Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடூரமாக கொலை செய்த காரணத்தினாலா அரசாங்கம் நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது - சுமந்திரன் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 

எமது மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கின்றனர். அதனை தடுப்பது துரதிஸ்டவசமானதும் எமது மக்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

அரசாங்கம் ஏன் நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது. அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா நினைவேந்தளுக்கு அஞ்சுகின்றீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாதம் இது, அதனால் தான் பொப்பி மலர் பயன்படுத்துவோம். அதேபோல் கடந்த 30 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்தவர்களையும் நினைவுகூர வேண்டும்.

ஒரே நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்களாக இருந்தாலும் அவர்களை நிறைவுகூர வேண்டியது, அவர்கள் நீண்ட காலமாக நினைவுகூரப்பட்டும் வருகின்றனர்.

ஆனால் இன்று திடீரென அவசர நிலைமையொன்று உருவாகியுள்ளது. சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஹெலிகொப்டரில் யாப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளுக்கு சென்று இவற்றை கண்காணிப்பதாக தெரிகின்றது.

அதேபோல் தனிமைப்படுதல் சட்டத்தையும் கவனத்தில் கொள்ளது அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். நினைவேந்தளின் போது உண்மையாகவே எமது மக்கள் தமது உறவினர்கள், பெற்றோர், பிள்ளைகளை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கின்றனர். அதனை தடுப்பது துரதிஸ்டவசமான செயற்பாடகும். இது எமது மக்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது, அனுஷ்டிப்பது எமது கலாசாரத்தில் முக்கியமானதும்  மதிக்கத்தக்க விடயமாகும். நீங்கள் ஏன் உயிரிழந்தவர்களை நினைத்து அஞ்சுகின்றீர்கள்.

அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா, அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா நினைவேந்தளுக்கு அஞ்சுகின்றீர்கள்.

சுயாதீனம் என்பது சகலருக்கும் பொருந்தக்கூடியது. பெரும்பான்மையினருக்கு மாத்திரம் இது பொருந்தாது. அவ்வாறு நடைபெறுமானால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமக்கான சுயாதீனத்தை தேடிக்கொள்ள நினைப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த நாடு ஆக்கிரமிப்புகளுக்கு பின்னரே ஒரு நாடாக மாறியது. இந்த நாட்டில் பல்வேறு வர்க்க மக்கள் உள்ளனர். எனவே சுயாதீனம் என்பது சகலருக்கும் இருக்க வேண்டிய ஒன்றாகும். மாறாக அரசாங்கம் மாத்திரம் அதனை கையில் எடுத்துக்கொண்டு சர்வதேச சட்டங்களை மீற முடியாது என்றார். 

கொடூரமாக கொலை செய்த காரணத்தினாலா அரசாங்கம்  நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது - சுமந்திரன் கேள்வி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

  அவர்கள் தங்கள் பயங்கரவாதத்திற்கு  எதிராக போராடினார்கள்  என்று ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்கள்தான் பயங்கரவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. மாவீரரை ஏற்றுக்கொண்டால் பிரச்சனையை தீர்க்கவேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். 

சுமந்திரன் அன்று விடுதலைப்போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று  சொல்லிவிட்டு இன்று  அவர்களை நினைவு கூர அனுமதி தாருங்கள் என்று கேட்டால், சிங்களவன்  இவரை பரிகசிப்பானா இல்லையா? அவர் அரசியலின் இருப்புக்காக இவ்வாறு மாத்தி, மாத்தி  பேசுகிறார் என்றே சொல்வான். உண்மையும் அதுதானே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, satan said:

  அவர்கள் தங்கள் பயங்கரவாதத்திற்கு  எதிராக போராடினார்கள்  என்று ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்கள்தான் பயங்கரவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. மாவீரரை ஏற்றுக்கொண்டால் பிரச்சனையை தீர்க்கவேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். 

சுமந்திரன் அன்று விடுதலைப்போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று  சொல்லிவிட்டு இன்று  அவர்களை நினைவு கூர அனுமதி தாருங்கள் என்று கேட்டால், சிங்களவன்  இவரை பரிகசிப்பானா இல்லையா? அவர் அரசியலின் இருப்புக்காக இவ்வாறு மாத்தி, மாத்தி  பேசுகிறார் என்றே சொல்வான். உண்மையும் அதுதானே? 

 

5 hours ago, Paanch said:

 

இன்னும் சுமந்திரனுக்காக வக்காளத்து வாங்கும் கூட்டம் புலம்பெயர் தேசங்களில் இருப்பது கவலைக்குரியது மட்டுமல்ல இலங்கை தமிழர்களுக்கு அபாயகரமானதும் கூட....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இன்னும் சுமந்திரனுக்காக வக்காளத்து வாங்கும் கூட்டம் புலம்பெயர் தேசங்களில் இருப்பது கவலைக்குரியது மட்டுமல்ல இலங்கை தமிழர்களுக்கு அபாயகரமானதும் கூட....

புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்ல, இலங்கையிலும் உள்ளார்கள். ஏன் யாழ்களத்திலும் சிலது புகுந்திருக்கிறதே....🧐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.