Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க!' - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO

Hug

Hug

நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'.

நாம் பிறர் மேல் வைத்திருக்கும் அன்பையும் அரவணைப்பையும் அவர்களைக் கட்டிப்பிடித்து வெளிப்படுத்த விரும்புவோம். வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தோம். நடுவில் கொரோனா வந்த பிறகு இந்த 'கட்டிப்பிடி வைத்தியத்திற்கு' இடைவேளை விட வேண்டி வந்தது. சில மாதங்கள்வரை 'ஹக்' கலாசாரத்தையும் மறந்திருந்தோம்.

தொடுதல்
 
தொடுதல்

தற்போது கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகளாலும் மற்றவர்களின் ஸ்பரிசம் இல்லாத காரணத்தால் ஏற்படும் ஸ்கின் ஹங்கர்(Skin hunger-`சருமத் தேடல்' அல்லது `தொடுதலுக்கான ஏக்கம்') பிரச்னையாலும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. பிடித்தவர்களைத் தொட்டும் அணைத்தும் பேசத் தொடங்கிவிட்டோம். இந்தப் பழக்கம் கொரோனாவால் ஏற்படும் அடுத்த சுற்று பாதிப்புக்குத் திறவுகோலாக இருந்துவிடக்கூடும். அதனால் நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதைத் தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'.

 

கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதால், 'சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்' என்ற விதிமுறை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது WHO. ஏனெனில் இனி வருவது விழாக்காலம். அடுத்து வரும் தினங்களில் கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப் பிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.

WHO
 
WHO

இவை உலகம் முழுவதுக்குமான பொதுவான பண்டிகைகள். அதனால் பல்வேறு இடங்களில் நண்பர்களும் உறவினர்களும் ஒன்றுகூட நேரிடும். அப்போது ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவதாலும் கட்டிப்பிடிப்பதாலும் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கொரோனா பாதிப்பில் இரண்டாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை மனதில் கொண்டு பிறரைக் கட்டிப்பிடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

 

 

கூட்டமாகச் சேர்ந்து உணவு உண்ண வேண்டாம். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஒரே இடத்தில கூடுவதைத் தவிர்த்திடுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்கின்றனர் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.

corona
 
corona AP Photo / Channi Anand

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'சமூக இடைவெளியை' கடைப்பிடிக்கும் மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த லட்சணத்தில் இருக்கிறது நிலைமை. முக்கால்வாசி பேர் மாஸ்க் அணியாமலே சாலைகளில் நடமாடிக்கொண்டிருக்கின்றோம். ரியாலிட்டி ஷோக்களில் வரும் நடிகர்கள் கட்டிப்பிடித்துப் பேசுவதைப் பார்த்துவிட்டுக் கட்டிப்பிடி வைத்தியத்தை மீண்டும் கையிலெடுக்கத் தொடங்கிவிட்டோம். இந்நிலையில் பண்டிகைகள், திருமண விழாக்களை முன்னிட்டு மக்கள் ஒன்றாகக் கூடும்போது கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவக்கூடும். அதனால் நிலைமையை உணர்ந்து WHO விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை மனதில் கொள்வோம்! சமூக இடைவெளியை கடைப்பிடித்திடுவோம்!

 

https://www.vikatan.com/health/healthy/dont-hug-the-health-advisory-issued-by-world-health-organization

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி நடு வீட்டுக்குள்ளையும் மாஸ்க் கட்டச்சொல்லி சட்டம் கொண்டுவருவாங்கள் போல கிடக்கு.......

இயற்கையை அவமதித்து அழிப்பதால் கடவுள் விதிக்கும் தண்டனை கொரோனா....

இவ்வாறான நோய்கள் மனித குலத்தை தாக்குவது இது முதற்தடவையல்ல. 14 நூற்றாண்டில், அதாவது 1347 ல் ஆரம்பித்த பிளேக்  நோயால் ஏறக்குறைய 200 மில்லியன் மக்கள் இறந்தார்கள்.

18 ம் நூற்றாண்டில் யாழ்பாணத்தை வாந்தி பேதி  நோய் தாக்கியபோது பலர் மாண்டனர். அப்போதெல்லாம்,  மக்கள் நவீன சாதனங்களை பயன்படுத்தவில்லை. 

கி.மு 500 ம் ஆண்டில்,  அதாவது ரோமர்களின் ஆட்சிகாலத்திலேயே இவ்வாறான நோய்களால் மக்கள் இறந்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

மனிதன் இயற்கையை அழித்தான்  அதனால் கடவுள் என்பவன்  கொரோனாவை  உருவாக்கினான்  என்பது போன்ற **** புலுடாக்களை அறிவுள்ள மனிதர்கள் நம்ப மாட்டார்கள். ஆகவே இப்படியான தமது கற்பனையில்  இவ்வாறான புலுடாக்களை விடுபவர்கள் உலக வரலாற்றை திரும்பி பார்ககவேண்டும். இவ்வாறான மூடக்கதைகளை கூறுவதன் மூலம் அறிவுடை சந்ததியை உருவாக்க முடியாது. 

15 ம் நூற்றாண்டின் பின்னர்தான் அறிவியல் மறுமலர்சசி உருவாக தொடங்கியது. அதன் வளர்ச்சி சிறிது சிறிதாக வேகமெடுத்து தற்போதைய காலத்துக்கு  ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தான் இன்றைய நவீன சாதனங்களை மனிதன் பயன்படுத்த தொடங்கினான். அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முனபே தொற்று நோய்களின் தாக்கம் தொடங்கி விட்டதை உலக வரலாறு பதிவு செய்துள்ளது. சரியாக ஆராய்ந்தால் பூமியில் உயிரினங்கள் பரிணாம வளர்சியில் உருவாகும் வேளையிலேயே நுண்ணுயிர்களும் உருவாகத் தொடங்கி விட்டது. மனித இனம்  உருவாகிய போதே நோய்களின் தாக்கமும் தொடங்கி விட்டது. உண்மை இப்படி இருக்க அறிவியல் வளரச்சி  உருவாக்கிய சமூக வலைத்தளங்களில் இவ்வாறான மூடத்தனங்களை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது. 

On 10/12/2020 at 07:17, குமாரசாமி said:

இயற்கையை அவமதித்து அழிப்பதால் கடவுள் விதிக்கும் தண்டனை கொரோனா....

 

Edited by நிழலி
ஒரு சொல் நீக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.