Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்

திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்

 

திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:

பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவிக்கும் ஆசையும், ஆற்றலும் உண்டு என்பதை நவீன மருத்துவ விஞ்ஞானம் உணர்த்துகிறது.

 
திருமணத்திற்கு முன்பே பாலியல் தொடர்புவைத்திருந்தவர்கள், திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுமே அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். புதிய கணவருடன் இணையும்போது குற்றஉணர்ச்சியும் கொள்கிறார்கள். பழைய நினைவுகள் அவர்களுக்கு அடிக்கடி வருவதால் தேனிலவு காலமும் அவ்வளவு தித்திப்பாக அமைவதில்லை.

காலப்போக்கில் பெண்கள் அத்தகைய பழைய நினைவு களை ஜீரணித்துக்கொள்கிறார்கள். சிலர் அதை கணவரிடம் கூறிவிட்டு, புதிய சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.

பார்ப்பது, கேட்பது, படிப்பது மூலம் பல்வேறுவிதமான பாலியல் எதிர்பார்ப்புகள் ஆண், பெண் இருவரிடமும் ஏற்படுகிறது. திருமணத்திற்கு பின்பு தனக்கு விருப்பமான முறைகளை கையாள ஆண் விரும்புவதும், பெண் அதை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் சில குடும்பங்களில் நடக்கிறது. அது தீர்வற்றதாக தொடர்ந்தால் தவறான திசையை நோக்கிச் சென்றுவிடும்.

சில பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களை தோழிகளிடம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே, அவர்கள் அளவுக்கு பாலியல் விஷயங்களில் குழப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். இன்னொருவரின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல அவர்கள் நிபுணத்துவமும் பெற்றி ருப்பதில்லை. சில நேரங்களில் தோழிகள் அல்லது நண்பர்களின் தவறான வழிகாட்டல் தம்பதிகளை பிரிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது.

மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களும், பிந்தைய சில நாட்களும் பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்கள் மனதில் அதிகம் எழும். சாதாரண விஷயங்களுக்குகூட அதிக கோபம் கொள்வார்கள். மாதவிலக்கு நாட்களில் தாம்பத்யம் வைத்துக்கொள்ள கணவர் விரும்புவது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்போது மனைவியை கட்டாயப்படுத்தினால் அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.

பிரசவமாகி ஆறு வாரங்கள் கடந்த பிறகு தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்றாலும், மனைவி அதற்கு மனதளவில் தயாராகிவிட்டால்தான் அது சாத்தியம். தயாராகும் முன்பே தாம்பத்யத்திற்கு கட்டாயப்படுத்தினால், எதிர்காலத்தில் அந்த பெண்ணுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புண்டு.

ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், தாயார் அந்த குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுவார். அப்போது பல மாதங்களாக கணவரின் ஆசைகளை நிராசையாக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த காலகட்டத்தில் கணவர் ஆத்திரமடையாமல் மனைவி மீது அன்புசெலுத்த முன்வரவேண்டும்.

நாற்பது வயதுக்கு பிறகு இயல்பாகவே பெண்களுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் குறையும். அதற்கு அவர்கள் உடலில் உருவாகும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் பருமன், ஆரோக்கிய குறைபாடு போன்றவை காரணமாக இருக்கும். 40 வயதுக்கு பிறகு தம்பதிகளின் வாழ்க்கையில் தாம்பத்யத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது இருவருமே அன்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

பெண்களின் உடல் எடை குண்டாகிவிடுவது அவர்களது தாம்பத்ய திருப்திக்கு பெரும் இடைஞ்சலாகிறது. 50 வயதுக்கு பிறகு ஆன்மிக பாதையே சிறந்தது என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது தாம்பத்ய விருப்பங்களுக்கு பூட்டுபோட்டுவிட்டு ஆன்மிகத்தை நோக்கி மனதை திருப்புகிறார்கள். அது சரியல்ல. ஆன்மிகமும், தாம்பத்யமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஆன்மிகம் மனதுக்கு உற்சாகம் தந்தால், தாம்பத்யம் மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து திருப்தி தரும்.

 

https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/10/21132233/1996095/new-marriage-couple-first-night.vpf

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்

திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்

 

திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:

பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவிக்கும் ஆசையும், ஆற்றலும் உண்டு என்பதை நவீன மருத்துவ விஞ்ஞானம் உணர்த்துகிறது.

