Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் தலைமையில் தீகவாவி தாதுகோபுர புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் தலைமையில் தீகவாவி தாதுகோபுர புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

பிரதமரின் தலைமையில் தீகவாவி தாதுகோபுர புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

‘சொலொஸ்மஸ்தான’விற்குரிய கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள முக்கியத்துவத்திலும், அளவிலும் முன்னுரிமை பெறும் தீகவாவி புனித பூமியிலுள்ள தாதுகோபுரத்தை புனரமைக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ   இன்று (புதன்கிழமை) கலந்து கொண்டார்.

முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட  பிரதமர், அதனை தொடர்ந்து பிரித் பாராயணத்திற்கு மத்தியில் தாதுகோபுர புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

குறித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தீகவாவி ரஜமஹா விகாராதிபதி, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரு பகுதிகளுக்கான துணை பிரதான நீதித்துறை சங்கநாயக்கர் சங்க கீர்த்தி ஸ்ரீ புத்தரக்கித சாம ஸ்ரீ சத்தர்ம வாகீஷ்வர, சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ, அகில இலங்கை சமாதான நீதவான், சாஷ்த்ரபதி வணக்கத்திற்குரிய மஹஓய சோபித்த தேரர் அனுசாசனம் நிகழ்த்தினார்.

போர் சூழலுக்கு மத்தியில் அழிக்கப்பட்டு, அபிவிருத்தி தடைப்பட்ட வடக்கு, கிழக்கில் துரித அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு   பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டதாக வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.

தீகவாவியை புனித பூமியாக வர்த்தமானியில் வெளியிட்டதன் மூலம் அதனை பாதுகாப்பதற்கு   பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டதாக நினைவுகூர்ந்த வணக்கத்திற்குரிய சோபித்த தேரர், யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டை ஐக்கியப்படுத்திய  பிரதமரின் வரவிருக்கும் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரார்த்தித்தார்.

நீண்ட காலமாக இயற்கையினாலும், மனித செயற்பாடுகளினாலும் சீரழிந்துள்ள தீகவாவி புனித பூமியை பல தசாப்தங்களாக பல தடவைகள் இலங்கை அரசாங்கம் மற்றும் பிற தரப்பினரால் புனரமைப்பதற்கு முயற்சித்த போதிலும் அந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

முப்படையினரின் முழுமையான பங்களிப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் ஆளனி பங்களிப்புடன் தொல்பொருள் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கமைய இரண்டு வருட காலத்திற்குள் தாதுகோபுரத்தின் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த புனரமைப்பு பணிக்கமைய தாதுகோபுரத்தை தரிசிப்பதற்கு வருகைத்தரும் பக்தர்கள் தங்குவதற்கு ஓய்வு விடுதியொன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பாதுகாப்பு செயலாளருமான கமல் குணரத்ன அவர்கள் உள்ளிட்ட செயலணி ஆலோசித்துள்ளது.

புனித பூமியை அழகுபடுத்துவதற்கு மரங்களை நடும் திட்டமும் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஆரம்பித்து வைத்த கௌரவ பிரதமர் நாக மரக்கன்றொன்றை நாட்டி வைத்தார்.

தாதுகோபுர அண்டத்தின் காவல் வளையங்கள் மற்றும் விகாரை மடம் (விகாரகெய) என்பன ‘நா உயன’ மடத்தின் பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய அகுல்கமுவே ஆரியநந்த தேரரின் அனுசாசனத்திற்கேற்ப, நா உயன அறங்காவல் சபையின் நிதி நன்கொடையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதற்கான ரூபாய் 76 மில்லியன் காசோலை ‘நா உயன’ அறங்காவல் சபையின் செயலாளரினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் தமன்கடுவ பிரதேச செயலக பிரிவின் பிரதான சங்கநாயக்கர் அரிசிமலே ஆரண்ய சேனாசனாதிபதி வணக்கத்திற்குரிய பனாமுரே திலகவங்ஷ தலைமை தேரர், ‘நா உயன ஆரண்ய’ மடத்தின் பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய அகுல்கமுவே அரியநந்த தேரர், வணக்கத்திற்குரிய பொரளந்தே வஜிரஞான தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமரின் தலைமையில் தீகவாவி தாதுகோபுர புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

