Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணல் கள்ளர்களும், வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்களும் என்னுடன் இருக்க முடியாது - மாநகர முதல்வர் மணிவண்ணன் சாட்டை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணல் கள்ளர்களும், வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்களும் என்னுடன் இருக்க முடியாது - மாநகர முதல்வர் மணிவண்ணன் சாட்டை.!

Mani-TNPF-Vakeesam-01-1024x976.jpg

யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மாநகரசபையில் வேலைவாய்ப்பு பெற்றுக் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டிருந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால் வழக்கு தொடர்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ் மாநகர சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஒரு உறுப்பினர் நிதி மோசடி செய்துள்ளதாக எனக்கும் முறைப்பாடுகள் வந்திருக்கின்றன,

இந்நிலையில் நிலையில் பாதிக்கப்பட்டவர் முன்வந்தால் வழக்கு தொடர நான் தயாராக இருக்கிறேன். மாநகர சபையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் எனக்கும் முறைப்பாடு கிடைத்தது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் மாநகரசபை நிதி வளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆகவே முதல்வராக இது குறித்து என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். மேலும் என்னோடு இல்லாத தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களை என்னோடு சேர்த்துக்கொள்ள முடியும்.

ஆனால் இருவரை என்னால் சேர்த்துக்கொள்ள முடியாது. காரணம் ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர், மற்றயவர் மாநகரசபையில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டவர்.

எனவே இவ்வாறானவர்களுக்கு என்னுடன் இருக்க தகுதியில்லை என்றார்.

https://jaffnazone.com/news/22467

டிஸ்கி :

ஆத்தி.. ஒருத்தனையும்  காணம்..!

☺️..😊

ChillyBogusLemur-size_restricted.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • புரட்சிகர தமிழ்தேசியன் changed the title to மணல் கள்ளர்களும், வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்களும் என்னுடன் இருக்க முடியாது - மாநகர முதல்வர் மணிவண்ணன் சாட்டை.!
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி! வெள்ளைக்கு அறிக்கை விட்டு, ஏத்திவிட்ட ஏணியை உதைக்கப்போய் பிடரி அடிபட விழப்போறீங்க. பாத்துப் பேசுங்க. எங்கேயோ அம்புவிடப்போய் உங்கள் பதவியைப்  பதம் பாக்கப்போகுது. 

9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மணல் கள்ளர்களும், வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்களும் என்னுடன் இருக்க முடியாது

 இவற்றுக்கு வக்காலத்து வாங்குவதற்காகவே உங்களை அவர்கள் உள்ளிழுத்தார்கள், நீங்களும் போய்ச் சேர்ந்தீர்கள் வேறு யாரைச் சொல்கிறீர்கள் நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மணல் கள்ளர்களும், வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்களும் என்னுடன் இருக்க முடியாது - மாநகர முதல்வர் மணிவண்ணன் சாட்டை.!

Mani-TNPF-Vakeesam-01-1024x976.jpg

யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மாநகரசபையில் வேலைவாய்ப்பு பெற்றுக் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டிருந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால் வழக்கு தொடர்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ் மாநகர சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஒரு உறுப்பினர் நிதி மோசடி செய்துள்ளதாக எனக்கும் முறைப்பாடுகள் வந்திருக்கின்றன,

இந்நிலையில் நிலையில் பாதிக்கப்பட்டவர் முன்வந்தால் வழக்கு தொடர நான் தயாராக இருக்கிறேன். மாநகர சபையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் எனக்கும் முறைப்பாடு கிடைத்தது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் மாநகரசபை நிதி வளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆகவே முதல்வராக இது குறித்து என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். மேலும் என்னோடு இல்லாத தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களை என்னோடு சேர்த்துக்கொள்ள முடியும்.

ஆனால் இருவரை என்னால் சேர்த்துக்கொள்ள முடியாது. காரணம் ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர், மற்றயவர் மாநகரசபையில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டவர்.

எனவே இவ்வாறானவர்களுக்கு என்னுடன் இருக்க தகுதியில்லை என்றார்.

https://jaffnazone.com/news/22467

டிஸ்கி :

ஆத்தி.. ஒருத்தனையும்  காணம்..!

☺️..😊

ChillyBogusLemur-size_restricted.gif

இங்கு கௌரவ மேயர் குறிப்பிட்டிருப்பது தமது தோழமைக் கட்சியான ஈபிடிபியை அல்ல. மாறாக தனது சொந்தக் கட்சியான தமிழ்த் தேசிய முன்னணியில் இருக்கும் மணற்கொள்ளையரையும் வேலை வாய்ப்பு மோசடிப் பேர்வழியையுமே! கௌரவ மேயரின் பார்வையில் ஈபிடிபியினர் பத்தரை மாற்றுத் தங்கங்கள்!☺️

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, வாலி said:

ஈபிடிபியினர் பத்தரை மாற்றுத் தங்கங்கள்!☺️

சேறு என்று தெரிந்தும் அதிற்த்தான் குளிப்பேன் என்று இறங்கி நின்று கொண்டு சேற்றை குறை சொல்ல முடியுமோ? மாறாக கரையில் நிற்பவருக்கு சேறடித்தால் தன் மீதுள்ள சேறு மறைந்துவிடும் என அவர் நினைக்கிறார். பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்குது. விடுங்கோ கனவை குழப்பாதைங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.