Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

Featured Replies

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும்.

1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி…

அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்….

காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்….

ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்…..

அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்….

தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசதிபடைத்தவர்களின் தென்னந்தோப்புகளில் கிடுகு பின்னிக் கொடுத்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் காப்பாற்றி வருகிறார்.

அவரது மூத்த இரண்டு பிள்ளைகளும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக் கூடம் போவதற்கு கொப்பி வாங்க வேண்டும் என்று கேட்டு வந்தார்கள்.வறுமையிலும் கூட தனது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்பிய அந்தத்தாய் பணம் கிடைத்ததும் வாங்கித் தரலாம் என்று அவர்களுக்கு சமாதானம் சொல்லி வந்தார்.

அன்று ‘எப்படியும் கொப்பியுடன் பாடசாலைக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் வரக்கூhது’ என்று வாத்தியார் கண்டிப்பாக சொல்லிவிட்டதாக பிள்ளைகள் இருவரும் கூறிவிட்டார்கள். ‘பிள்ளைகளை பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிடுவார்களே’ என்ற பயந்து போன அந்தத் தாய் தான் கிடுகு பின்னும் வசதிபடைத்த ஒருவரின் வீட்டுக்கு சென்று காரணத்தைச் சொல்லி தனக்கு 10 ரூபா பணம் தரும்படி இரந்து கேட்கிறார்…

அவரது அவசரத்தை புரியாத அவர்கள் மரத்தில் இருந்து விழுந்த தென்னோலைகளை எடுத்து துரவுக்குள் (குளமும் அல்லாத கிணறும் அல்லாத ஒரு சிறு நீர் நிலை) ஊறப் போட்டுவிட்டு வருமாறு கூறுகிறார்கள்..

எப்படியும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்தத்தாய் ஓடி ஓடி தென்னோலைகளை இழுத்து இழுத்து அந்த விட்டு தென்னந்தேப்பின் மூலையில் இருந்த துரவுக்குள் போட்டுக் கொண்டிருந்த போது…..

சிங்கள வான்படையின் இரண்டு கிபீர் விமானங்கள் பேரிரைச்சலுடன் வந்து அந்தப் பகுதியில் குண்டுகளை போட்டுவிட்டுச் செல்கின்றன….

பேரிரைச்சல்…..இடி முழக்கம் போன்ற பாரிய வெடியோசை… அதைத் தொடர்ந்து… “ஐயோ என்ரை பிள்ளைகள்… என்ரை அம்மா…என்ரை அப்பா …”என்கின்ற அவலப் பேரொலிகள் காற்றைச் கிழித்துவர… அந்தத்தாயும் “ஐயோ என்ரை பிள்ளைகள்” என்று கத்திக் கொண்டு வீதிக்கு ஓடி வருகிறார்…..

அதன் பின் என்ன நடத்தது என்பதை அந்தத் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறேன்….

(2003 ம் அண்டு நான் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு சென்றிருந்த பொது அந்தத் தாயை சந்தித்த போது அவரது வாழ்வில் பேரிடியாக விழுந்த அந்த அவலத்தை அவர் கண்ணீருடன் விபரித்தார்….)

“நான் அவையின்ரை வீட்டை விட்டு வெளியே ஓடி வாறன்… ஓரே புழுதி மண்டலம்.. எல்லாரும் கத்திக் கதறிக்கொண்டிருக்கினம்…என்ர

வான்தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்கிற செய்தி இப்போது சாதாரணமாகிவிட்டது.

ஆனால் ஒரு உயிரின் விலையும் அதை இழந்தால் ஏற்படும் வலியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். உங்கள் கட்டுரை சம்பவத்தை நேரில் பார்த்தது போன்ற வேதனையைத் தருகிறது.

ஆயிரக்கணக்கான தமிழர்களின் வேதனைக்கும் கண்ணீருக்குமான விலையை சிங்களம் ஒருநாள் கொடுத்தே ஆகவேண்டும்.

Edited by லிசான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நவம்,லிஷான்!

அனுபவரீதியாக அனுபவித்தவர்களில் நானும் ஒருவன், இந்தக் கதை ஒருகணம் என்னை அசைத்துவிட்டது, ஆனால் மனதை தளற விடவில்லை.

நான் எப்போதும் முன்நோக்கிச் சிந்திப்பவன், செயல்படுபவன்.

எனக்கு நிறைய கடமைகள் இருப்பதால் சொந்தக்கதையை பதிவு செய்ய விரும்பவில்லை.

நாம் யாரிலும் நோகக்கூடாது, இழப்புக்களைக் கண்டு மசியக்கூடாது ஆனால் இழப்புக்கள் தொடரக்கூடாது.

இதுதான் எனது சிந்தனை.

அந்த அப்பாவிகளுக்கு எனது நினைவஞ்சலியை செலுத்துகின்றேன்.

எல்லா தமிழ் உறவுகளின் மனதிலும் இவ்வாறு நிறைய சுமைகள் இருக்கின்றன. தமிழனாக நாம் பிறந்த பெருமை எதிரியை கீழ்த்தனமாக செயற்பட வைக்கின்றது.

விரைவில் எல்லாவற்றிற்கும் விடைகள் கிடைக்கும்.

அனைத்து உறவுகளிற்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.