Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர ஏன் பேஸ்புக் தடை விதிக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர ஏன் பேஸ்புக் தடை விதிக்கிறது?
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர ஏன் பேஸ்புக் தடை விதிக்கிறது? ஈழத் தமிழர்களின் பதிவுகளை நீக்கியதற்கு என்ன காரணம் சொல்கிறது பேஸ்புக்? படிக்க  https://bbc.in/3oi9Igy
 
 

LTTE தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? - பிபிசி தமிழுக்கு ஃபேஸ்புக் பிரத்யேக பதில்

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
 
விடுதலைப்புலிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சர்ச்சையாகி வரும் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழ், ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.

இந்த சர்ச்சையின் பின்னணி குறித்தும், அதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் அளிக்கும் விளக்கத்தையும் இந்த கட்டுரையில் காண்போம்.

ஃபேஸ்புக் மீதா பயனர்களின் குற்றச்சாட்டு

மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க தலைவரான மறைந்த பிரபாகரனின் புகைப்படத்துடன் இடப்பட்ட பதிவுகள், அவரை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளிட்டவற்றையும், இலங்கை உள்நாட்டுப் போர் சார்ந்த சில பதிவுகளையும் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து நீக்கி வருவதுடன், அவற்றை பதிவிட்டவர்கள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த நிறுவனம் எடுத்து வருவதாக சில ஆண்டுகளாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து, பலரும் பிரபாகரன் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்தபோது இதே அணுகுமுறையை ஃபேஸ்புக் நிறுவனம் கையாண்டதாக கூறப்படுகிறது.

உதாரணமாக, கனடாவை சேர்ந்த நீதன் சண் என்பவர், “சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஈழத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் எனது இடுகையை பேஸ்புக் நீக்கியுள்ளது. மேலும், நான் அடுத்த 30 நாட்களுக்கு ஃபேஸ்புக்கில் நேரலை அல்லது விளம்பரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. தங்களது நிறுவனத்தின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் எடுத்துள்ளது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், மற்ற விவகாரங்களில் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு குறித்து தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுபோன்ற தணிக்கைகள் தனது கருத்துரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, Jæs J Wiki என்ற பெயரில் செயல்படும் ஃபேஸ்புக் பயனர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபாகரனின் பிறந்த தினத்தன்று அவரது புகைப்படத்தை பகிர்பவர்கள் மீது ஃபேஸ்புக் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. யாராவது பிரபாகரனின் புகைப்படத்தையோ அல்லது அவரது சகாக்களின் புகைப்படத்தையோ பகிர்ந்தால் அதை கண்டு கலக்கமடையும் ஃபேஸ்புக், அவர்களின் கணக்குகளை தற்காலிகமாக தடை செய்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

பிரபாகரனுடன் அரசியல்/ கருத்தியல் சார்ந்து வேறுபாடுகள் இருந்தாலும், இதுபோன்று பதிவுகளை ஃபேஸ்புக் தணிக்கை செய்வதும், பயனர்கள் எதை பகிர வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதும் பாசிசத்தின் தீவிர சமிக்ஞை என்று அவர் மேலும் தனது பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அதிருப்தியை சமீபத்திலும், கடந்த காலங்களிலும் பலரும் ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்தி வருவதை காண முடிகிறது.

 

பிரபாகரன் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தடுப்பது ஏன்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரன் சார்ந்த உள்ளடக்கங்களை பதிவிட்டதற்காக தனிப்பட்ட நபர்களின் ஃபேஸ்புக் பதிவுகள், கணக்குகள் மட்டுமின்றி சில ஃபேஸ்புக் பக்கங்களும் இதே போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பிபிசி தமிழ் நேரடியாக முன்வைத்த கேள்விகளுக்கு பொதுப்படையான பதிலை வழங்கிய ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர், “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கியமான கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் ஃபேஸ்புக்கிற்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெறுப்பையோ அல்லது வன்முறையையோ பரப்பும் வகையில் தங்கள் தளம் பயன்படுத்தப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

எனினும், ஒரு குறிப்பிட்ட இயக்கம் அல்லது தனிப்பட்ட நபர் வன்முறைக்கு வித்திட்டார் என்பதை எதனடிப்படையில் ஃபேஸ்புக் முடிவு செய்கிறது என்ற கேள்விக்கு, “வெறுப்பை தூண்டும் அமைப்புகளை பட்டியலிடுவதற்கு நாங்கள் ஒரு விரிவான செயல்முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த செயல்முறையைச் செம்மைப்படுத்த உலகெங்கிலும் உள்ள பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்” என்று ஃபேஸ்புக் பதிலளித்துள்ளது.

