Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 20இல் அறிவிப்பேன்’

Featured Replies

20 தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 20இல் அறிவிப்பேன்’

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானம் தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள சபாநயாகர் அலுவலகத்துக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்திருப்பதாகவும்,  திங்கட்கிழமை அலுவலகத்துக்குச் சென்று அதனை திறந்துப் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு இம்மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/I-will-announce-the-verdict-regarding-20-on-the-20th-of-this-month/150-256571

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உல்டா பண்ண நாள் தேவையோ..??!

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி முன்னால் தலை கவிழ்ந்த 20A எதிர்ப்பாளர்கள் – திருத்தம் நிறைவேறுவது உறுதி!
20வது திருத்தம் நிறைவேறுவது திண்ணம்

ஜனாதிபதி முன்னால் தலை கவிழ்ந்த 20A எதிர்ப்பாளர்கள் – திருத்தம் நிறைவேறுவது உறுதி!

 

20வது திருத்தம், மூன்றில் இரணு பெரும்பான்மையுடன் நிறைவேறுவது உறுதியாகிவிட்டது. இரண்டு நாட்களுக்குமுன் அலரி மாளிகையில் இத் திருத்தத்துக்கு எதிராகப் பொங்கியெழுந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்சவைக் கண்டதும் தமது எதிர்ப்புக்களை மீளப்பெற்றுக்கொண்டார்கள் எனக் கூறப்படுகிறது.

20வது திருத்தம் பாராளுமன்றத்தில் அமைச்சர் அலி சப்றியினால் சமர்ப்பிக்கப்பட்டபோது அகல உறுப்பினர்களுக்கும் இத் திருத்த வரைவு பற்றி அபிப்பிராயங்களைச் சொல்ல இடமளிக்கப்பட்டது. அப்போது பலர் தமது எதிர்ப்புக்களைக் காட்டிக் கூறிய கருத்துக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன.

இதற்குப் பதிலளித்து ஜனாதிபதி ராஜபக்ச பேசும்போது, தான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்றும், இத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை தனக்கு உண்டென்றும், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள மட்டுமே உள்வாங்கப்படும் எனவும் மிகவும் காட்டமாகத் தெரிவித்தார் என அறியப்படுகிறது.


 

ஜநாதிபதியின் இந்த கடுமையான போக்கினால், அமைச்சர்கள் விமல் வீரவன்ச, பிறேம்நாத் டொலவத்த ஆகியோர் தமது எதிர்ப்புக்களை விடுத்து, திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகவுள்ளார்கள் எனத் தெரிகிறது.

றிஷாட் பதியுதீனின் விடயத்தில், மூந்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற அவரது ஆதரவு என்றைக்குமே கோரப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

https://marumoli.com/ஜனாதிபதி-முன்னால்-தலை-கவ/?fbclid=IwAR3QBjoSZ1hc5Khh42ouPIWLbB-OLGZNx12ZZLScyXwSeIpuHLWyK-x-kV8

  • கருத்துக்கள உறவுகள்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னரே அடுத்த நகர்வு; அமைச்சர் கெஹலிய

 
keheliya.Rabukwella-696x348.jpg
 42 Views

“பௌத்த பீடங்களின் கோரிக்கை உட்பட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அடுத்தக் கட்ட நகர்வுகள் 20ஆம் திக திக்கு பின்னரே முன்னெடுக்கப்படும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்கசபை விடுத்துள்ள கூட்டறிக்கை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப் பட்டது. இதற்கு அவர் நேரடிப் பதிலை வழங்கவில்லை. மழுப்பல் போக்கில் பதிலளித்தார்.

“அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டவரைவை சவாலுக்குட்படுத்தி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரீசிலனை செய்த உயர்நீதிமன்றம் தனது சட்டவியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது. உயர்நீதிமன்றின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பார். சபாநாயகர் இவ்வாறு அறிவித்த பின்னரே 20 தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார்.

https://www.ilakku.org/உயர்-நீதிமக்றத்-தீர்ப்பு/

 

  • கருத்துக்கள உறவுகள்

20’ ஐ நிறைவேற்றுவதில் அரசுக்கு நெருக்கடி; திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்

 
20th.jpg
 45 Views

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மையை திரட்டுவதில் அரசு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஆரம்பத்தில் எதிர்ப்பார்த்ததுபோல் அல்லாமல் பல திருத்தங்களுடனேயே ‘20’ ஐ நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைத்தன. ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஈ.பி.டி.பிக்கு இரு ஆசனங்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஒரு ஆசனமும், தேசிய காங்கிரசுக்கு ஒரு ஆசனமுமாக ஆளுங்கூட்டணி வசம் 149 எம்.பிக்கள் இருக்கின்றனர்.

இதில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாக்கெடுப்பதில் சர்ச்சை நீடிக்கின்றது, சபாநாயகரும் நடுநிலை வகிக்ககூடும். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை (150) பெறுவதற்கு கட்டாயம் எதிரணி எம்.பிக்கள் சிலரின் ஆதரவு அவசியம்.

அதற்கான நடவடிக்கையில் தற்போது பஸில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார். அத்துடன், அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டவரைவை கைவிடுமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளதால் ஆளுங்கட்சியில் உள்ள கத்தோலிக்க எம்.பிக்களும் ‘20’ விடயத்தில் தாம் முன்பு எடுத்திருந்த முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபுறத்தில் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்களும் திருத்தங்கள் முன்வைத்துள்ளனர். எனவே, ஆரம்பத்தில் எதிர்ப்பார்த்தது போல் அல்லாமல் பல திருத்தங்களுக்கு மத்தியிலேயே அரசு ‘20’ ஐ நிறைவேற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது அரசுக்கான பின்னடைவாகவே கருதப்படுகின்றது. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பான உயர்நீதி மன்றத்தின் சட்டவியாக்கியானம் எதிர்வரும் 20 ஆம் திகதி சபாநாயகரால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும். 21,22 இல் விவாதம் நடத்தப்பட்டு 22 மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

 

https://www.ilakku.org/20-ஐ-நிறைவேற்றுவதில்-அரசுக/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.