Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா? ஆரம்பமானது பேச்சு

Featured Replies

திருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா? ஆரம்பமானது பேச்சு

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து இப்போது பேசுவது பொருத்தமில்லை. இது பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. இந்திய தூதரகமும் எம்முடன் ஒத்துழைக்கின்றனர். இந்த எண்ணெய்க் குதங்கள் லங்கா IOC நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளன.

எனினும், இது இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தும். அத்துடன், அரசியல் ரீதியான முக்கியத்துவம் இதில் காணப்படுகிறது.

ஆகவே, நாம் முதலில் இந்திய அரசாங்கத்துடன் பேச வேண்டும். பின்னர் குறித்த நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எம்மால் முடியும்” என்றார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்திலும் இந்த எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அது தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/151413

14 minutes ago, செண்பகம் said:

“திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹாஹா இந்தியாவிடம் இருந்து எடுத்து சீனாவிடம் 99 வருடத்துக்கு வழங்குங்கோ. அப்ப தான் மோடி மாமா இன்னும் கோடிக்கணக்கில் உதவிகளை அள்ளி வழங்குவார்!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, puthalvan said:

ஹாஹா இந்தியாவிடம் இருந்து எடுத்து சீனாவிடம் 99 வருடத்துக்கு வழங்குங்கோ. அப்ப தான் மோடி மாமா இன்னும் கோடிக்கணக்கில் உதவிகளை அள்ளி வழங்குவார்!

 இந்தியாவுக்கு சீனாவைக் காட்டி, காட்டி, மிரட்டி நல்லாய்  விபச்சாரம் செய்யுது இலங்கை.  இதில இந்தியா வல்லரசாம் பீத்திக்கொள்ளுது. அவ்வளவு தீராத காதல் இந்தியாவுக்கு, இலங்கை மீது. புலிகளை தோற்கடிக்க இந்தியா உதவாமல் இருந்திருந்தால், இப்படி வழிய வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்திருக்காது. எதை பார்த்து இந்தியா பயந்ததோ, அதைக் காட்டியே தனது கட்டுக்குள் வைத்திருக்குது இலங்கை. போடா! என்று தூக்கிப் போடவும் முடியாமல்,அணைக்கவும் முடியாமல் திணறுது, குடும்பம் நடத்துது வல்லரசு.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.