Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு; 90 வீதம் பாதுகாப்பான செயல்திறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு; 90 வீதம் பாதுகாப்பான செயல்திறன்

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%

அமெரிக்காவின் பைசர் மருந்தாக்க நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தபடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸை தடுக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேம்படுத்தப்படவுள்ள இந்தத் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கான அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்கப்படவுள்ளதாக ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி அல்பேர்ட் பவுர்லா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம் என இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 12-க்கும் மேலான கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் உள்ளபோதும் சிறப்பான செயல்திறளை வெளிப்படுத்திய முதல் தடுப்பு மருந்து இதுதான்.

வைரஸின் மரபணு குறியீட்டை செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது போன்ற முழு பரிசோதனை முறையை இது பயன்படுத்துகிறது.

மூன்று வாரங்களில் இரண்டு முறை இந்த மருந்தை எடுத்துக் கொள்ள நேரிடும். அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஆர்ஜெண்டினா, தென் ஆப்ரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டாம் முறை இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு 90 சதவீதம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது தெரியவந்தது

இந்த வருட முடிவிற்குள் 50 மில்லியன் டோஸ் மருந்துகளை விநியோகிக்க முடியும் என பைசர் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 1.3 பில்லியன் சொட்டு; மருந்தை விநியோகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த மருந்தைச் சேமித்து வைப்பதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. ஆம் இந்த மருந்தை மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும்.

இந்த தடுப்பு மருந்து குறித்து கருத்து வெளியிட்ட பைசர் தலைமை நிர்வாக அதிகாரி அல்பேர்ட் பவுர்லாசர்வதேச சுகாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர உலக மக்களுக்கு உதவும் ஒரு முக்கிய பாதையில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல் என பயோஎன்டெக் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான உகர் சஹின் கருத்து வெளியிட்டுள்ளார்;

தற்போது வழங்கப்பட்டுள்ள தரவுகள் இறுதியான தரவுகள் அல்ல. இந்த தரவுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 94 தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் செயல்பாடு குறித்த விளக்கம் முழு முடிவுகளும் ஆராயப்பட்ட பிறகு மாற்றம் அடையலாம்.

பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள், கண்காணிப்பாளர்களிடம் இந்த தடுப்பு மருந்தைக் கொண்டு செல்வதற்கான போதிய பாதுகாப்பு தகவல்களை நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் பெற்றிருக்கும்.

இருப்பினும் இந்த நிறுவனங்களின் அறிவிப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. “இந்த செய்தி என்னை மனதார சந்தோசமடையச் செய்தது,” என்கிறார் ஒக்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஹார்பி கூறியுள்ளார்.

இந்த தடுப்பு மருந்து பரிசோதனை நம்பிக்கையளிப்பதாக உள்ளது. மருந்து தயாரானதும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என பிரிட்டனின் பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

https://www.meenagam.com/உலக-மக்களுக்கு-மகிழ்ச்சி/

 

 

 

எப்போது கிடைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து?

கொரோனா வைரசிற்கான முதலாவது தடுப்பு மருந்து  90வீதம்பயனளிக்ககூடியது என்பது ஆரம்ப கட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது .
முதலாவது தடுப்பு மருந்தினை உருவாக்கிய  பிபைஜர் பயோன்டெக் நிறுவனங்கள் இதனை விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானத்திற்கான பெரும் வெற்றி என  தெரிவித்துள்ளன.

pfizer-300x164.jpg
ஆறு நாடுகளை சேர்ந்த 435000 பேரிடம்  இந்த மருந்தினை பரிசோதனை செய்தததில் என தெரிவித்துள்ள நிறுவனம் இந்த மருந்து குறித்து எந்த கரிசனை வெளியாகவில்லை எனவும்  தெரிவித்துள்ளன.

இந்த மிக முக்கியமான தகவலை தொடர்ந்து  எப்போது யாருக்கு இந்த மருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மாத்திரமே இந்த வருடம் கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களிற்கே இந்த வருடம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்ககூடும்.
covid-vaccine-300x169.jpg
பிபைஜர் பயோன்டெக் நிறுவனங்கள் மருந்துகளை அவசரமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை பெறும் முயற்சிகள் நவம்பரில் இடம்பெறும் அதற்காக போதுமான தரவுகள் தயாரானவுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளன.
இந்த மருந்துகளிற்காக அனுமதி வழங்கப்படும் வரை உலக நாடுகள் இந்த மருந்தினை பயன்படுத்த முடியாது.
இந்த வருட இறுதிக்குள் 50 மில்லியன் டோஸ் மருந்தினையும் அடுத்த வருட  இறுதிக்குள் 1.3 பில்லியனையும் தயாரிக்க முடியும் என இரு நிறுவனங்களும்  நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டுடோஸ் மருந்துகள் தேவை.
 
