Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான் தூதர் மட்டு விஜயம் சீயோன் தேவாலய குண்டு தாக்குதலில் உயிரிழந்தவருக் அனுதாபம் தெரிவிப்பு

Featured Replies

ஜப்பான் தூதர் மட்டு விஜயம் சீயோன் தேவாலய குண்டு தாக்குதலில் உயிரிழந்தவருக் அனுதாபம் தெரிவிப்பு

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாநகரசப மற்றும் சீயோன் தேவாலயத்துக்கு ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி விஜயம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு பார்வையிட்டதுடன் மாநகரசபை திண்மக்கழிவு சமூக அபிவிருத்திக்கு உதவுவதாகவும் சீயோன் தேவாலயத்தில் குண்டுதாக்குதலுக்கு உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்தார் .

மட்டக்களப்புக்கு விஜயம் மேற் கொண்ட ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி முதலில் மட்டு மாநகர மேஜர் ரி. சரவணபவனுடனான சந்திப்பு இடம்பெற்றது இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்தி எவ்வாறு நடைபெறுகின்றது மற்றும் சவாலக இருக்கின்ற விடயங்கள் வளபற்றாக்குறை தேவையான விடயங்கள் தொடர்பாக தூதுவர் கேட்டறிந்து கொண்டதுடன் எங்களுக்கு சவாலக இருக்கின்ற விடயங்களான கழிவு அகற்றல் செயற்பாடு இதனை ஜப்பான் எங்களுடன் சேர்ந்து செயற்படுவது தொடர்பாகவும் மற்றும் தீயணைப்பு பிரிவை பலப்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பின்னர் அவர் திண்ணமக்கழிவு அகற்றலுக்கான வாகன வசதி, தீயணைப்பு பிரிவுக்கான வசதிகள் மற்றும் ஜப்பானிய தூதரகத்தினூடாக சமூக அபிவிருத்தி திட்டத்துக்காக எங்களுடன் சேர்ந்து இயங்குவதாக தூதுவர் இனக்கம் தெரிவித்துள்ளார் என மட்டு மாநகரசபை மேஜர். ரி.சரவணபவன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உயிர்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்ற சீயோன் தேவாலயத்துக்கு சென்று அங்கு குண்டுதாக்குதலால் சேதமடைந்த கட்டிடங்களையும் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிட நிர்மானத்தையும் பார்வையிட்டார் பின்னர் இந்த குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் குடும்பங்களை இழந்தவர்களுக்கும் அவருடைய ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்ததுடன் இவ்வாறான அனர்தங்கள் இனிமேல் உண்டாவதை தடுக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாக சீயோன் தேவாலய பாஸ்டர் ரோசான் தெரிவித்தார்.

 

http://thinakkural.lk/article/74233

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானின் சிறீலங்காவிற்கான உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பு பயணம்

 

ஜப்பான் நாட்டின் சிறீலங்காவிற்கான உயர் ஸ்தானிகர் அகிரா சுகியாமா(  H.E. Akira Sugiyama) இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாராஜா சரவணபவன் உயர் ஸ்தானிகரை வரவேற்றதோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலமைகள் தொடர்பிலும், மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மாநகர சபையினால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் அவற்றை முன்னெடுப்பதற்கான நிதி அனுசரணைகள் இல்லாமை தொடர்பிலும் மாநகர முதல்வரால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் நிர்மானத்துறை சார்ந்து மட்டக்களப்பு நகரிலிருந்து பெரியகளம் தீவுக்கான பாலம் அமைப்பதற்கும், இலங்கைத் தமிழர்களின் வரலாறுகளையும், தொல்லியல் உண்மைகளையும் எதிர்காலச் சந்ததியினருக்கு கற்பிக்கும் வகையில் ஓர் முப்பரிமான கலையரங்கம் ஒன்றினை அமைப்பதற்குமான திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் மாநகர தீயணைப்பு சேவையினை விஸ்தரித்து வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்கும், கழிவகற்றல் வசதிகளுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கும் ஜப்பான் நாட்டின் உதவியினை எதிர்பார்ப்பதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையுடனான தமது உறவினை புத்தாக்கம் செய்துகொள்வதற்குரிய நல்ல வாய்ப்பாக இதனை கருதுவதோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்திக்கும், உட்கட்டுமானம் உள்ளிட்ட நிர்மானத்துறை சார் பணிகளுக்கும் ஜப்பான் தயாராக உள்ளதாகவும் எதிர்காலத்தில் இத்திட்டங்களை மேற்கொள்ள சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் இதன்போது ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மற்றும் ஜப்பான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில், உயிர்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை அவர் தெரிவித்தார் . மேலும் இந்த குண்டு தாக்குதல் போன்ற சம்பவங்கள் இன்மேல்  நடக்காமல் தடுக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து செயற்படுவதாக  தெரிவித்து்ளளார்

 

http://www.ilakku.org/ஜப்பானின்-இலங்கைக்கான-உய/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.