 
திருமணத்திற்கு முன்பே பாலியல் தொடர்புவைத்திருந்தவர்கள், திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுமே அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். புதிய கணவருடன் இணையும்போது குற்றஉணர்ச்சியும் கொள்கிறார்கள். பழைய நினைவுகள் அவர்களுக்கு அடிக்கடி வருவதால் தேனிலவு காலமும் அவ்வளவு தித்திப்பாக அமைவதில்லை.

காலப்போக்கில் பெண்கள் அத்தகைய பழைய நினைவு களை ஜீரணித்துக்கொள்கிறார்கள். சிலர் அதை கணவரிடம் கூறிவிட்டு, புதிய சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.

பார்ப்பது, கேட்பது, படிப்பது மூலம் பல்வேறுவிதமான பாலியல் எதிர்பார்ப்புகள் ஆண், பெண் இருவரிடமும் ஏற்படுகிறது. திருமணத்திற்கு பின்பு தனக்கு விருப்பமான முறைகளை கையாள ஆண் விரும்புவதும், பெண் அதை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் சில குடும்பங்களில் நடக்கிறது. அது தீர்வற்றதாக தொடர்ந்தால் தவறான திசையை நோக்கிச் சென்றுவிடும்.

சில பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களை தோழிகளிடம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே, அவர்கள் அளவுக்கு பாலியல் விஷயங்களில் குழப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். இன்னொருவரின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல அவர்கள் நிபுணத்துவமும் பெற்றி ருப்பதில்லை. சில நேரங்களில் தோழிகள் அல்லது நண்பர்களின் தவறான வழிகாட்டல் தம்பதிகளை பிரிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது.

மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களும், பிந்தைய சில நாட்களும் பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்கள் மனதில் அதிகம் எழும். சாதாரண விஷயங்களுக்குகூட அதிக கோபம் கொள்வார்கள். மாதவிலக்கு நாட்களில் தாம்பத்யம் வைத்துக்கொள்ள கணவர் விரும்புவது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்போது மனைவியை கட்டாயப்படுத்தினால் அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.

பிரசவமாகி ஆறு வாரங்கள் கடந்த பிறகு தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்றாலும், மனைவி அதற்கு மனதளவில் தயாராகிவிட்டால்தான் அது சாத்தியம். தயாராகும் முன்பே தாம்பத்யத்திற்கு கட்டாயப்படுத்தினால், எதிர்காலத்தில் அந்த பெண்ணுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புண்டு.

ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், தாயார் அந்த குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுவார். அப்போது பல மாதங்களாக கணவரின் ஆசைகளை நிராசையாக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த காலகட்டத்தில் கணவர் ஆத்திரமடையாமல் மனைவி மீது அன்புசெலுத்த முன்வரவேண்டும்.

நாற்பது வயதுக்கு பிறகு இயல்பாகவே பெண்களுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் குறையும். அதற்கு அவர்கள் உடலில் உருவாகும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் பருமன், ஆரோக்கிய குறைபாடு போன்றவை காரணமாக இருக்கும். 40 வயதுக்கு பிறகு தம்பதிகளின் வாழ்க்கையில் தாம்பத்யத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது இருவருமே அன்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

பெண்களின் உடல் எடை குண்டாகிவிடுவது அவர்களது தாம்பத்ய திருப்திக்கு பெரும் இடைஞ்சலாகிறது. 50 வயதுக்கு பிறகு ஆன்மிக பாதையே சிறந்தது என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது தாம்பத்ய விருப்பங்களுக்கு பூட்டுபோட்டுவிட்டு ஆன்மிகத்தை நோக்கி மனதை திருப்புகிறார்கள். அது சரியல்ல. ஆன்மிகமும், தாம்பத்யமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஆன்மிகம் மனதுக்கு உற்சாகம் தந்தால், தாம்பத்யம் மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து திருப்தி தரும்.

இதில் என்ன பெண்களுக்கு தெரியாத ரகசியம் இருக்கு ?
என்ன எழுதுகிறார்கள் என்பதே புரியுதில்லை .. ஏன் எழுதுகிறார்கள் என்பதும் தெரியவில்லை 

 "மாதவிலக்கு நாட்களில் தாம்பத்யம் வைத்துக்கொள்ள கணவர் விரும்புவது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்போது மனைவியை கட்டாயப்படுத்தினால் அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்."

