Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதியோப்பிய அரசிற்கு எதிராகத் திரும்பிய இராணுவ வீரர்கள்550 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதியோப்பிய அரசிற்கு எதிராகத் திரும்பிய இராணுவ வீரர்கள்550 பேர் பலி

202011131945068959_Tamil_News_Ethiopias-
 99 Views

கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எதியோப்பியாவில், நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகின்றார். இவர் 2018இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார்.

எதியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணத்தில் சூடான், எரித்திரியா ஆகிய நாடுகளின் எல்லையோரம் அமைந்துள்ளது. இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் டிக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எதியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும் அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எதியோப்பிய இராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்தனர்.

டிக்ரே மாகாணத்தைச் சேர்ந்த 2 இலட்சத்து 50ஆயிரம் பேர் எதியோப்பிய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் சிலர் எதியோப்பிய இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

இந்த மாகாணத்தை எதியோப்பியாவிலிருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு டிக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும் செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை 2018இல் அபே அகமது பிரதமராக பதவியேற்றது தொடக்கம் டிக்ரேயன்ஸ் எதியோப்பிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இதனால் மத்திய அரசிற்கும் டிக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தன. இதன் உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிக்ரே மாகாணத்தில் இருந்த டிக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவப் பிரிவினர் எதியோப்பியாவின் மத்திய அரசிற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். டிக்ரே மாகாணத்தில் உள்ள இராணுவ நிலைகளையும், ஆயுதக் கிடங்குகளையும் டிக்ரேயன்ஸ் கைப்பற்றினர். இதற்கு எதியோப்பிய இராணுவத்தின் உயர் பொறுப்புக்களில் இருந்த டிக்ரேயன்ஸ் சமூகத்தினரும் உதவி செய்தனர். இதனால் டிக்ரே மாகாணம் எதியோப்பிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. அத்துடன் டிக்ரேயன்ஸ் எதியோப்பிய அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலைமையை சமாளிக்க நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் இருந்த இராணுவத்தினரை டிக்ரே மாகாணத்திற்கு பிரதமர் அபே அகமது களமிறக்கினார். அங்கு டிக்ரேயன்ஸ் சமூகத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களும், இராணுவத்தினரும் இணைந்து மத்திய படையினருக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோதலில் டிக்ரேயன்ஸ் சமூக இராணுவ கிளர்ச்சியாளர்கள் 550பேர் உயிரிழந்துள்ளதாக எதியோப்பிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிற்குமிடையே மோதல் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/எதியோப்பிய-அரசிற்கு-எதிர/

 

எத்தியோப்பியாவில் நடைபெறும் மனித படுகொலைகள் -சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

 
1-76-696x484.jpg
 49 Views

எத்தியோப்பியாவின் வட பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

எத்தியோப்பியாவின் வட பிராந்தியத்தில் உள்ள டிக்ரே பகுதியில் உள்நாட்டு மோதல்  நடைபெற்று வருகின்றது. கடந்த சில நாட்களாக இந்த மோதல்களால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.

பெடரல் அரசிற்கும் டிக்ரே மாகாணத்தை ஆட்சி செய்யும் டிக்ரே மக்கள் முன்னணிக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

மோதலை கட்டுப்படுத்துவதற்கு எத்தியோப்பிய அரசு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதல்களினால் கடந்த 9 ஆம் திகதி பெருமளவானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் அவற்றை உறுதிப்படுத்துவதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

மோதல்களினால் எத்தியொப்பியாவை சேர்ந்த சுமார் 7000 இற்கும் மேற்பட்டோர் அண்டை நாடான சூடானுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/எத்தியோப்பியாவில்-நடைபெ/

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியாவில் நடைபெறும் மனித படுகொலைகள் -சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

 

அட போங்கடா

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அட போங்கடா

இவர்களும் இவர்களது குற்றச்சாட்டும். பிணந்தின்னிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியாவில் தீவிரமடையும் உள்நாட்டு போர் – 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சூடானில் தஞ்சம்!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடான சூடானில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

டைக்ரே மாகாணத்தில் அரசுக்கும் போராளிக் குழுவினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதனால் அங்கு தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் அந்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், எல்லையில் உள்ள டெகெஷே நதியைக் கடந்து சூடானின் ஹம்தயாத் நகரில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

http://athavannews.com/எத்தியோப்பியாவில்-தீவிர/

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு - 34 பேர் பலி || Tamil News Gunmen Kill 34  In Attack On Bus In West Ethiopia

எத்தியோப்பியாவில் பேருந்து மீது கொடூர தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் பேருந்து மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதேவேளை, சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் சூடான், தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அங்கு இன ரீதியிலான மோதல்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பெனிஷாங்குல்-குமுஸ் பிராந்தியத்தில் பயணிகள் பேருந்தொன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த பகுதியில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

http://athavannews.com/எத்தியோப்பியாவில்-பேருந/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.