Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வது இடைநிறுத்தம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வது இடைநிறுத்தம்?

 

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் இதனை தெரிவித்துள்ளனர் என ஆங்கில இணையம் செய்தி வெளியி;ட்டுள்ளது.

srilanka-corona-dead.jpg

கொரோனாவினால் உயிரிழந்த நிலையில் உரிமை கோரப்படாமல் உள்ள உடல்களை தகனம் செய்வதை இடைநிறுத்துமாறு கொழும்பு மாநகர சபைக்கு அறிவறுத்தல் வந்துள்ளதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பொதுசுகாதார சங்கத்தின் செயலாளர் பாலசூரிய இதனை உறுதி செய்துள்ளார்.
உரிமை கோரப்படாத உடல்கள் பிரேதஅறையிலேயே தொடர்ந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது குறித்த விவகாரத்திற்கு தீர்வை காணுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச சில நாட்களிற்கு முன்னர் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து உடல்களை தகனம் செய்வதை நிறுத்துமாறு கொழும்பு மாநகரசபை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு பொருத்தமான பகுதியை கண்டுபிடிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே இறுதிமுடிவை எட்டப்படும் வரை உடல்களை தகனம் செய்வதை இடைநிறுத்துமாறு கொழும்புமாநகரசபை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வது இடைநிறுத்தம்? – Thinakkural

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயத் தகனம் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை, வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, எனினும் இன்னும் உறவினர்களால் பொறுப்பேற்றுக்கொள்ளப்படாத ஜனாசாக்கலை தகனம் செய்வதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத பெரும்பாலான முஸ்லிம்களின் ஜனாசாக்கள், பிணவறையில் இருப்பதாக, பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

இன்று (14) வரை, உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத 9 சடலங்கள் பிணவறையில் இருப்பதாகவும் இதைத் கட்டாயமாக தகனம் செய்யும் செயற்பாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, இதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய, இச்செயற்பாட்டை, கொழும்பு மாநகர சபை இடைநிறுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாயக்களை அடக்கம் செய்வதற்காக, குறைந்த நீர்நிலைகளைக் கொண்ட, வரண்ட நிலத்தைத் தேடுமாறு, சுகாதார அதிகாரிகளுக்கு, பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், சுகாதார அதிகாரிகள், இந்த நிலம் குறித்தான ஆராய்ச்சியை, பிரதமருக்குத் தெரிவிக்கும் வரை, தற்போது முன்னெடுக்கப்படவிருந்த தகன செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை தெரிவித்துள்ளது.

ஜனாசாக்களை தகனம் செய்வது, தங்களது நம்பிக்கைக்கு எதிரானது என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களையும் தகனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு, முஸ்லிம் சமூகம் கவலை தெரிவித்து வருகின்றது.

இதையடுத்து, தொற்றால் உயிரிழந்த 20 சடலங்கள் பொறுப்பேற்கப்படாமல் உள்ள நிலையில், அவற்றில் 11 ஜனாசாக்கள் முஸ்லிம்களுடையது என்றும் அவற்றில் 9 ஜனாசாக்கள், தகனம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, தற்போது இந்தச் செயற்றிட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்யாமல், அவற்றுக்கு கொங்கிரீட் கல்லறைகளைக் கட்டுவது குறித்து, சுகாதார அமைச்சு ஆலோசனையை முன்மொழிந்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேராத், இந்தத் பிரச்சினைக்கான தீர்வு, அடுத்தக் கூட்டத்தில் நிபுணர்கள் குழுவால் முன்மொழியப்படவுள்ளது என்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய, கொங்கிரீட் கல்லறைகளை உருவாக்க, பொறுத்தமான நிலத்தைத் தேடவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tamilmirror Online || கட்டாயத் தகனம் இடைநிறுத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து இலங்கையில் சீற்றம் அதிகரிக்கின்றது

 

