Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமியில் காணாமல் போன மகனுடன் மீண்டும் இணைந்த தாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 04:38 - 0     - 51

பாறுக் ஷிஹான்

2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தனது மகனை இழந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், 16 வருடங்களுக்கு பின்னர் மகனைக் கண்டுபிடித்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தில் 05 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது 21) எனும் இளைஞனே 16 வருடங்களின் பின்னர் இவ்வாறு தனது தாயாருடன் இணைந்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் போது சிற்றூழியராக வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்ததாகவும்  வீடு சென்று பார்த்த போது தனது மகனைக் காணாது கதறியதாக, அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்தார்.

எனினும், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று தனது மகன் தன்னுடன் இணைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது விடா முயற்சியால், அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில், மகனின் சிறுபாராய புகைப்படத்துடன் மகனைத் தேடி அலைந்தமையால் மகன் படிக்கும் பாடசாலையைக் கண்டறிந்ததாகவும் சிங்களப் பாடசாலையொன்றில், நான் பெயரிட்ட அதே பெயருடன் மகன் கல்வி கற்றுக்கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று விரும்பி என்னுடன் வந்து இணைந்துள்ள எனது மகனை வளர்த்தவர்கள் எப்போதும் எந்த நேரமும் மகனை சந்திப்பதற்கு வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்யப் போவதில்லை எனவும் மேலும் கூறினார்

http://www.tamilmirror.lk/அம்பாறை/சனமயல-கணமல-பன-மகனடன-மணடம-இணநத-தய/74-256055

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இந்த "தாய்"  தாய் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

காணாமல் போன மகனை கண்டுபிடித்த விவகாரம்; பெரும் குழப்பம் – பொலிஸார் விசாரணை!

2004ம் ஆண்டு சுனாமியின் போது காணாமல் போய் 16 வருடங்களுக்கு பின்னர் தமது பிள்ளையை கண்டறிந்துள்ளதாக சம்மாந்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் ஊடகங்களிடம் வெளியிட்ட கருத்து தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பிள்ளையை வளர்த்தாக கூறப்படும் அம்பாறை – புத்தங்கல பகுதியை சேர்ந்த நூரல் இன்சான் என்ற (42-வயது) பெண் எம்மாந்துறை பொலிஸில் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், சுனாமியின் போது காணமால் போன தனது மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டறிந்துள்ளதாக அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

சம்மாந்துறை – மாளிகைக்காடு பகுதியில் சுனாமி தாக்கிய வேளை, 5 வயதாக இருந்த ராஸீன் மொஹமட் அக்ரம் ரிஸ்கான் என்ற தமது மகன் காணாமல் போனதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் தமது மகனை கண்டறிந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் மற்றும் புத்தங்கல பகுதியை சேர்ந்த பெண்ணும் இன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவே அவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் குறித்த சிறுவன் காணாமல் போன தனது மகன் என கூறிய பெண்ணையும் இன்று பொலிஸில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை உண்மையான தாய் யார் என உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ தரப்பு தெரிவித்துள்ளது.

https://newuthayan.com/காணாமல்-போன-மகனை-கண்டுபி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.