Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமையை வன்மையாக கண்டிக்கிறேன்- அங்கஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறியத் தயார் ; அங்கஜன் |  Virakesari.lk

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமையை வன்மையாக கண்டிக்கிறேன்- அங்கஜன்

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால், கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கிற்காக முன்னிலையாகிய  யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைபடுத்தும் முகமாக ‘சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நீதிமன்றில் கருத்து கூறியிருந்தார்.

கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தினால், துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவரது கருத்தானது, அனைத்து இலங்கை நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஒரே சட்டத்தால் பரிபாலிக்கும் பொலிஸ்துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தை குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின்போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு, இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழ்-மக்களின்-உணவு-பழக்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

126983210_3472272459489296_6198870545384676289_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=cPuWbcBpJ3AAX8KttqS&_nc_oc=AQkH9sSrSiCdL7_ibXPGZDZ2zHAmq6_Pzk-t5yWENm1mhrI0vFBggwQLcDbY9BKUIMQ&_nc_ht=scontent-frt3-2.xx&oh=c05963e804e6e373cb0d7f6fbbf209cd&oe=5FE0D86C

புட்டுத்தான்... தமிழரின் விருப்ப உணவு  என்பதை... சுமந்திரன் காட்டிய போது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின்போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு, இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஞ்ச பாற்ரா இவரின் கவலையை. வடக்கின் வசந்தம் சொல்லுது, சகல இன மக்களின் பாதுகாப்புக்கு இராணுவம் உழைக்குதாம். இவர் சொல்லுறார் இன ஐக்கியத்தை குழப்புதாம். இந்த துப்புக்கெட்ட பொலிஸ் அதிகாரியின் பொறுப்பற்ற பேச்சை வைத்து தேர்தலில் வென்றுவிடுவினமாம்.  அதுதான் அவரின் கோபம், கவலை  எல்லாம்., அதென்ன போராட்டத்தை மதிக்காதவர்களும் காட்டிக்கொடுத்தவர்களும் விழுந்தடித்து மடிந்த உறவுகளுக்கு விளக்கேத்துகினம், ஒருவர் தமிழ் பேசவேண்டும் என்று அடம்பிடிக்கிறார், இவர் என்னடா என்றால் ஒரு புத்தி கெட்டது சொன்ன பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறார் என்று பாத்தா; மாகாண சபை தேர்தல் வருக்குதாமல்ல. சலுகைக்கு ஒரு பேச்சு, தேர்தலுக்கு மக்களை ஏமாத்த வேறு  ஒரு பேச்சு, வவ்வால் அரசியல். 

அவர்கள் புக்கை (சிங்களத்தில் இதன் அர்த்தம் என்ன எண்டு மட்டும் கேட்க்காதீர்கள், அவர்களிடம் பேசும்போது கிரி பத் என்று சொல்லுங்கள்) சாப்பிடலாம் என்றால் நாங்கள் ஏன் பிட்டும் வடையும் சாப்பிட முடியாது. அதட்கான நியாயமான எதிர்ப்பை நீதிபதி முன்னாலே வெளியிடட ஜனாதிபதி சடடதரணி சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.