ஏஎவ்பி
அமல்ஜெயசிங்க

கொரோனாவினால் உயிரிழந்த குழந்தை உட்பட 75 முஸ்லீம்களின் உடல்கள் இஸ்லாமிய மத நம்பிக்கைகள் மற்றும் குடும்பத்தவர்களின் விருப்பங்களிற்கு மாறாக தகனம் செய்யப்பட்டமை குறித்து இலங்கையில் சீற்றம் அதிகரிக்கின்றது.
கொரோனாவால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்யவேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்- உயிரிழந்தவர்கள் முஸ்லீம்களாகயிருந்தாலும் அவர்களது உடல்களை தகனம் செய்யவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

corona-dead-3-300x150.jpg
முஸ்லீம்கள் வழமையாக உயிரிழந்தவர்கள் மெக்காவை பார்க்கும் திசையில் அடக்கம் செய்வது வழமை.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கை விடுத்த வேண்டுகோளை ஏற்று முஸ்லீம்களின் உடல்களை தனது நாட்டில் அடக்கம் செய்வதற்கு தயார் என மாலைதீவு தெரிவித்துள்ளது.
கொரோhனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு ஸ்தாபனம் கரிசனை வெளியிட்டுள்ளதுடன் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

kanatha-prpo5-241x300.png
இஸ்லாமிய மதத்தினால் தடை செய்யப்பட்டுள்ள இந்த நடைமுறையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் அடிப்படையிலான இறுதிசடங்குகளை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசுபடலாம் என முக்கிய பௌத்தமதகுருமார் கரிசனை வெளியிட்டதை தொடர்ந்தே கடந்த ஏப்பிரல் மாதத்தில் இந்த உடல்களை புதைப்பது நடைமுறைக்கு வந்தது.
கொரோனாவால் உயிரிழந்த 19 முஸ்லீம்களின் குடும்பத்தவர்கள் உடல்கனை பொறுப்பேற்க மறுத்ததை தொடர்ந்து சட்டமா அதிபர் உடல்களை தகனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
20மாத குழந்தையின் உடல் உட்பட 15 முஸ்லீம்களின் உடல்கள் இதுவரை தகனம் செய்யப்பட்டுள்ளன- பெற்றோர்களின் மன்றாட்டத்திற்கு மத்தியிலும் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
குழந்தையின் உடலை தகனம் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு தாஙகள் கட்டாயப்படுத்தப்பட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்,தாங்கள் அதனை நிராகரித்தவேளை குடும்ப உறவினர்கள் எவருமில்லாத நிலையில் அதிகாரிகள் உடலை தகனம் செய்தனர்.
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்கள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர் என கருதும் முஸ்லீம்கள் மற்றும் மிதவாதிகளிற்கான அடையாளமாக அந்த குழந்தை உறங்கும் படம் மாறியுள்ளது.
குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாகிர் மௌலானா கேள்வி எழுப்பினார்.

Coronavirus-death-body-696x401-1-300x173
நான் வெறுப்புனர்விற்கு அப்பால் சென்றுவிட்டேன் மனம் உடைந்தவனாகவும் இருக்கின்றேன் இன்னும் எவ்வளவு கொடுமைகளையும் காட்டுமிராண்டித்தனத்தையும் நாங்கள் சகித்துக்கொள்ளவேண்டியுள்ளது என அவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாரஇறுதியில் அதிகாரிகள் கொழும்பில் உள்ள மைதானத்தின் வெளிப்புற வாயில்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக வெள்ளை துணிகளை கட்டினார்கள்- இன்று அதனை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
இது குறித்து இணையத்தில் அதிருப்தி வெளியாகியுள்ளது.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி தகனம் 20 நாள் குழந்தை தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டப்பட்ட வெள்ளை துணிகளை கனத்தையின் பேய்கள் அகற்றியுள்ளன என மங்களசமரவீர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/97981

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாசாக்கள் எரிப்பதை எதிர்த்து வாழைச்சேனையில் போராட்டம்

 
01-2-2-696x465.jpg  
 30 Views

ஜனாசாக்கள் (உடல்கள்) எரிப்பதை எதிர்த்து தேசிய ரீதியாக  வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் அனைத்து இன மக்களதும் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் கல்குடா வாழ் முஸ்லிம் மக்களின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பிரதேசத்தில் இன்று  வெள்ளைத் துணியை கட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

01-7-2.jpg

இதன்போது வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் நுழைவாயிலில் பிரதேசத்திலுள்ள அமைப்பின் பிரதிநிதிகள், சிறுவர்கள், மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு வெள்ளைத் துணியை கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

01-1-1.jpg  

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தி அவர்களது ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி புதைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

https://www.ilakku.org/?p=37514

 

  • கருத்துக்கள உறவுகள்

சோனகன்... கெட்டிக்காரன். ஒற்றுமையாக குரல் கொடுத்து, தான் நினைத்ததை... சாதித்து விட்டான்.

தமிழனுக்கு... இப்படியான குணங்கள் அறவே இல்லை. குழி பறிக்கிறதெண்டால், முதல் ஆளாக நிப்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.