யாருக்கு கிடைக்கும்
vaccinearm-300x169.jpg
அனைவருக்கும் நேரடியாக இந்த மருந்துகள் கிடைக்கப்போவதில்லை ஒவ்வொரு நாடும் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என தீhமானிக்கவுள்ளன.
மருத்துவமனை பணியாளர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம் , அவர்கள் மிகவும் பலவீனமானவர்களுடன் பணியாற்றுவதே இதற்கு காரணம்.கொரோனா வைரசினால் அதிகளவு பாதிக்கப்படக்கூடிய முதியவர்களுடன்  பணியாற்றுபவர்களுக்கும் இந்த மருந்து கிடைக்கலாம்.
பிரித்தானியாவில் முதியவர்களுக்கும் அவர்களுடன் முதியோர் இல்லங்களில் பணியாற்றுபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம்.

அமெரிக்கா – ஜேர்மனி கூட்டு முயற்சியில் 90 வீதம் பலனளிக்கும் வைரஸ் தடுப்பூசி

  • கார்த்திகேசு குமாரதாஸன்

தொண்ணூறு வீதம் பலனளிக்கக் கூடிய நம்பிக்கையான வைரஸ் தடுப்பு மருந்து ஒன்று தயாராகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

Pfizer-.jpgஅமெரிக்காவின் Pfizer மற்றும் ஜெர்மனியின் BioNTech ஆகிய இரண்டு முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே உலகெங்கும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புதிய வைரஸ் தடுப்பு மருந்து பற்றிய தகவல்களை இன்று வெளியிட்டுள்ளன.

“அறிவியல் மற்றும் மனிதகுல வரலாற்றில் இது ஒரு முக்கிய நாள்” என்று Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் இரண்டும் இன்றைய நாளைக் குறிப்பிட்டுள்ளன.

உலகெங்கும் இதுவரை பத்து லட்சம் உயிர்களைப் பலிகொண்ட “கோவிட் 19” என்னும் கொடிய வைரஸுக்கு நம்பிக்கையான மருந்தொன்று கண்டுபிடிக்கப்படிருப்பதான இன்றைய செய்தியை பதவிவிலகும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தேர்தலில் தெரிவான புதிய அதிபர் ஜோ பைடெனும் வரவேற்றுள்ளனர். செய்தி வெளியான கையோடு உலகெங்கும் பங்குச் சந்தைகள் திடீரென உயர்ச்சி கண்டுள்ளன.

புதிய தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் மொத்தம் 43 ஆயிரத்து 500 நோயாளிகளில் மூன்று கட்டங்களாகப் பரீட்சிக்கப்பட்டுள்ளது.ஆபத்தான எத்தகைய விளைவுகளும் இன்றி தொண்ணூறு வீதம் அது பலனளிப்பது அந்தப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஆஜெந்தீனா, பிறேசில், தென்னாபிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் பரீட்சார்த்தமாக தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டோர் 90 வீதம் குணமடைந்து உடல் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பதை தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய இந்தத் தடுப்பூசியை மூன்று வார இடைவெளிக்குள் இரண்டு தடவைகள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு வலுவுக்கு உடலைப் பயிற்றுவிக்கும் வகையில்( train the immune system)வைரஸின் மரபணு மூலங்களின் ஒரு பகுதியை(virus’s genetic code) உடலினுள் செலுத்துதல் என்ற அடிப்படையைக் கொண்டதே இந்தத் தடுப்பூசி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸஸுக்கான தடுப்பு மருந்துகளை மனிதர்களில் பரிசோதிக்கும் மூன்றாவது சோதனைகளை உலகெங்கும் பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே மேற்கொண்டுவருகின்றன.

ஒரு மருந்தை பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன்னரான Phase 3 எனப்படும் முக்கிய மூன்றாவது கட்டப் மனிதப் பரிசோதனையின் முடிவுகளையே Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. புதிய மருந்தை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிக்கு இனி அவை விண்ணப்பிக்க முடியும்.

வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகத் தாக்கிவருவதால் புதிய தடுப்பூசிக்கு மிக விரைவாக அனுமதியைப்பெற்று இந்த ஆண்டின் இறுதிக்குள் அதனைப் பாவனைக்கு விடும் பணிகளைத் தொடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே 200 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முன் பதிவு செய்துள்ளன. உலக நாடுகள் பலவும் இதே போன்று மில்லியன் கணக்கான தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே ஓடர்களை வழங்கிவிட்டுக் காத்திருக்கின்றன.

இந்த நிலையில் புதிய தடுப்பூசி வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.ஆயினும் தடுப்பூசியின் பக்க விளைவுகளை முழுமையாக அறிந்து கொள்வதற்கு நாட்கள் செல்லலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி வந்துவிட்டது என்ற தகவல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுயபாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மக்கள் தட்டிக்கழித்து மீறி நடப்பதற்கு வாய்ப்பளித்தால் அதன் விளைவுகள் பேராபத்தாகிவிடும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கின்றன

https://thinakkural.lk/article/87707

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.