Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல்

[புதன்கிழமை, 13 யூன் 2007, 14:04 ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது.

இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போரில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே சம இடைவெளியை கொண்டுள்ள இந்தியா, தற்போது இலங்கை இராணுவத்துக்கு பக்கபலமாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைதி திரும்பும் நடவடிக்கைகளில் சில வெளிநாடுகள் ஈடுபடுவது, ஓரளவு மட்டுமே பயன்தரும் என்பதை உலக நாடுகளும் உணர்ந்துள்ளன. நோர்வே நாடு, எடுத்த அமைதி முயற்சி தோல்வியடைந்ததும் இதனால்தான். இலங்கை பிரச்சினையில் எந்தவிதத்திலும் தலையிடாமல் இருந்தது இந்தியா. ஆனால், சமீப காலமாக இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

'இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் விற்பனை செய்யாது' என்று அறிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், 'பாக்., மற்றும் சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவதும் கூடாது' என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்தது, பலரையும் வியப்படையச் செய்தது. டில்லியிலும், சென்னையிலும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து, இலங்கை பிரச்சினை தொடர்பாக பேசிய நாராயணன், 'விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு பயங்கரவாத அமைப்பு தான்' என்பதை தெளிவுபடுத்தினார். 'புலிகளின் கடற்படை பிரிவான கடற்புலிகள் மற்றும் அவர்களிடம் உள்ள போர் விமானங்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றும் பகிரங்கமாக கூறினார்.

இலங்கையில் உள்நாட்டு போர் விவகாரத்தை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கவனித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், துருக்கியில் இருந்து இந்தியா வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் இராணுவத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். தற்போதைய நிலையில், இலங்கையின் தேவைகளையும், அதிகாரிகளிடம் ராஜபக்ச கோடிட்டு காட்டினார். வேறு எந்த நாட்டை விட இந்தியாவையே சார்ந்திருக்க இலங்கை விரும்புவது தெளிவானது. இந்தியா கூறும் எந்த ஆலோசனையையும் ஏற்க இலங்கை தயாராக இருக்கிறது. இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு இராஜதந்திர முறையில் இலங்கை செயல்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஓயில் கோர்ப்பரசேனை, இலங்கையில் செயல்பட அனுமதித்தது. இலங்கையில் பல பெட்ரோல் பங்க்களையும் இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தியாவின் மற்றொரு மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம், 'தேசிய அனல் மின் கழகம்!' இந்த நிறுவனமும் இலங்கையில் பல இடங்களில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் திருகோணமலை பகுதியில் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கை அமைக்க இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் தினமும் 150 கப்பல்கள் வரை ஐரோப்பாவில் இருந்து சிங்கப்பூர் வரை செல்கின்றன. இந்த கப்பல்களுக்கு வழியில் எரிபொருளை நிரப்ப சரியான இடவசதி இல்லை. இந்த கப்பல்களுக்கு எரிபொருள் சப்ளை செய்ய திருகோணமலை துறைமுகத்தில் வசதிகளை ஏற்படுத்தவும் இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. திருகோணமலையில் தேசிய அனல்மின் கழகமும், சிலோன் மின்வாரியமும் இணைந்து 500 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சம்பூர் என்ற இடம் இதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த இடத்தை புலிகள் சமீபத்தில் தாக்கினர். விடுதலைப் புலிகளிடம் போர் விமானங்கள் உள்ளன. கப்பல்களை தாக்கி அழிக்கும் கடற்புலிகள் பிரிவும் உள்ளன.

அவற்றை கட்டுப்படுத்தும் சக்தி இலங்கை இராணுவத்திடம் இல்லை. இந்திய இராணுவம் முழு வீச்சில் இலங்கைக்கு உதவினால் மட்டுமே புலிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்க முடியும் என்பதே இலங்கையின் வியூகம். இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் மற்றும் இலங்கையில் அமைய இருக்கும் இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. புலிகளின் போர் விமானங்களை கண்டுபிடிக்கும் நவீன ராடார்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் போன்றவற்றை இலங்கைக்கு இந்தியா விரைவில் வழங்கும் என தெரிகிறது. இதற்கு முன், இலங்கையிடம், 'அழிவு ஏற்படுத்தாத இராணுவ தளவாடங்கள் மட்டுமே தர முடியும்' என இந்தியா கூறி இருந்தது.