இந்த நேரத்தில்தான் பெண்களின் உடலில் அதிக எஸ்டரோஜென் 
உருவாகும் பெண்கள் மூடாவதே இந்த காலத்தில்தான் அதுக்கு 
ஈஸ்ட்ரோஜன்தான் காரணம். ஆனாலும் சிலருக்கு இருக்கும் வயிற்று வலி 
தலை இடி அருவெறுப்பான சூழல் என்று பின்தள்ள படுகிறது. ஆனால் அவர்கள் 
உடலில் இச்சை இப்போதான் அதிகம் இருக்கும் 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாம்பத்திய ஆசையில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

தாம்பத்திய ஆசையில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

 

‘தாம்பத்ய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள்’ என்று நவீன கால தாம்பத்ய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘இந்தியர்களின் தாம்பத்ய வாழ்க்கை எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் சுவாரசியமான பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

* தான் சொல்வதைக் கேட்டு மனைவி நடந்துகொள்ளவேண்டும் என்று 72 சதவீத ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். (முன்பு இந்த எண்ணம் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருந்தது கவனிக்கத்தகுந்தது)


* பெரும்பாலான ஆண்கள், மனைவி தங்களை குழந்தை போன்று பராமரித்து பாசம் செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அதில் 60 சதவீத ஆண்கள் தங்கள் எதிர்பார்ப்பு ஈடேறுவதாகவும் சொல்கிறார்கள்.

* உயர்ந்த கல்வியும், அதிக சம்பளத்துடன்கூடிய வேலையும் பெண்களுக்கு கிடைத்திருந்தாலும் அவர்களுக்கு உரிய முழு அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை என்பது 22 சதவீத ஆண்களின் கருத்தாக இருக்கிறது.

* 8 சதவீத ஆண்கள், வேலைபார்க்கும் தங்கள் மனைவி நண்பர்களுடனான பார்ட்டிகளில் பங்குபெறுவதை ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.

* மனைவியின் அலுவலக நண்பர்கள் வீடு தேடி வந்து உரையாடிவிட்டு செல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் என்று 52 சதவீத ஆண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

* மனைவி மீது அதிக பாசம் இருந்தாலும், மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் மனைவியை விட்டு விலகி இருப்பது பாசத்தை அதிகரிக்க உதவும் என்பது 70 சதவீத ஆண்களின் கருத்து. அதே நேரத்தில் அது சரியான முடிவுதான் என்று 48 சதவீத பெண்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது பெண்களில் பெரும்பாலானவர்கள் கணவர் தங்களைவிட்டு ஒருசில நாட்கள் கூட விலகியிருக்க கூடாது என்றே இப்போதும் விரும்புகிறார்கள்.

* சினிமா கதாநாயகர்கள் போன்றவர்களோ, கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போன்றவர்களோ கணவராக வேண்டும் என்று முன்பு தாங்கள் எதிர்பார்த்தது உண்மைதான் என்றும், இப்போது அப்படிப்பட்ட கனவுகள் காண்பதில்லை என்றும், சராசரி மனிதர்களையே கணவராக எதிர்பார்ப்பதாகவும் 81 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

* தாம்பத்ய செயல்பாடுகளில் தங்களுக்கு முழுதிருப்தி ஏற்படுவதாக 38 சதவீத பெண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த விஷயத்தில் கணவர் தங்களது கருத்துக்களை கேட்பதில்லை என்பது 48 சதவீத பெண்களின் குறையாக இருக்கிறது.

* ‘நாங்கள் தாம்பத்ய செயல்பாட்டு விஷயத்தில் புதுமைகளுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் கணவர்தான் அதில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை’ என்பது 22 சதவீத நடுத்தர வயது பெண்களின் கருத்தாக பதிவாகி இருக்கிறது.

* கணவரிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன என்ற கேள்விக்கு, ‘சுகாதாரத்தை கடைப்பிடிக்காதது, எப்போதும் எரிச்சலடைவது, அலட்சியமாக இருப்பது, பொறுப்பாக நடந்துகொள்ளாதது, புகைப்பிடிப்பது, பொய் சொல்வது, மது அருந்துவது..’ என்று நீளமாக பெண்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.

இந்த கருத்துக்கணிப்பு பற்றி மனோதத்துவ நிபுணர் அளித்திருக்கும் விளக்கம் :

“இந்த சர்வேயில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கணவன்மார்களிடம் பிடிக்காதவைகளை பற்றி பெண்கள் வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதை ஒரு பாசிட்டிவ்வான கருத்தாக ஆண்கள் ஏற்றுக்கொண்டு, தங்களிடம் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை இனிக்கும்.