உதாரணமாக, இனம், மத சார்பு, தேசியம், பாலினம், பாலியல் நாட்டம், கடுமையான நோய் அல்லது இயலாமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுத்த அல்லது நேரடியாக வன்முறையில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் அவற்றின் தலைவர்களை வெறுப்புணர்வை தூண்டும் அல்லது ஆபத்தான இயக்கங்கள்/ தலைவர்களாக வகைப்படுத்துவதாக ஃபேஸ்புக் மேலும் விளக்கம் அளித்துள்ளது.

“ஆபத்தான அமைப்புகளை தடைசெய்யும்போது, அவற்றின் இருப்பை அகற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும், எங்கள் கண்டறிதல் முறைகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”

வெறுப்புணர்வை தூண்டும் திட்டமிடப்பட்ட செயலுக்கு எதிரான ஃபேஸ்புக்கின் கொள்கையை மீறியதற்காக நீக்கப்படும் பெரும்பாலான உள்ளடக்கங்களுக்கு தாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உள்ளடக்க மதிப்பாய்வே காரணம் என்றும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஒரு குழுவை சேர்ந்த பலரை ஒரே நேரத்தில் நீக்குவதற்கான பணியிலும் ஃபேஸ்புக் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஃபேஸ்புக் பயனர்களின் பதிவுகள், ஃபேஸ்புக்கின் ஆபத்தான அமைப்புகள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் அவற்றை நீக்கியது சரியே என ஃபேஸ்புக் உறுதியாகக் கூறுகிறது.

எனினும், ஃபேஸ்புக்கில் பயனர்கள் பகிர்வதற்கு அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்கள், தலைவர்கள் மற்றும் விவகாரங்களின் ஒட்டுமொத்த பட்டியலை அளிக்க பிபிசி விடுத்த வேண்டுகோளுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/science-55151717?fbclid=IwAR34fAIbbMGQnEbB-Nc2EAbMASMUatAVy-GjYtV_VTSQxOLxEnoEdTXy5HY

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:
 
 

இதுதொடர்பாக பிபிசி தமிழ் நேரடியாக முன்வைத்த கேள்விகளுக்கு பொதுப்படையான பதிலை வழங்கிய ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர், “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கியமான கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் ஃபேஸ்புக்கிற்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 

வன்முறையை நேரடியாக ஆதரித்த அல்லது செயல்படுத்திய காரணத்தால் போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்கள், விபரங்கள், அனுமதிகளையும் முகப்புத்தகம் நீக்கும் சாத்தியத்தை இந்த விளக்கம் காட்டுகிறது. ஆகவே, வாடிக்கையாளர்கள் இவ்வாறான போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களின் விபரங்களை முகப்புத்தகத்துக்கு வழங்கி, அவ்வாறு வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். முகப்புத்தகம் போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்கள், விபரங்கள், அனுமதிகளை அகற்றாவிட்டால் ஐரோப்பிய யூனியன், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் முகப்புத்தகத்துக்கு எதிராக வழக்கு தொடரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் வந்த காலத்தில் இருந்து நாமளும் தான் பகிரிரம் தலைவரின் படம்.. செய்திகளை அகற்றவே இல்லையே.

பிரச்சார நோக்கி வைக்கிறதை அகற்றினம்.

அண்மையில் டொனால்ட் ரம் அவர்களின் பிரச்சார நோக்கிலான பதிவுகளை பேஸ்புக் ருவிட்டர் அகற்றி இருந்தன. 

ஆதலால்.. டொனால்ட் ரம் வன்முறைக்கு வித்திட்டவராவார். உலகிலேயே அதிக அகதிகளை உருவாக்கிய ஒபாமா.. சாமாதானத்துக்கு வித்திட்டவராவார் என்று வியாக்கியானம் செய்யவும் ஆக்கள் இருக்கினம்.

