Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2002ஆம் ஆண்டு... கொழும்பில் அமைக்கப்பட்ட, இந்தியாவின் அப்பலோ மருத்துவமனை. தற்போது...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lanka Hospital, Colombo - Colombo, Sri Lanka | Costs, Consultation,  Treatments, Doctors.

யதார்த்தம். என்னவோ.... இது தான்.

2002ஆம் ஆண்டு... கொழும்பில் அமைக்கப்பட்ட.  இந்தியாவின் அப்பலோ மருத்துவ மனையில் பணியாற்றிய வைத்தியர்கள். தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுமே தமிழ்நாடு. கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டும் பெண்கள் தலையில் பூவும் பொட்டும் வைத்துக் கொண்டுமே பணியாற்றியிருந்தனர்.
 
இதனை அவதானித்திருந்த மகிந்த ராஜபக்ச தரப்பு 2005ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததும் பிரபல சிங்கள தொழில் அதிபர் ஒருவர் மூலம் வெவ்வேறு நபர்களைப் பயன்படுத்தி 80 சதவீத பங்குகளை கொள்வனவு செய்தது. ஆனால் இது முறைகேடான செயல் என்று அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் முரண்பட்டிருந்தார்.
 
22 ஆவது நாடாகவே 2002 இல் அப்பலோ மருத்துவமனை இலங்கையில் அமைக்கப்பட்டது. ஆனால் நான்கு வருடங்களில், இந்திய அப்பலோ மருத்துவமனைச் சட்டங்களுக்கு மாறாக அதிகளவு பங்குகளைக் கொள்வனது செய்திருந்த இலங்கை, லங்கா மருத்துவமனை என்று 2006ஆம் ஆண்டு பெயர் மாற்றமும் செய்தது.
 
அப்போது பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்த கோட்டாபய ராஜபக்ச லங்கா மருத்துவமனையின் தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
 
இந்த விடயம் குறித்து அமைச்சராக இருந்த அனுரா பண்டாரநாயக்கவுடன் கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் மற்றும் இந்தியச் செய்தியாளர்கள் கடுமையாக வாக்குவாதப்படடுமிருந்தனர்.
 
இறுதியில் வெற்றிபெற்றது மகிந்த ராஜபக்ச அரசாங்கமே. அது மாத்திரமல்ல. கொழும்பில் அமைக்கப்படவிருந்த சென்னை இராமச்சந்திர இருதய மாற்றுச் சத்திரசிகிச்சை மருத்துவமனை, உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டன.
 
அத்துடன் கொழும்பில் பிரபல தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றிய இந்திய மருத்துவர்கள் அனைவரும் வெளியேற்ற்பட்டனர்.
இவை அனைத்தும் நடந்தது மகிநத ஆட்சியில். (இது தொடர்பாக நான் வீரகேசரியில் பணியாற்றியபோது செய்திகள், கட்டுரைகளை எழுதியிருந்தேன்)
 
மைத்திரி- ரணில் ஆட்சியிலும் இந்திய அரசுக்கு எதிரான இந்த நடைமுறை தொடர்ந்தது. தற்போது கோட்டாபயவின் ஆட்சியில் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகச் செயற்பாடுகளை முற்றாகவே முடக்கும் செயற்திட்டங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
ஆனால் இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் இலங்கை அரசைச் செல்லப்பிள்ளைபோன்றே கையாளுகின்றது.
 
ஈழப் போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இந்தியா தமிழ் மக்கள் சார்பாகவே நிற்கின்றது என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தாலும், இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கே இந்திய மத்திய அரசு அனைத்து விட்டுக் கொடுப்புகளையும் செய்து வருகின்றது.
 
ஆனால் இந்தியாவை முற்றாகவே புறக்கணிக்கின்ற மற்றும் அவமானப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் இலங்கை காலம் காலமாக ஈடுபட்டு வருவதை இந்தியா உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இலங்கை தொடர்பான இந்திய இராஜதந்திரம் தோல்வி- அதனை ஒப்புக்கொள்ள இந்தியா தயாராக இல்லை.
 
1987இல் கொழும்பில் வைத்து பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதே இலங்கை மீது இந்தியா கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக இலங்கையை ஆரத்தழுவியது இந்தியா.
ஆனால் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் ஈழத் தமிழர் மீது இந்தியா மேற்கொண்டு வரும் வக்கிரச் செயற்பாடுகள் இன்றுவரை தொடர்கின்றன.
 
பதிவு மூலம்: Amirthanayagam Nixon

 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:
இந்திய அப்பலோ மருத்துவமனைச் சட்டங்களுக்கு மாறாக அதிகளவு பங்குகளைக் கொள்வனது செய்திருந்த இலங்கை, லங்கா மருத்துவமனை என்று 2006ஆம் ஆண்டு பெயர் மாற்றமும் செய்தது.
 

விடுங்க தோழர் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு இட்டலி தாங்காது..

வருத்தம் என்ன என்டா அப்போலோ வின்ர அளப்பரிய சேவை சிங்கள அரசியல் "வியாதிகளுக்கு " கிடைக்காமல் போய்விட்டது.. 😢

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விடுங்க தோழர் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு இட்டலி தாங்காது..

வருத்தம் என்ன என்டா அப்போலோ வின்ர அளப்பரிய சேவை சிங்கள அரசியல் "வியாதிகளுக்கு " கிடைக்காமல் போய்விட்டது.. 😢

தோழர்... தமிழ்நாட்டு, அப்பலோவில்... ஒரு இட்டலி, ஒரு கோடி ரூபாய் என்றால்...

ஶ்ரீலங்கா அப்பலோவில்.... ஒரு இடியப்பம், ஒரு கோடி ரூபாய் விற்று இருப்பார்கள். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.