தாம்பத்ய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆணும், பெண்ணும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து கணவன்- மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். அதனால் எடுத்த எடுப்பிலே அவர்களுக்குள் ஐக்கியம் ஏற்பட்டுவிடாது. அதை புரிந்துகொண்டு படிப்படியாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இருவரும் முன்வரவேண்டும். அதற்கு அன்பும், நம்பிக்கையும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பதும் மிக அவசியம்” என்கிறார்.

https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/11/11134823/2060878/Bed-Relationship.vpf

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்

திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்

 

‘தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம்?’- என்ற ருசிகரமான ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. ஆய்வு முடிவுகளை பாலியல் நிபுணர்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் அதிரடி திருப்பமாக வெளிவந்திருக்கும் தகவல் என்னவென்றால், 35 வயதுப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரித்திருக்கிறதாம். அதே வயதுடைய ஆண்களில் 55 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

 
35 வயது பெண்மணி ஒருவரிடம் இந்த ஆய்வு பற்றி ஆய்வுக்குழு கருத்துக்கேட்டபோது “நான் தாம்பத்திய தொடர்பை அதிகம் விரும்புபவள்தான். ஆனால் அலுப்புதரும் அலுவலக வேலையால் தினமும் சோர்ந்து போகிறேன். மாதம் நான்கு முறைதான் கணவருடன் உறவு வைத்துக்கொள்ள முடிகிறது. கணவரும் என்னைப் போலவே நீண்ட நேரம் பணி செய்கிறார். அதனால் 40 வயதுக்குப் பிறகு அவருக்கு ஆர்வம் குறையத் தொடங்கியிருக்கிறது. அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் எங்கள் தாம்பத்திய வாழ்க்கையை முழுங்கி வருகிறது” என்கிறார்.

கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற 30 வயது இளம் பெண் ஒருவரின் கருத்து மிகவும் கவனிக்கத் தகுந்ததாக இருக்கிறது. “நாங்கள் இருவரும் கடைசியாக எப்போது உறவு வைத்துக்கொண்டோம் என்பதே நினைவில் இல்லை. அந்த அளவிற்கு நாங்கள் உறவு கொண்டு பல மாதங்கள் ஆகிவிட்டன” என்று வேதனையோடு கூறியிருக்கிறார்.

இந்த வேதனைக்கு காரணம், இளம் ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசைதான். 25-30 வயது என்பது, வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருக்கிறது. எனவே பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். ஒரு குழந்தை போதுமென்றும், தாம்பத்திய உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்தக் கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் ஆர்வம் குறைந்து விடுகிறது.

இப்படி எல்லாம் இருந்தாலும் 35 வயதை நெருங்கும்போது பெண்கள் அதிக தாம்பத்திய ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். இருந்தாலும்கூட அப்போது அவர்களின் குழந்தைகளும் வளரிளம் பருவத்தை அடைகிறார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள் என்றும் சர்வே சொல்கிறது.

இந்தக் கருத்தை 40 வயது குடும்பத்தலைவி ஒருவர் ஒத்துக்கொள்கிறார். “நான் 25-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைகளுக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் தாம்பத்திய ஆசைகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை” என்று கூறியிருக்கிறார்.

திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

30 வயதுகளில் பெண்களுக்கு தாம்பத்திய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். அவர்கள் மனஅமைதி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தால், இந்த வயதில் தாம்பத்திய ஆசை உச்சத்துக்குச் செல்லும். குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனிப்பது, பராமரிப்பது, குடும்ப நிர்வாகம் போன்ற அனுதின பிரச்சினைகள், அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை குறைக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

40 வயதுகளில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் பாலியல் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.

ஐம்பது வயதுகளில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் பாலியல் ஆர்வத்தை குறைக்கிறது இந்தப் பருவம்.

இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்திய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தம்பதிகளிடம் இணக்கமும், மகிழ்ச்சியும் உருவாக தாம்பத்தியம் தேவைப்படுகிறது. தாம்பத்திய திருப்திக்கு மனைவி மட்டும் உடல் நலத்தை கவனித்தால் போதாது. கணவரும் உடல் மீது அக்கறை கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இருவரும் இணக்கமாக இருந்தால்தான் திருப்தியான பாலுறவை மேற்கொண்டு மகிழ்ச்சியாக வாழமுடியும்.

 

https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/11/19135430/2082656/tamil-news-married-women-bed-relationship.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.