பேஸ்புக் காரன் ஒரு வியாபாரி. அவனுக்கு சமூகங்களின் மீது அக்கறை கிடையாது. உதாரணத்துக்கு.. பெருமளவு கணனி விளையாட்டுக்களை உற்பத்தி செய்தி விற்பனை செய்து ஆண் இளம் சந்ததியின் மீதான கல்வி நாட்டத்தை உலக அரங்கில் வீழ்த்தச் செய்த பில்கேட்ஸ்.. தனது பிள்ளைகளுக்கு கேம் விளையாட அனுமதி கொடுக்கவில்லை. இப்படித்தான் இவங்கள் செய்யுற வியாபாரம் உள்ளது.

இப்ப கூட பில்கேட் உலக வறுமையை போக்க எல்லோருக்கும் சத்தான உணவு வழங்கும் திட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்து பிரபல்யம் தேடிக் கொண்டார். ஆனால்.. கொவிட் 19 வந்ததும்.. உணவுத்திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியில் பல பகுதிகளை கொவிட் தடுப்பூசி கண்டுபிடிக்க ஆராய்ச்சிக்கு ஒதுக்கி சரியும் தனது வியாபாரத்துக்கு முட்டுக்கட்டை கொடுக்க முயன்றுள்ளார். இவங்களை எல்லாம் நம்பிக்கிட்டு.

மாவீரர்களை நினைவு கூற நாம் எமது தனித்துவத்துடன் கூடிய ஒரு தனி பிளட் போமில் ஒரு வலையமைப்பை உருவாக்கி வைத்திருப்பது நல்லது. ரஷ்சியா போல. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

பேஸ்புக் வந்த காலத்தில் இருந்து நாமளும் தான் பகிரிரம் தலைவரின் படம்.. செய்திகளை அகற்றவே இல்லையே.

பிரச்சார நோக்கி வைக்கிறதை அகற்றினம்.

அண்மையில் டொனால்ட் ரம் அவர்களின் பிரச்சார நோக்கிலான பதிவுகளை பேஸ்புக் ருவிட்டர் அகற்றி இருந்தன. 

ஆதலால்.. டொனால்ட் ரம் வன்முறைக்கு வித்திட்டவராவார். உலகிலேயே அதிக அகதிகளை உருவாக்கிய ஒபாமா.. சாமாதானத்துக்கு வித்திட்டவராவார் என்று வியாக்கியானம் செய்யவும் ஆக்கள் இருக்கினம்.

பேஸ்புக் காரன் ஒரு வியாபாரி. அவனுக்கு சமூகங்களின் மீது அக்கறை கிடையாது. உதாரணத்துக்கு.. பெருமளவு கணனி விளையாட்டுக்களை உற்பத்தி செய்தி விற்பனை செய்து ஆண் இளம் சந்ததியின் மீதான கல்வி நாட்டத்தை உலக அரங்கில் வீழ்த்தச் செய்த பில்கேட்ஸ்.. தனது பிள்ளைகளுக்கு கேம் விளையாட அனுமதி கொடுக்கவில்லை. இப்படித்தான் இவங்கள் செய்யுற வியாபாரம் உள்ளது.

இப்ப கூட பில்கேட் உலக வறுமையை போக்க எல்லோருக்கும் சத்தான உணவு வழங்கும் திட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்து பிரபல்யம் தேடிக் கொண்டார். ஆனால்.. கொவிட் 19 வந்ததும்.. உணவுத்திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியில் பல பகுதிகளை கொவிட் தடுப்பூசி கண்டுபிடிக்க ஆராய்ச்சிக்கு ஒதுக்கி சரியும் தனது வியாபாரத்துக்கு முட்டுக்கட்டை கொடுக்க முயன்றுள்ளார். இவங்களை எல்லாம் நம்பிக்கிட்டு.

மாவீரர்களை நினைவு கூற நாம் எமது தனித்துவத்துடன் கூடிய ஒரு தனி பிளட் போமில் ஒரு வலையமைப்பை உருவாக்கி வைத்திருப்பது நல்லது. ரஷ்சியா போல. 

உண்மை நெடுக்ஸ், ஏதோ பேஸ்புக்கை நம்பித்தான் எமது போராட்டம் தொடங்கியதாக நினைப்பு.

மாற்றுவழிகள் பல உண்டு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.