Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

 
Ananthan.jpg
 34 Views

“இலங்கை தமிழர்களை இனியும் இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், அரசியல் தீர்வொன்றை நிலைபெறச் செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33ஆண்டுகளைக் கடந்துள்ளபோதும் தற்போது வரையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர்.

அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை நாடாளுமன்றில் கொண்டிருக்கின்றோம் என்ற இறுமாப்புடன் அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் காணப்படும் ஒரேயொரு ஏற்பாடான 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

விடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகரவே மாகாண சபை முறைமைகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவருவதோடு, இந்திய எதிர்நிலை வாதத்தினையும் தோற்றம்பெறச் செய்து வருகின்றார். அதேநேரத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

ஆனால் இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆட்சியில் உள்ளவர்கள் எந்தவிதமான பிரதிபலிப்பையும் செய்ததாக இல்லை. அதேநேரம் ஜனநாயக கட்டமைப்புக்களை தகர்த்து ஜனநாயக விழுமியங்களுக்கு மரணஅடி அளிக்கப்போகும் 20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முனைந்து கொண்டு இருக்கின்றது.

அதற்கு அடுத்ததாக புதிய அரசியலமைப்பு ஒன்றையும் உருவாக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுகின்றன. ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டில் சர்வாதிகாரத்தினை முன்னெடுக்கும் வகையில் தனி நபருக்கான அதிகாரக்குவிப்பை இலக்கு வைத்தே புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்படப் போகின்றது என்பது திண்ணம்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுயையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அந்த தார்மீக கடமையிலிருந்து இந்தியா தவறும் பட்சத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு மாகாண சபை முறைமையும் நீர்த்துப்போகும் பேராபத்தே உள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. தற்போது கூட பிராந்தியத்தின் தலைமைப் பாத்திரத்தினைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது தமிழர்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பினையும் கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கு அப்பால் சென்று உரிய தலையீடுகளை செய்ய வேண்டும். கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தியா தமிழர்களின் விடயத்தில் தீவிரத்தன்மையை காட்டியது. இத்தகைய பகடைக்காய்களாக பயன்படுத்தும் நிலைமையை இந்தியா கைவிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சமகாலத்தில், ஆட்சியாளர்கள் சீனாவுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுவடைந்து செல்கின்றன. அதுமட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார மந்தநிலைமையிலிருந்து மீட்சி பெறுவதற்கு சீனாவின் பங்களிப்பும் கணிசமாக உள்ளதோடு சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் காப்பாளனாக சீனா செயற்படுவதை உறுதி செய்துள்ளது.

ஆகவே இந்த உறவு நிலை மேலும் வலுப்படும் பட்சத்தில் இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதானது, வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு சமாந்தரமாக தென்னிந்தியாவிலும் சுமூகமற்ற நிலைமையொன்று ஏற்படும். அவ்விதமான நிலைமையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமைவதோடு பிராந்திய தலைமைத்துவ பாத்திரத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

எனவே, இந்திய மத்திய அரசானது, தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் மென்போக்கினை விடுத்து நேரடியான தலையீடுகளைச் செய்வதன் மூலமாகவே தமிழர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படுவதோடு இந்தியாவின் பூரண அமைதியும் உறுதி செய்யப்படும்” என்றுள்ளது.

https://www.ilakku.org/தமிழர்களை-பகடைக்காய்களா/

 

11 hours ago, உடையார் said:

இந்திய மத்திய அரசானது, தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் மென்போக்கினை விடுத்து நேரடியான தலையீடுகளைச் செய்வதன் மூலமாகவே தமிழர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படுவதோடு இந்தியாவின் பூரண அமைதியும் உறுதி செய்யப்படும்”

இந்தியாவின் நேரடி தலையீட்டால் தான் இன்று தமிழர்களுக்கு இந்த நிலை. புலிகள் போனபின் 11 வருடம் கடந்தும் தனது கேந்திரநிலையை பலப்படுத்த முயலாதவர்கள் இன்று நேரடி தலையீடு செய்ய வேண்டுகிறோமா? ஒரு உருப்படியான வீட்டுத்திட்டத்தை நடத்த முடியாதவர்களிடம் நேரடி தலையீடு செய்ய வேண்டுகிறோமா?.தனது நாட்டில் பிறந்து, படித்து மேலுழும்பியவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திணறும் ஒரு நாடு, "வெள்ளையனே வெளியேறு" என்று கூவி சுதந்திரம் பெற்றன் பின் இன்று அதே வெள்ளை நாடுகளின் விசாவை ஏங்கி காத்திருக்கும் நிலையில் எங்களுக்கு உருப்படியாக எதுவும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை.  32 வருடத்துக்கும் முன் பெற்ற தன்னுடைய குதங்களை உருப்படியாக பாவித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தெரியாத ஒரு  நாட்டிடம் நீங்கள் போய் நேரடி தலையீடு செய் என்று கேட்பது கேலித்தனமானது.

இன்றைய உலகம் 1980களில்  இருந்து முற்றாக வேறுபடட பூகோள அரைசியலை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருந்தும் நேரடி தலையீடு பற்றி பேசுவது நீங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து வெளிவரவில்லை என்பதை குறிக்கிறது. இந்தியா நேரடி தலையீடு செய்ய நாம் ஒன்றும் தைவான் அல்ல. இந்தியாவால் தனது தென்கோடியை பாதுகாக்க எங்கள்  நிலப்பரப்பை தனது விசுவாசநபர்களின் கண்காணிப்பில் வைத்திருப்பதை தவிர அவர்களால் ஒரு அங்குலமும் மேலே போகமுடியாது. இந்த நிலையையை அவர்களே உருவாக்கினார்கள். அதன் நீண்டகால விளைவுகள் இந்த நிகழ் காலத்தில் நிஜமாகிக்கொண்டுவருகிறது! . ஒரு கட்டத்தில் தென்கோடிக்கு ஆபத்து வந்தால் நாங்கள் மீண்டும் எண்கள் மண்ணில் பலியிடப்படுவோம்!. அப்ப நேரடி தலையீடு எப்படியிருக்கும் என்று நீங்கள் கண்டறிவீர்கள்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.