Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகம் ஒன்றில் தனது நடிப்பை வெளிப்படுத்திய பிள்ளையான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகம் ஒன்றில் தனது நடிப்பை வெளிப்படுத்திய பிள்ளையான்!

September 21, 2020
9E54A2B0-3D79-4784-A695-95F109FEC151-114

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யுத்தத்தின் இறுதியில் நடந்தது தொடர்பான செய்தியைக் கேட்ட பின்னர் மிகவும் வேதனையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

2009 போர் களத்தில் கருணா, பிள்ளையான் , மற்றும் சில ஒட்டுக்குழுக்கள் நேரடியான பங்கேடுத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இன்று பிள்ளையான், கருணா போன்றோர் தமக்குக்கு சம்மந்தம் இல்லாததைப் போன்று அரசியலுக்கான தமிழ்மக்கள் முன் தமது நடிப்பை வெளிக்காட்டுகின்றனர்.

 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தலைவர் மறைந்த செய்தியை கேட்டதும் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன், மதியம் மற்றும் இரவில் உணவருந்த கூட முடியாமல் மிகவும் கவலையாக இருந்தது. இது ஒரு இயல்பான விடயம். என்னதான் எதிரியாக இருந்தாலும் அவர்களது இறப்பில் கவலைகொள்வது சாதாரணமான விடயம். அது இயல்பு.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகுவதாக அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் என்னை அழைத்துப் பேசியிருந்தார். பிள்ளையான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் போல இருக்கு, நாங்கள் தனியாக இயங்குவது பற்றி யோசிக்கலாம் என தெரிவித்தார்.

 

அதற்கு நான், நீங்கள் முடிவு எடுத்தால் அதற்கு நான் உடன்படுகின்றேன். ஆனால் அந்த முடிவு ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டு, நிரந்தரமாக பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால் எல்லாமே முடிந்து போய்விடும். எனவே கவனமாக முடிவெடுங்கள் என நான் தெரிவித்தேன்.

அதன் பின்னர் சில தினங்களில் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து விட்டதாக ஊடகங்களில் பார்த்தவுடன் மிகவும் வேதனையடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தமுறை நடந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். கடந்த காலங்களில் எனது செயற்பாட்டை மக்கள் நம்பியிருக்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடே இந்த முறை எனக்கான வெற்றி.

கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நான் பழிவாங்கப்பட்டேன். இதனை உறுதியாக கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
 

https://www.meenagam.com/?p=14575

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளையாக பக்கத்தில் 108 ஒம்புலென்ஸ் இருந்ததால் தப்பித்து போட்டார்..😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

தலைவர் மறைந்த செய்தியை கேட்டதும் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன், மதியம் மற்றும் இரவில் உணவருந்த கூட முடியாமல் மிகவும் கவலையாக இருந்தது.

இஞ்சை....இஞ்சை பாருங்கோ புல்லரிக்குது...tw_glasses:

புல்லரிக்கும் நேரங்களில் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.