Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம்

 
Drawing-for-poems-696x492.jpg
 41 Views

தொல்புவியில் நாமாண்ட வரலாறு மீண்டெழுத

வல்லாண்மைத் திறத்தினொடு அதிவிவேக நுண்மதியால்

பல்நாட்டு வல்லரசார் உள்ளத்தை ஊடுருவி

சல்லடையாய் சிங்களத்தைத் துளைத்தெடுத்த வேந்தனெங்கே!

 

கர்மவீரன், திடசித்தன், களங்கமில்லாத் தூயநெஞ்சன்

தந்தை செல்வா முன்மொழிந்த தமிழ் ஈழம் உருவாக்கி

தர்மநெறி தழுவியவர் நாற்படைகள் அரணமைக்க

அதர்மத்தை வேரறுத்து இனம்காத்த செம்மலெங்கே!

 

பதினெட்டு வயதினிலே விடுதலையின் கனல்மூண்டு

கதியற்றுத் தடுமாறித் தவித்ததமிழ் மக்கள்துயர்

பதியத்தன் னுள்ளத்தில் பகையொடுக்கும் ஆவேசம்

கொதித்தெழும்பத் தேசத்தைக் கைக்கெடுத்த வேந்தனெங்கே!

 

பாசமிகு உறவுகளே, தமிழீழத் தலைவர்களே

நன்றாகச் சிந்தியுங்கள் சிந்தித்துச் செயலெடுங்கள்

குருதியினில் நடைபயின்று நெருப்பாற்றை ஊடுருவி

பகைவர்தளம் தகர்த்தழித்து மண்மீட்டுக் காத்தவர்கள்

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் புதல்வியர்கள்

 

விண்ணுறையும் மாவீரர் கனவுகளை நாம் சுமப்போம்

சர்வதேச நாடுகளின் சதியால்நாம் அழிந்தாலும்

துவளாது நாமொன்றாய்த் தலைமகனின் உறுதியுடன்

சாத்வீகப் போர்தொடுத்து அடிமைவிலங் குடைத்தெறிவோம்

 

சந்ததியின் நலனுக்காய் எழுச்சிக்காய் சிந்தியுங்கள்

தலைவணங்காத் தமிழனவன் தமிழினத்தின் தெய்வமகன்

அஞ்சாத நெஞ்சனவன், அடக்கியாண்ட சிங்களத்து

இனவாத நெஞ்சத்துச் சண்டாளர் பாதகங்கள்

களைந்தெங்கள் இனம்காத்த வீரத்தை மறப்பீரோ

 

இராணுவத்தை வெளியேற்றி உறவுகளைக் குடியமர்த்தத்

தாமதிக்கும் காலமெல்லாம் இனமழியும் காலமன்றோ

தாயகத்தில் சிங்களவர் குடியேற்றம் தொடர்கையிலே

எங்கள்மண் முற்றாகக் கபளீகரம் செய்கையிலே

எதிர்த்தொருபோர் முன்னெடுக்கத் திரண்டெழுவீர் உறவுகளே

 

கர்ப்பத்துச் சிசுக்களொடு கருத்தரித்த பெண்களொடு

கைக்குழந்தை அன்னையரோ டிளைஞர்கள் யுவதிகள்

வளர்ந்தவர்கள் வயோதிபர்கள் வயதுவேறுபாடின்றி

முள்ளிவாய்க்கால் பலிக்களத்தில் குண்டுகளால் கொல்லப்பட்ட

கொடூரங்களுக் கோர்தீர்வு பெறுவதற்குத் திரண்டெழுவோம்

 

நீண்டகாலம் சிறைகளிலே வாடுகின்ற இளைஞர்களை

மாண்டழியும் முன்னதாக மீட்டெடுக்கும்; துணிச்சலுடன்

வீரம்மிக்க இளைஞர்களே, தலைவர்களே திரண்டெழுந்து

அகிம்சைவழிப் போராடி அடிமைவிலங் குடைத்தெறிவோம்

 

சுயநலத்தின் வேரறுத்து பிரிவினைக்கு இடங்கொடாது

ஒன்றுபட்டுக் கரமிணைத்து மனிதநேயம் வளர்த்தெடுத்து

மனோதிடத்தில் தளராது மாற்றான்பேச்சில் மயங்கிடாது

இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம்.

-மாரீசன்-

https://www.ilakku.org/இனமான-உணர்வோடு-தன்னாட்ச/

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதலில் வடகிழக்கு பூர்வீக தமிழர், ஈழத்தமிழராக ஒன்றிணைய வேண்டும்.

சாதிகள், மற்றும் பிரதேசங்கள் (யாழ், மட்டு, வன்னி என்பது போன்ற பிரிவுகள்) வாரியாக  பிரிந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

பிரபாகரனோ, புலிகளோ  அல்லது அவர்களின்  இடத்தில எவர் இருந்து இருந்தாலும், இந்த  முடிவே ஏற்பட்டு இருக்கும்.

