Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்.

141206164716_suresh_premachandran_eprlf_

“இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.”

    இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறுவது ஆரோக்கியமான செயற்பாடாகும். இந்தச் சந்திப்பு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மையாக இருந்தால் வரவேற்கக்கூடிய விடயமாகும்.

ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே இந்தியா தொடர்ச்சியாக தமிழர் தரப்போடு பேசிக்கொண்டு வருகின்றது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசப்போவதாக அறிந்தேன். இந்தச் சந்திப்புக்கள் இணைய வழியூடான பேச்சுக்களாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கக்கூடிய விடயமாகும்.

அந்தச் சந்திப்பு எவ்வாறு நடைபெறப் போகின்றது என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்த, எமது பிரச்சினைகள் பற்றிப் பேச சகல கட்சிகளையும் இணைத்து குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இவ்வாறு ஒரு குழு நியமிக்கப்பட்டால் தமிழர் தரப்பு பிரச்சினைகளை ஒரே குரலில் பேச முடியும்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88425/

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் எம்பி சிவக்தி ஆனந்தனின் நேற்றைய அறிக்கைக்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

அவரது அறிக்கையின் சாரம் இது.

முப்பத்துமூன்று வருசமா, ஒப்புக்கு சப்பாணியாக அக்கறை இல்லாமல்,இந்தியா, பதின்மூன்றாவது சரத்து விசயத்தில் நடந்தது.

யுத்தம் முடிந்தபின்னான பதினொரு ஆண்டுகளில் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இப்போது, சீனாக்காரன் வந்து போனதும், சிங்கள அரசை வழிக்கு கொண்டு வரலாம் என்று நிணைத்து, தமிழர் தரப்புடன் இணையத்தளம் மூலம் சந்திப்பை நடாத்தப் போகிறது, இந்தியா.

இதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

இலங்கை தமிழரை விடுங்கள். நமக்கு, சிங்களவர் அல்லது சீனர். இழப்பதற்கு எதுவும் இல்லை.

ஆனால், உங்கள் தென்பகுதியை, சீனாவின் தீர்க்கமான நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவாவது கூடுதலான அக்கறை எடுங்கள்.

ஏற்கனவே நேபால் பிரச்சணை. பூட்டானில் பிரச்சணை. பாகிஸ்தான் பிரச்சணை. இலங்கை விசயத்தில், கோட்டை விட்டால், அக்கறை இல்லாவிடில், தென் இந்தியாவே பாதிப்படையும்.

உங்கள் நலுனுக்காவது, இதயசுத்தியுடன் அணுகுங்கள். இல்லாவிடில் இழப்பு உங்களுக்கே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்க சகல தமிழ்கட்சிகளின் பொதுச் செயற்பாட்டுக்குழு ஒன்று விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று  கட்சிகள் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அப்படியிருக்க சுரேஷ் இந்தியா தமிழ் கூட்டமைப்புடன் தனியாக பேசக்கூடாது என்கிறார். அரசியல்வாதிகளின் பேச்சு ஒன்று செய்கை வேறொன்றாக உள்ளது கவலையளிக்கிறது.

பொதுவிடயங்களில் குறிப்பாக இனப்பிரச்சினை குறித்து பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தும்போது தமிழ் கட்சிகள் இணந்து துறைசார் வல்லுனர்கள் கொண்ட ஒரு பொது குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிக சிறந்தது.

19 hours ago, vanangaamudi said:

பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தும்போது தமிழ் கட்சிகள் இணந்து துறைசார் வல்லுனர்கள் கொண்ட ஒரு பொது குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிக சிறந்தது.

நண்பரே இது நடவாது. எனது கடந்த ஆண்டு பதிவு ஒன்றில் இது பற்றி எழுதியிருந்தேன். இவர்களிடம் நான் கண்ட அனுபவத்தின் படி துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெருமளவுக்கு அவர்களது மனோபாவம் இன்னும் உயரவில்லை. இவர்களது அரசியல் கலாச்சாரம் உயரவில்லை. அவர்கள் உயரவில்லை.

தனக்கு ஆலோசனை சொல்கிறவன் தன்னை மீறிவிடுவான், என்னுடைய குறைபாடுகள் அவருக்கு தெரிந்துவிடும் என்றெல்லாம் சிந்திக்க பழகியவர்கள் இவர்கள். அதனால் தான் இன்றைக்கும் ஒரே ஒருவர் தான் எல்லாம் அறிந்த சகலகலாவல்லவன் என்ற போக்கு. அல்லது ஆலோசனை பெறுவதென்றால் தங்களுக்கு ஆமா போடுபவனிடம் (yes men) தான் கேட்பினும். உலகவங்கியில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு துறை வரை நிபுணத்துவம் கொண்ட தமிழர் இருந்தும் அவர்கள் ஆலோசனை கூட்டங்கள்  வைத்தால் முகத்துக்கு ஆமாபோடுவிட்டு பின்னர் ஒரு follow-up ஒன்றும் நடவாது. கேட்டால் வேறொருவன் சொன்னவன் அவரைப்பற்றி, இது சரியில்லை அது சரியில்லை என சாக்குபோக்கு சொல்லி தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை அதே நிலையில் வைத்திருப்பார்கள். வெளிநாட்டவரை ஆலோசனை வழங்க கொண்டுவந்தால் கொண்டுவந்தவர் ஆர் என்று பார்த்து அவரை வெட்டுவதில் முழு நேரத்தையும் செலவழிப்பார்கள். இராஜதந்திரிகளுடன் கூட்டம் வைக்கப்போனால் கைளை ஆட்டிக்கொண்டு வருவார்கள். அந்த ராஜதந்திரிகளிடம் கையளிக்க ஒரு ஆதரக்கோவை (documentation, appeals etc) அல்லது கூட்டம் நடந்த  பின் கூட்டத்தில் அவர்கள் சொன்ன விடயங்கள் பற்றி ஆலோசனை செய்யமாட்டார்கள், follow-up ஒன்றும் நடவாது. இடைவிடாத தொடர்பாடல் (sustained diplomatic engagement) செய்யவே தெரியாத முட்டாள் கூட்டம். கூட்டம், கூட்டத்தின் பின் படம், நம்பிக்கை, தும்பிக்கை என்ற தலையகத்துடன் செய்தி. இவவளவுடன் இவர்களது வேலை முடிந்துவிடும்.  தமிழர் இன்றைக்கு இந்த நிலையில் இருப்பதட்கு இது மிகமுக்கிய காரணி 

Edited by puthalvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.