 61ஆவது நினைவுதினம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதி தலைவர் அ.பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் மாவை சோ.சேனாதிராசா மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களின் போராட்டங்களை- விடுதலையை எதிர்கால சந்ததிகள் அறிய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோமோ என்று இருந்த நிலையில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நீதிமன்றத் தடையை பொலிஸார் பெற்றுக் கொண்டதன் ஊடாக, இளம் சமுதாயமும் உலக நாடுகளும் எங்களுடைய போராட்டங்கள் தொடர்பாக இங்கு நடந்தவையை அறிந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையாலும் சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகளினாலும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவர்களே, இந்த நாட்டை ஆளுகின்றார்கள். அவ்வாறான கட்டமைப்புக்குள்தான் நாம் வாழவேண்டிய நிலைக்குள் இருக்கின்றோம்.

எமது மக்களின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய  தியாக தீபம் திலீபனை நினைவேந்துவதற்கு இந்த அரசு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத் தடையைப் பெற்றுள்ளது. இந்த தடையினால் கண்ணீர்விட்டு அழுவதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் நோயினால் இறந்ததாக பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை இவர்கள் இப்படித்தான் கூறுவார்கள்.

இந்த நாட்டில் முதலில் ஆயுதம் எடுத்து போராடிய ஜே.வி.பி.யில் இருந்தவர்கள் தற்போது அமைச்சரவையில் இருக்கிறார்கள். இது மட்டுமன்றி விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறிப்பாக கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அரசுடன் உள்ளனர். அவர்கள் இன்று குற்றமற்றவர்களாம்.

20ஆவது திருத்தத்தின் மூலம் இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் வேளையில் எங்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள். நீதிமன்ற தடைகள் மூலம் நீதியை எதிர்பாக்கும் எங்களுக்கு நீதியும் இல்லை, கண்ணீர்விட்டு அழுவதற்கும் எங்களுக்கு வழியும் இல்லாத நிலையில் வாழுகின்றோம்.

அமரர் வன்னிய சிங்கம் போன்றவர்கள் ஒற்றுமையாக இருந்து மக்களின் விடுதலைக்காக போராடியவர். அவர் வழியில் நாமும் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையை அடைய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கண்ணீர்விட்டு-அழுவதற்கு/

அப்ப கடந்த 5 வருடமாக என்ன செய்தீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 14:04, செண்பகம் said:

அப்ப கடந்த 5 வருடமாக என்ன செய்தீர்கள்

அப்போ கண்ணீர் வரவில்லை, இப்போ விழுந்த அடி தாங்க முடியாமல் அழ நினைக்கிறோம். முடியல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.