இதை நான் வரலாறு ஊடாகவே விளங்கி கொள்கிறேன்.

அதே போல பிரபாகரனோ, புலிகளோ  அல்லது அவர்களின்  இடத்தில் வேறு எவர்களாலும்   வழிநடத்தப்பட்ட  போராட்டதின் முடிவானது, நாவலரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது  என்பதே இப்பொது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

அதே போல, சிங்களவரின் வரலாற்று இலக்கை, அதாவது அவர்கள் சிங்கள பௌத்தமாக ஒன்றிணைந்தது அதன் மூலம் பிரித்தானியரிடம் செல்வாக்கு பெற்றது, என்பதை தீர்மானித்தவர் அநாகரிக தர்மபால.

சிங்கள பௌத்தத்தில்,சாதிகள், பிரிவுகள் இருந்தாலும், சிங்கள பௌத்தம் என்று வரும் போது மற்ற பிரிவுகள் மழுங்கி விடும். இதை சிங்களவருக்கு  பெற்றுக் கொடுத்தவர் சிங்கள   அநாகரிக தர்மபால.

இதன் எதிர் மாறாக,    சாதிகள், மற்ற பிரிவுகள், ஈழத்தமிழர் என்பதிலும் ஓங்குவதற்கு வழிசமைத்தவர் நாவலர்.

இதை (அதாவது நாவலர் பற்றி ) இங்கே பலர் எதிர்ப்பார்கள், ஆனால் அது உண்மை.   

அதனால், முதலில் எமக்கு தேவையானவர், நவீன ஈழத்தமிழ் அநாகரிக தர்மபால.

தமிழ் நாடு சீமானின் வடிவத்தில், நவீன தமிழ் நாடு அநாகரிக தர்மபாலவை பெற்று விட்டது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

 

தமிழ் நாடு சீமானின் வடிவத்தில், நவீன தமிழ் நாடு அநாகரிக தர்மபாலவை பெற்று விட்டது.  

காலம் பதில் சொல்லும் எப்படியென்று

11 minutes ago, Kadancha said:

இதற்கு முதலில் வடகிழக்கு பூர்வீக தமிழர், ஈழத்தமிழராக ஒன்றிணைய வேண்டும்.

சாதிகள், மற்றும் பிரதேசங்கள் (யாழ், மட்டு, வன்னி என்பது போன்ற பிரிவுகள்) வாரியாக  பிரிந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

இணைவார்கள் - இளைஞர்கள்  ஏதிர்காலத்தை நல்ல முறையில் கையாளுவார்கள் என்று நம்புவோம், நல்ல தலைமை அமைந்தால், நல் வழியில் நடத்தலாம்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, உடையார் said:

காலம் பதில் சொல்லும் எப்படியென்று

நிச்சயமாக. 

சிங்கள அநாகரிக தர்மபாலவின் சித்தாந்ததின் (அது மற்ற இனத்தை  புண்படுத்தும் மற்றும் தாக்கும் தன்மை உள்ளதாயினும்)  கண்ணு க்கு புலப்படாத விளைவின் நன்மைகளை இப்போதைய சிங்களவர் அனுபவிக்கின்றனர்.

அதே போல நாவலரின்   சித்தாந்ததின் (ஈழத்தமிழருக்குள் ஒரு பகுதியினரை  புண்படுத்தும் மற்றும் தாக்கும் தன்மை கொண்ட) கண்ணுக்கு புலப்படாத விளைவின் தீமைகளை இப்போதைய இலங்கைத் தமிழர் அனுபவிக்கின்றனர்.

ஆனால், சீமான் உட் பிரிவுகளையோ (அதாவது சாதி, பிரதேசம் போன்றவை), வெளி  பிரிவுகளையோ (மற்ற இனங்களின்) புண்படுத்தாது, தாக்காது தமிழக தமிழர் என்ற சித்தாந்தத்தை  வடிவமைத்துள்ளார்.  

சீமான் இந்த தத்துவத்தை சற்றே தளர்த்த வேண்டும் என்றே நான் கருதுகிறேன், அதாவது தமிழக பூர்விகம் உள்ள மற்ற இனங்களின் தலைமுறைகளையும் தமிழர் என்று உள்வாங்கி கொள்வது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

சீமான் இந்த தத்துவத்தை சற்றே தளர்த்த வேண்டும் என்றே நான் கருதுகிறேன், அதாவது தமிழக பூர்விகம் உள்ள மற்ற இனங்களின் தலைமுறைகளையும் தமிழர் என்று உள்வாங்கி கொள்வது.

 

வேற்று இனத்தவர் சிலருக்கு கொடுத்துள்ளார் 👍- போகப் போக இன்னும் செம்மையடைவார்கள், நல்வழிகளில் சொல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கு பார்ப்போம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை வரிகள் .. பகிர்விற்கு நன்றி தோழர் .. 👌

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.