Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு பெருமளவு ஆயுததளபாடங்களை வழங்க இந்தியா திட்டம்-பாதுகாப்பு தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர் கடனையும் வழங்குகின்றது

Featured Replies

இலங்கைக்கு பெருமளவு ஆயுததளபாடங்களை வழங்க இந்தியா திட்டம்-பாதுகாப்பு தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர் கடனையும் வழங்குகின்றது

இலங்கையின் பாதுகாப்புதுறைக்கு 50மில்லியன் கடனை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து சமுத்திரபிராந்தியத்திலும் வங்களாவிரிகுடாவிலும் சீனாவின் அபிலாசைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த பகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வருப்படுத்துவதற்கு சனிக்கிழமை உச்சிமாநாட்டில் தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்தியாவின் இலங்இலங்கை பாதுகாப்பு துறையை நோக்கி இந்த சைகை அமைந்துள்ளது என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


கடனடிப்படையில் இலங்கைக்கு ஆயுததளபாடங்களை வழங்குவதற்கானதிட்டம் புதுடில்லியிடம் உள்ளது என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் இலங்கையின் பாதுகாப்பு தரப்பிற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டமும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படைக்கு அதன் தேவையை அடிப்படையாக கொண்டு விநியோகங்களை வழங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ள எகனமிக்ஸ் டைம்ஸ் இலங்கையின் பாதுகாப்புபிரிவுகளுக்கு ஆயுததளபாடங்களை வழங்குவதற்கான திட்டமுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

காணொளி மூலமாக இடம்பெற்ற உச்சிமாநாட்டின் பின்னர்இரு பிரதமர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இருநாடுகளினதும் பாதுகாப்பு தரப்பினர் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர தனிப்பட்ட விஜயங்களை முன்னெடுப்பதற்கும் ,கடல்சார் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கும், இலங்கையின் பாதுகாப்பு துறைக்கு ஆதரவளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுஎன இந்திய ஊடகம்சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கையின் ஜனாதிபதியாக 2019 இல் தெரிவு செய்யப்பட்டது முதல் கோத்தபாய ராஜபக்ச இந்தியாவுடன் இணைந்து இந்து சமுத்திரம் மற்றும் வங்காளவிரிகுடாவில் இலங்கையின் கடல்சார்கொள்கையை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்திவருகின்றார்எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புகளுக்கு இராணுவபின்னணி கொண்டவர்களை கோத்தபாயராஜபக்ச நியமித்துள்ளார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு நலன்களுக்குபாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது,கொழும்பு கடல்பயண சுதந்திரத்தை பின்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு தொடர்பான கடனை பெறும் இரண்டாவது நாடாக இலங்கை மாறலாம் சில வருடங்களுக்கு முன்னர் பங்களாதேசிற்கு வழங்கிய 500 மில்லியன் பாதுகாப்பு கடன் குறித்து இந்தியா நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


இந்தியாவின் வெளிநாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கான பயிற்சியில் 50 வீதம் இலங்கை படையினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும்இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கிய அம்சம் எனவும்இந்திய ஊடகம்தெரிவித்துள்ளது.
இதுதவிர தொடர்;ச்சியாகஉயர்மட்ட சந்திப்புகளும்,விஜயங்களும்,கூட்டு ஒத்திகைகளும்,கப்பல்விஜயங்களும் இடம்பெறுகின்றன.
2019 உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதமயப்படுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட வலுவான பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை உருவாக்கும் திட்டங்களும் இரு நாடுகளுக்கும் உள்ளன என எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நடுக்கடல் தொடர்பான புலனாய்வு தகவல்களை இருநாடுகளும் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் இதன்காரணமாக இலங்கையில் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கும் போதைப்பொருள் மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

http://thinakkural.lk/article/73485

  • கருத்துக்கள உறவுகள்

"பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி.."

maxresdefault.jpg முட்டுற நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்..👍

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, செண்பகம் said:

இலங்கைக்கு பெருமளவு ஆயுததளபாடங்களை வழங்க இந்தியா திட்டம்-பாதுகாப்பு தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர் கடனையும் வழங்குகின்றது

ரொம்பத்தான் வழியுது இந்தியா எனும் வல்லரசு.   சீனாவோடு  சேர்ந்து தன்னை தாக்கச் சொல்லி கடன் கொடுக்கிறாரோ, எனது உதவி கொண்டு நீங்கள் என்னைத் திருப்பித் தாக்கினாலும், உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என்று சொல்லாமல் சொல்கிறாரோ? எது என்னவோ?  சொந்தச் செலவில் தனக்குத் தானே சூனியம் வைக்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.