இதனால், பாக்., மற்றும் சீனாவிடம் ஆயுதங்கள் வாங்கியது இலங்கை. இது இந்தியாவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் என்பது இலங்கைக்கு தெரியும். ஆனாலும், இராணுவத்துக்கு போதுமான ஆயுதங்கள் இல்லாத நிலையில் வேறு வழியின்றி, இந்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. எனவே, பாக்., மற்றும் சீனாவிடம் இலங்கை உதவி பெறுவதை நிறுத்த வேண்டுமானால், இந்தியா தான் உதவியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, இரகசியமான வகையில் இலங்கை இராணுவத்துக்கு உதவும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=32157

இந்த முதலீடுகளை தமிழீழத்தில் தமிழீழ அரசு செய்யும்

இரகசிய உதவி செய்யப்போகின்றோம் என்று உடகங்களில் தெரிவித்தால் அதில் என்ன ரகசியம் இருக்கப்போகின்றது? உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள். ; தமிழரை கொல்ல சிங்களவருக்கு உதவுவதில் தமிழக அரசியலில் இது வரை அரங்கேறிய நாடகங்களுக்கு பின்னும்ஏதாவது சத்தம் வருகின்றதா என்று அறிவதற்கு வெளியிடப்படும் செய்திகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முதலீடுகளை தமிழீழத்தில் தமிழீழ அரசு செய்யும்

ஏன், இந்தியாவும் இலங்கையும் தமிழீழத்தில் முதலீடு செய்யும் அளவுக்கு தமிழீழ அரசு பலமற்றதாக உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தினசரி நாளிதழ்களில் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்துக்களை வெளிவிடும் ஆங்கில ஊடகம் 'இந்து'. அது போல தமிழ் ஊடகம் 'தினமலர்'.இவ்விரு ஊடகங்களும் பாப்பணர்களினாலே நடாத்தப்பட்டு வருகிறது இவ்வூடகங்கள் எதுக்கெடுத்தாலும் புலிகளைத்தாக்கியே செய்திகளை இடுகிறது.

இவ்வூடகத்தில் இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தியா ஏற்கனவே பல்வேறு வீதத்தில் இரகசியமாகவும், நேரடியாகவும் உதவி செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்கள் இலங்கைக்கு கொடுக்கும் ஆயூதங்கள் பல சண்டைகளின் போது புலிகளுக்கே செல்கிறது. அண்மையில் இலங்கைக்கு கொடுத்த ராடரை, புலிகள் நெடுந்தீவு தாக்குதலின் போது கைப்பற்றியமை தெரிந்ததே

எம்.ஐ -17 ரக உலங்குவானூர்திகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது?

சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என்ற தமிழ்நாட்டு அரசின் எதிர்ப்புக்களை மீறி சிறிலங்கா அரசாங்கத்துக்கு பல எம்.ஐ-17 ரக கனரக போக்குவரத்து உலகங்குவானூர்திகளை விற்பனை செய்வதற்கு இந்திய மத்திய அரசு ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

எனினும் அதற்கான இறுதிக்கட்ட வேலைகளுக்கு சிறிலங்கா அரசின் தெளிவான பதிலுக்கு இந்திய மத்திய அரசு காத்திருக்கின்றது என இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்

ஆனால் அண்மையில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்த பின்னர் இந்திய பாதூகாப்புத்துறை ஆலோசகரான எம்.கே.நாராயணன் தெரிவித்த கடுமையான கருத்துக்களை தொடர்ந்து இந்தியாவிடம் இருந்து இராணுவ ஆயுதங்களை வாங்குவதா விடுவதா என்ற குழப்பத்தில் சிறிலங்கா அரசு உள்ளது.

கோத்தபாயாவின் பயணத்தின் போது பல படைத்துறை ஆயுதங்களின் பட்டியலை இந்தியாவின் பாதுகாப்பு தரப்புக்கு சிறிலங்கா அனுப்பி வைத்திருந்தது என அந்த இராஜதந்திரி மேலும் தெரிவித்தார்.

எனினும் இந்தியா தாக்குதல் ஆயுதங்களை தர மறுத்தால் திட்டமிட்டபடி சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்தே ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யும் என உயர் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கடந்த சில வாரங்களாக இந்தியாவின் வான்படை வானூர்திகள் பலமுறை குறிப்பிட்ட பல ஆயுதங்களை ஏற்றியவாறு பண்டாரநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு வருகை தந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா பல ராடார் உபகரணங்களையும் சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது.

எனினும் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஏனைய ஆயுதங்களை வழங்குவது குறித்து இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை என இந்திய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.