Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் விமான பலத்தை ஒழிக்க அமெரிக்கா - இந்தியா வழங்கிய அறிவுறுத்தல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமான பலத்தை ஒழிக்க அமெரிக்கா - இந்தியா வழங்கிய அறிவுறுத்தல்கள்

[07 - June - 2007]

ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காகவும் அதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காகவும் அண்மையில் ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுனர்களும் இந்திய பாதுகாப்பு வல்லுனர்களும் புலிகள் இயக்கத்தின் யுத்த பலத்தை ஒழிப்பதற்கு அரசு எடுக்கவேண்டிய உடனடியான நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுப் பட்டியல்களுடன் தமது பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை ஸ்ரீலங்கா அரசுக்கு சமர்ப்பித்துவிட்டதாக ஞாயிறு லங்கா தீபவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் புலிகள் இயக்கத்தின் யுத்த பலத்தை முக்கியமாக விமானத் தாக்குதல் பலத்தை ஒழிப்பதற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய யுத்த முறை பற்றியும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் உபகரணங்கள் பற்றியும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் எச்.பி.சி.சி. ஹவாய் - பசுபிக் கொமாண்ட் மத்திய நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு வல்லுனர்களும் அதிகாரிகளும் ஆய்வையும் மதிப்பீட்டைச் செய்து அறிவுறுத்தல் அறிக்கையை அரசுக்குக் கொடுத்துள்ளனர். இந்த அறிக்கையில் தாக்குதலுக்காக வரும் புலிகள் இயக்கத்தின் விமானங்களை வான் பரப்பில் வைத்தே தாக்கியழிக்கக்கூடிய விசேட வகையான ஹெலிகொப்டர்கள், விமானங்கள் சிபாரிசு செய்யப்பட்டிருப்பதுடன் அத்தகைய தாக்குதலுக்கு எந்த வகையான மிசைல் ஏவுகணைகள் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமெரிக்க ஹவாய் பசிபிக் கொமாண்ட சென்ரர் மதிப்பீட்டு அதிகாரிகள் மேலும் தெரிவித்திருக்கும் அறிவுறுத்தல்களில் புலிகளின் விமானத்தாக்குதல்களை முறியடிக்க அதி நவீனமான யுத்த தொழில்நுட்பமே பயன்படுத்த வேண்டுமெனவும் இந்த வகையில் செலுத்துனர் இல்லாததும் பிந்திய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதுமான `றிமோட்' விமானங்களையே ஷ்ரீலங்கா விமானப்படை பயன்படுத்தவேண்டுமெனவும் அறிவுறுத்தியிருப்பதுடன் தாக்குதலுக்கு வரும் புலிகளின் விமானங்கள் மீது குறித்த அதிநவீன றிமோட் விமானங்களை ஏவும் யுத்த நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மேற்குறிப்பிட்ட வான் தாக்குதல்களுக்காக இஸ்ரேல் நாட்டின் யுத்த தொழில்நுட்பங்களையும் யுத்த முறைகளையுமே மேற்படி அமெரிக்க எச்.பி.சி.சி. பாதுகாப்பு வல்லுனர்கள் அரசுக்குச் சிபாரிசு செய்து அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, புலிகளின் விமானத்தாக்குதல் உட்பட யுத்த பலத்தை ஒழிப்பதற்காக இந்திய பாதுகாப்புத்துறை வல்லுனர்களினால் செய்யப்பட்ட ஆய்வு மற்றும் மதிப்பீடுகளைத் தொடர்ந்து அவர்களால் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளிலும் அமெரிக்க எச்.பி.சி.சி. அதிகாரிகளால் செய்யப்பட்ட சிபாரிசுகளை ஒத்த அறிவுறுத்தல்களே வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்திய அரசு ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கவுள்ள பாதுகாப்பு உதவிகள் பற்றி அண்மையில் புதுடில்லி சென்ற ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்‌ஷவுக்கு விபரமாகவும், உத்தியோக பூர்வமாகவும் அறிவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

லங்காதீப:03/06/2007

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இருக்கின்றன...

அவைகளை உடனடியாக வாங்கிக்கொள்ளவும் என்று அறிவுரை...

லங்கா அரசுக்கு எதிரி புலிகள் அல்ல...

பொருளாதாரத்தைச்சீரழிக்கும் இத்தகைய யோசனைகள் தான்....

புலிகள் போரிட வேண்டும் என்ற அவசியம் இல்லை...

ராஜபக்ஸே அரசாங்கம் தொடர்ந்து இருக்க வேண்டும்...

கஜானாவை காலி செய்ய வேண்டும்...

அவர்களாகவே ஆப்பு வைத்துக்கொள்வார்கள்!

...

அதி நவீனமான யுத்த தொழில்நுட்பமே பயன்படுத்த வேண்டுமெனவும் இந்த வகையில் செலுத்துனர் இல்லாததும் பிந்திய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதுமான `றிமோட்' விமானங்களையே ஷ்ரீலங்கா விமானப்படை பயன்படுத்தவேண்டுமெனவும் அறிவுறுத்தியிருப்பதுடன் தாக்குதலுக்கு வரும் புலிகளின் விமானங்கள் மீது குறித்த அதிநவீன றிமோட் விமானங்களை ஏவும் யுத்த நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. ...

அமெரிக்காவின் இந்த புதிய தொழில்நுட்பத்தை பரீட்சித்துப் பார்க்க அமெரிக்காவுக்கு ஒரு புதிய களம் தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரோ,ஆப்கானியோ,ஈராக்கியோ கொல்லப்படுவதில் அமெரிக்காவுக்கு எந்த கவலையும் கிடையாது.அதாவது கொல்லப்படுபவர்கள் வெள்ளையாக இல்லாதவரை.

இவங்களுக்கு பின்லாடன் மாதிரியான ஆட்கள் தான் சரி

அப்பதான் உயிரின்ர பெறுமதி என்னெண்டு விளங்கும்

முதலில் செந்தப் பாதுகாப்பு. அதன்பிறகுதான் எதிரியின் பலத்தை அழித்தல் பற்றிய சிந்தனை. இந்திய அமெரிக்க ஆய்வுகள் எதிரிநிலையை அழிப்பதைப் பற்றியதைத்தான் சொல்லும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவுத் தளத்தின் பாதுகாப்புக்கு அன்று அமெரிக்காவால் அள்ளி வளங்கப்பட்ட இராணுவத்தொழில் நுட்பஅறிவின் மீதியை இப்போது விமானப்படையின் பாதுகாப்புக்கு வளங்கப் போகிறார்களாம், ஒருகட்டத்தில் சிங்களத்தை இப்படி நினைக்க வைக்கப் போகிறது தன் சொந்த அறிவில் செயற்பட்டிருந்திருந்தால் விளைவு இப்படி மோசமாய் இருந்திருக்க மாட்டாது என்பதை.

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.