http://athavannews.com/பிரதமரின்-தலைமையில்-தீகவ/

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக ஞாபகம் இல்லை, இது தமிழர்களின் பூர்வீக தாயகத்தின் ஒரு அங்கமான பொத்துவில் பகுதியில் அமைந்திருக்கிறதென்று நினைக்கிறேன். முஸ்லீம் குடியேற்றங்களினால், தமிழர்கள் விரட்டப்பட்டு இப்போது முஸ்லீம்களின் அனுமதியுடன் தீகவாபி என்று புத்த கோயிலைக் கட்டுகிறார்கள். இப்பகுதியில் பெளத்தர்கள் வாழ்ந்ததற்கோ அல்லது தாதுகோபங்கள் இருந்தமைக்கோ உண்மையான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அங்கே கண்டுபிடிக்கப்பட்ட சில புராதண சின்னங்களைப் புத்த சிங்களவர்களது என்று உரிமை கோரிக்கொண்டு இப்பகுதியில் தனது ஆக்கிரமிப்பினை சிங்கள்ப் பேரினவாதம் நடத்துகிறது.

தமிழர்களை முஸ்லிம்கள் அகற்றினார்கள். இப்போது முஸ்லிம்கள் அகற்றப்படுவார்கள். இதற்கன செயட்பாடு முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

தமிழர்களை முஸ்லிம்கள் அகற்றினார்கள். இப்போது முஸ்லிம்கள் அகற்றப்படுவார்கள். இதற்கன செயட்பாடு முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தாக்கள் போன அரசிலை சண்டை பிடிச்சவை இப்ப பொத்திக்கொண்டு இருக்கினம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

தமிழர்களை முஸ்லிம்கள் அகற்றினார்கள். இப்போது முஸ்லிம்கள் அகற்றப்படுவார்கள். இதற்கன செயட்பாடு முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிங்களப் பேரினவாதம் முழு நாட்டினையும் சிங்கள பெளத்தர்களாக மாற்ற செயற்பட்டு வருகிறது. தடுக்கத்தான் எவருமில்லை.

10 hours ago, alvayan said:

இந்தாக்கள் போன அரசிலை சண்டை பிடிச்சவை இப்ப பொத்திக்கொண்டு இருக்கினம்..

பொத்திக்கொண்டு இருக்கவேண்டியதுதான். சிங்கள தீவிரவாதிகள் இவர்களை மிகவும் வெறுக்கிறபடியால் இவர்களால் ஒன்றுமே செய்யமுடியாமலிருக்கிறது. வலிய போய் அரசுடன் ஒட்டிக்கொண்டாலும் அங்கேயும் எடுப்பதட்கு ஆட்கள் இல்லை. எதிர்க்கட்சியும் இவர்களை வெறுத்து வேறாக பாராளுமன்றில் அமரும்படி கூறிவிடடார்கள். இவர்களை ஒதுக்கினால்தான் சிங்கள மக்களின் ஆதரவை பெறலாம் என்ற நிலைமை. ஒரு இனத்துக்கு , மனிதனுக்கு மானம் , ரோசம் , கொள்கை என்று ஒன்று இருக்கவேண்டும். இவர்களுக்கு அப்படி ஒன்றுமே இல்லாதபடியால் குரங்கு போல பாய்ந்து திரிகிறார்கள். எதட்கும் ஒரு எல்லை உண்டு. இவர்களுக்கு எல்லையே இல்லை. எனவே அனுபவித்தே ஆக வேண்டும்.

9 hours ago, ரஞ்சித் said:

சிங்களப் பேரினவாதம் முழு நாட்டினையும் சிங்கள பெளத்தர்களாக மாற்ற செயற்பட்டு வருகிறது. தடுக்கத்தான் எவருமில்லை.

இந்த அரசு நிச்சயமாக சிங்களமயமாக்களில் தீவிரமாக இருக்கும். இவர்களுக்கு சிங்கள பவுத்த தீவிரவாதிகளின் ஆதரவு இருப்பதால் அதட்குரிய நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுப்பார்கள்.

இந்தியாவோ, உலக நாடுகளோ இதில் பெரிதாக அலட்டிக்கொள்ள சந்தர்ப்பம் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் நாட்டின்  நலனை முன்னிறுத்தியே அரசியல் செய்வதால் இலங்கை அரசு தப்பித்து கொள்ளும். ஒரே நாடு , ஒரே தேசம் என்பதுதான் அரசின் கொள்கை.

அரசு இப்போது அரச காணிகளை வழங்கப்போகின்றது , நிறைய காணிகள் வன்னியில் மாற்று இனத்தவர் பெறப்போகின்றார்கள். தமிழ் தலைமைகள் தமிழர் மத்தியில் விழிப்புணர்வு ஏட்படுத்தியதாக தெரியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.