Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா அச்சத்தால் டென்மார்க்கில் பலியாகப் போகும் 1.7 கோடி மிங்க்குகள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சத்தால் டென்மார்க்கில் பலியாகப் போகும் 1.7 கோடி மிங்க்குகள் !

November 8, 2020

கொரோனாத் தொற்றுப்  பரவலைத் தடுத்து நிறுத்த டென்மார்க் அரசு பண்ணைகளில் வளரும் 17 மில்லியனுக்கும் அதிகமான மிங்க் (( minks )) எனப்படும் கொறி வகை விலங்குகளைக் கொல்ல முடிவெடுத்துள்ளது.

மிங்க் விலங்குகளின் ரோமங்கள் விலை உயர்ந்தவை என்பதாலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மதிப்பு அதிகம் என்பதாலும் டென்மார்க்கில் 1,139 பண்ணைகளில் சுமார் 17 மில்லியன் மிங்க்குகள் வளர்க்கப்படுகின்றன.

mink-2.jpg

மிங்க்குகளிடமிருந்து பெறப்படும் ரோம வர்த்தகத்தில் டென்மார்க் உலகளவில் முக்கிய இடம் வகிக்கிறது.

இந்நிலையில் டென்மார்க் பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க்குகள் பல கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படகின்றது.

டென்மார்க் அரசின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 216 மிங்க் பண்ணைகளில் கோவிட் -19 நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும், மிங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவிய மரபுணு மாற்றமடைந்த, அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் 214 பேரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களிடமிருந்து மிங்க்குகளுக்குப் பரவும் கொரோனா வைரஸ் அந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றும்போது மரபணுவில் மாற்றமடைந்து இன்னும் ஆபத்தாக உருமாறிவிடுகிறது.

Denmarkminkfarma071120.jpg

அப்படி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் எதிர்கால தடுப்பூசியின் செயல்திறனை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் டென்மார்க் பண்ணைகளிலுள்ள மிங்க்கள் கொல்லப்படவுள்ளன.

மேலும், மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவுவதால் டென்மார்க்கின் வடக்கு பகுதியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் டென்மார்க் அரசு சுமார் 17 மில்லியன் மிங்க்குகளைக் கொல்ல திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டென்மார்க பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen), “பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்குகள் சுகாதார அபாயமாக உருவெடுத்துள்ளன. மிங்க்குகளை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மிங்க்குகளை அழிக்க இராணுவம் மற்றும்  காவல் துறை களமிறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/87145

 

  • கருத்துக்கள உறவுகள்

5 மக்களுக்காக 17 மில்லியன் விலங்கினத்தை ஒழிக்கும் டென்மார்க் | Athavan News

5 மில்லியன் மக்களுக்காக 17 மில்லியன் விலங்கினத்தை ஒழிக்கும் டென்மார்க்

டென்மார்க்கில் மிங்க் எனப்படும் சிறிய வகை விலங்கினத்துக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்து செல்வதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தொற்றானது மனிதர்களுக்கு பரவக்கூடிய சூழலில் குறித்த விலங்கினத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு டென்மார்க் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

டென்மார்க்கில் ஏற்பட்டுள்ள குறித்த நெருக்கடியால் டென்மார்க் பயணிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்க்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தது.

மேலும் டென்மார்க்கில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்புகையில் 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அறிவித்தல் விடுத்திருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க் பிரதமர், 15 தொடக்கம் 17 மில்லியன் மிங்க் விலங்குகள் வாழ்வதாகவும், அவற்றைக் கடினமான உள்ளத்துடனேயே அழிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 5.5 மில்லியன் மக்களைக் கொண்ட டென்மார்க்கில் சுகாதார பிரிவினரின் வலியுறுத்தல்களை நிறைவேற்றும் வகையிலேயே இவற்றை செய்யவேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/5-மக்களுக்காக-17-மில்லியன்-வ/

  • கருத்துக்கள உறவுகள்

டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்படும் அபாயம்.!

b8kk6g_web.jpg 

மனிதர்கள் பயன்படுத்திய கழிவு நீர் கடலில் கலப்பதால் டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி கனடாவிலுள்ள டல்ஹௌசி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடல் பாலூட்டிகளில் நடத்திய ஆய்வில், ”கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய நீர் கடலில் கலப்பதால் கடல் பாலூட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த ஆய்வில் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சார்ஸ் கோவி 2 (SARS-CoV-2)என்ற வைரஸால் கடல் பாலூட்டிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வகையில் இக் கொரோனாத் தொற்றானது டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://puthusudar.lk/2020/11/12/டொல்பின்கள்-மற்றும்-திமி/

டிஸ்கி: 

செயற்கையாக உருவாக்கபட்ட வைரசு என்டா பாவம் சும்மா விடாது 😢

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மனித இனத்தை அழிக்கனும், மற்ற உயிரினங்கள் நிம்மதியாக வாழும்

மிருக வதைகளுக்கு ஏதிராக குரல் கொடுக்கும் அமைப்புகள் எல்லாம் எங்கே? எல்லாம் வேடதாரிகள், பொழுது போக ஒரு அமைப்பு, 

வந்திடுவார்கள் மாட்டை வதைக்கின்றோமென்று, எத்தனை கோடி விலங்குகளை கொல்கின்றார்கள், ஒரு அமைப்பின் ஏதிர்ப்பு கூட இல்லை;

 நாம் தமிழராக இந்த கொட்டிய செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்

தான் வாழ்வதிற்காக எதையும் செய்ய துணிந்த இந்த மானிடம் இருந்தால் என்ன செத்தாலென்ன,

இந்த உலகமே வேடிக்கையாக ரசித்து பார்த்ததுதானே எம் மக்களின் அழிவை😡

ஒட்டு மொத்த அழிவும் ஒரே நாளில் வரவேண்டும் ஆண்டவனே🙏

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.