Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சடலங்களை தகனம் செய்யும் விவகாரம் – உரிய தீர்வு வழங்காவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் தொடரும்: ரிஷாட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சடலங்களை தகனம் செய்யும் விவகாரம் – உரிய தீர்வு வழங்காவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் தொடரும்: ரிஷாட்

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/protest-Muslims-2-720x450.jpg

முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக இன்று (பதன்கிழமை) காலை கொழும்பு – பொரளை பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கம் நியமித்திருக்கும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழுவில், இனவாதிகளும் மதவாதிகளும்தான் அதிகமாக இருக்கின்றார்களேயொழிய, தகுதியானவர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை.

எனவே, ஒரு சமூகத்துக்கு எதிராக இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்குமாக இருந்தால் அதைவிட ஒரு கீழ்த்தரமான அரசாங்கத்தை இந்த நாட்டிலே காண முடியாது.

இதேவேளை, அமெரிக்கா, கனடா,  லண்டன், பிரான்ஸ், இத்தாலி, கட்டார் போன்ற இன்னும் பல நாடுகளில் வாழும் எமது மக்கள் இந்த மோசமான செயலுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல்கொடுப்பதை நாம் பார்க்கின்றோம்.

உலக நாடுகளில் வாழும் எமது மக்கள் இவ்வளவு காலமாக இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று இந்த ஈனச் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். எனவே இந்தச் செயலை இன்றோடு நிறுத்துங்கள்.

மேலும் ஜனாஸா எரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ள போதிலும் நேற்று வியங்கல்ல பகுதியில் மோசமான முறையில் உடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது.

இதற்கு முன்னிருந்த எந்த அரசும் இவ்வாறானதொரு மோசமான செயலை எமது சமூகத்திற்கு செய்யவில்லை.

ஆகையால் இந்த ஈனச் செயலை அரசாங்கம் உடன் நிறுத்தாவிட்டால் எமது சமூகம் மட்டுமல்ல உலக நாடுகளும் சர்வதேச சமூகமும் ஒருபோதும் இந்த அரசை மன்னிக்கமாட்டர்கள். இது எமது நாட்டுக்கு பேராபத்தாக அமையும்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால் அரசுக்கு எதிராக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதியான உரிமைப் போராட்டம், நாடு தழுவிய ரீதியில் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் இந்த ஈனச் செயலை சர்வதேசமயப்படுத்தி இதற்கான தக்கபாடத்தைப் புகட்டுவோம்” என மேலும் தெரிவித்தார்.

protest-Muslims-3-720x480.jpg protest-Muslims-1-720x480.jpg

protest-Muslims-4-720x480.jpg

சடலங்களை தகனம் செய்யும் விவகாரம் – உரிய தீர்வு வழங்காவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் தொடரும்: ரிஷாட் | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தொடர்ந்து தகனம் செய்ய வேண்டும்.!

Screenshot-2020-12-27-23-49-41-539-com-a 

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் கொள்கை தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும் என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்

இலங்கை ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்பட வேண்டும். ஆகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் கொள்கை தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் பிறிதொரு தரப்பினரால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு அமைவாக எந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய வேண்டாம் என்றும் அவற்றை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தற்போது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கம் "ஒரே நாடு, ஒரே சட்டம்.!" என்ற கொள்கையின் அடிப்படையிலேயே ஆட்சியைப் பெற்றுக்கொண்டது.

இது இவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களைப் புதைப்பதால் அதிலிருந்தது மேலும் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே சடலங்களை உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அது தமது மத நம்பிக்கைக்கு முற்றிலும் முரணானது என்று முஸ்லிம் சமூகத்தினர் கூறுகின்றார்கள்.

ஆனால் இது ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்படவேண்டும்.

எம்மால் அராபிய நாடு ஒன்றுக்கு புத்தரின் சிலையை எடுத்துச் செல்லவோ, அதை அங்கு நிர்மாணிக்கவோ முடியாது.

எம்மாலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆனால் நாம் அதனைச் செய்யமாட்டோம். ஆகவே இவ்விவகாரத்தில் அநாவசியமான சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று இஸ்லாமிய மதத்தலைவர்களை நாம் வலியுறுத்துகிறோம் என்றார்.

தற்போது குரல் எழுப்புகின்ற ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட எந்தவொரு முஸ்லிம் தலைவருமே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை. எனவே அவர்கள் இவ்வாறு போராடுவார்களெனின், நாங்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கே தயாராக இருக்கின்றோம். நாங்கள் பௌத்த தர்மத்திற்கு ஏற்றவாறு அமைதியான முறையில் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

https://puthusudar.lk/2020/12/26/கொரோனாவால்-உயிரிழப்பவர-2/

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ்...சரியான போட்டி....

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2020 at 05:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்படவேண்டும்.

இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையான காரணி இதுதான். ஆமா எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிக்குவும் நிக்கிறார். இந்தப்பிக்கு வேறொரு காரணம் சொல்கிறார். ஆட்டவும், ஆடவும் என்றே திட்டம் போட்டிருப்பானுகளோ.

On 23/12/2020 at 21:57, nunavilan said:

இந்த ஈனச் செயலை அரசாங்கம் உடன் நிறுத்தாவிட்டால் எமது சமூகம் மட்டுமல்ல உலக நாடுகளும் சர்வதேச சமூகமும் ஒருபோதும் இந்த அரசை மன்னிக்கமாட்டர்கள். இது எமது நாட்டுக்கு பேராபத்தாக அமையும்.

ஆங்....   உண்மையாகவா? அப்படியென்றால், ஒரு மனித இனப்படுகொலை, அதுவும் உங்கள் சகோதரர்கள் உங்கள் பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும்போது பாற்சோறுண்டு கொண்டாட உங்களால்  மட்டும் எப்படி முடிந்தது?

 ரிஷாட் பதியுதீன் வெளியில் வரமாட்டார், மரணதண்டனை பெறுவார் என்றெல்லாம் சொன்னார்கள். இவரோ அரசாங்கத்தை அச்சுறுத்துகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.