Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த அரசு தடையாக இருக்கிறது . கலையரசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த அரசு தடையாக இருக்கிறது . கலையரசன்

  • November 25, 202011:23 a

E30ECBAF-0B20-4079-B544-89BDB83B86C8-300

ஏரூர் தில்லை

விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். 

இன்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். 

மேலும் தெரிவிக்கையில்…

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி மற்றும் மாவீரர் கல்லறைகளை உடைத்து வருவதோடு பொது மக்கள் குறித்த பகுதிக்குள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் இருப்பது மீளவும் எம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

மரணித்தவர்களை நினைவு கூர முடியாமல் தடுக்கின்ற விடயம் என்பது மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாகவே பார்க்கின்றேன். அஞ்சலி செலுத்த முடியாமல் தடுக்கின்ற செயற்பாடுகள் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை எவ்வாறு கையாளுகின்றது என்பதை உணர்த்துகிறது.

மக்கள் உள்ளங்களில் இருக்கின்ற தியாகங்களை உள்ள குமுறல்களை வெளிப்படுத்த முடியாத வகையில் இந்த அரசு தடையாக இருக்கின்றது.இந்த அரசு பதவியேற்ற கையோடு இறுக்கமான கெடுபிடிகளை கையாள்வது இந்த நாட்டில் ஜனநாயகம் தமிழ் மக்களுக்கான தீர்வு ,தமிழ் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் எதிர்காலத்தில் உருவாக போகின்றது என்பதற்கான அடி அத்தியாயமாகத்தான் இந்த விடையம் விளங்குகின்றது. 

எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலயங்களில் பூஜை செய்யக்கூடாது என ஆலய குருமார் ,நிருவாகத்தினரை அச்சுறுத்தி வருகின்றனர். 

ஜே.வி.பி கட்சியின் மறைந்த தலைவர் ரோஹண விஜேயவீர போன்றோரை அனுஷ்டிக்க முடியும் என்றால் ஏன் தமிழ் மக்கள் அனுஷ்டிக்க முடியாது .

அம்பாறை மக்களுக்கு விடிவை பெற்று தர போகின்றேன் என்ற கருணா முடிந்தால் அனுஷ்டிக்க அனுமதியை பெற்றுத்தர முடியுமா?இதனை விடுத்து பொத்துவில் கனகர் கிராம மக்களை குடியேற்றம் விடையத்தில் அரச அதிபருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அந்த மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இதனை குழப்பும் வகையில் கருணா அந்த இடத்திற்கு சென்றுள்ளார். எமது மக்களை குழப்ப வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை விடையம் மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது . அந்த மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அராஜக செயற்பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தீர்வை பெற்றுதர முடியாதவர் அம்பாறை மக்களுக்கு எதனை சாதிக்க போகின்றார் என கேள்வியெழுப்பினார்.
 

 

https://www.meenagam.com/மக்கள்-உள்ளக்குமுறல்களை/

நீங்கள் இப்படி கூறி தப்பிக்க முடியாது. தமிழ் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அரசியலுக்கு வந்த பின்னர் பொத்தாம் பொதுவாக பேசிக்கொண்டு திரிய முடியாது. நீங்கள்தான் அதட்கு தீர்வையும் கொடுக்க வேண்டும். இந்த அரசைபற்றி நாங்கள் சொல்லி தெரியவில்லை. எனவே அரசியல் தலைமைகள் இப்படி பேசுவது நாகரீகமாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

நீங்கள் இப்படி கூறி தப்பிக்க முடியாது. தமிழ் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அரசியலுக்கு வந்த பின்னர் பொத்தாம் பொதுவாக பேசிக்கொண்டு திரிய முடியாது. நீங்கள்தான் அதட்கு தீர்வையும் கொடுக்க வேண்டும். இந்த அரசைபற்றி நாங்கள் சொல்லி தெரியவில்லை. எனவே அரசியல் தலைமைகள் இப்படி பேசுவது நாகரீகமாக தெரியவில்லை.

இவர்கள் பேசித்தான் காலத்தைக் கழிக்கிறார்கள் என்று இந்த இடத்தில் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன் 🧐🧐

20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் பேசித்தான் காலத்தைக் கழிக்கிறார்கள் என்று இந்த இடத்தில் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன் 🧐🧐

இவர்களை நம்பும் மக்கள்தான் இதட்கு பதில் கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Robinson cruso said:

இவர்களை நம்பும் மக்கள்தான் இதட்கு பதில் கூற வேண்டும்.

போனஸ் எம்பி ஆனவர்தானே அம்மக்கள் நம்பக்கூடும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.