Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்த பகுதி கண்டுபிடிப்பு- கடலில் விழுந்து வெடித்தது என தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்த பகுதி கண்டுபிடிப்பு- கடலில் விழுந்து வெடித்தது என தகவல்கள்

Digital News Team

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என கருதப்படும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய தலைநகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஜகார்த்தா கடலில் விழுந்து நொருங்கியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
62 பேருடன் புறப்பட்ட ஸ்ரீவிஜய எயர் ஜெட் புறப்பட்டசில நிமிடங்களில் ராடரிலிருந்து காணாமல்போயுள்ளது.

indo-pla1-300x169.jpg
இந்நிலையிலேயே விமானம் கடலில் விழுந்த பகுதியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட கப்பல்களையும் கடற்படையினரின் சுழியோடிகளையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்கள் விமானங்களின் சிதைவுகளாக என விசாரணையாளர்கள் ஆராய்;ந்துவருகின்றனர்.
ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்டஸ்ரீவிஜய விமானம் புறப்பட்டு நான்கு நிமிடங்களில் காணாமல்போயுள்ளது.

indo-pla4-300x169.jpg
வெடிப்புச்சத்தமொன்றை கேட்டதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானம்மின்னல்போல கடலில் விழுந்து வெடித்தது என சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
விமானம் எங்கள்கப்பலிற்கு மிக அருகில் விழுந்தது அதன் ஒரு பாகம் கிட்டத்தட்ட எங்கள் கப்பலின் மீது விழுந்தது நாங்கள் உடனடியாக கரைக்கு திரும்பினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

indo-plane3-300x169.jpg
நாங்கள் முதலில் குண்டுவெடிப்பு அல்லது சுனாமி என நினைத்தோம் அதன் பின்னர் கடலில் பெரும் வெடிப்பிற்கு பெரும் தண்ணீர் தெறித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
விமானம்காணாமல்போன தீவிற்கு அருகில் வசிக்கும் பலர் கடலில் பொருட்கள் மிதப்பதாக தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் ஏழு சிறுவர்கள் மூன்று குழந்தைகள் உட்பட 62 பேர் பயணித்தனர் என தெரிவித்துள்ள இந்தோனேசிய அதிகாரிகள் பொயிங்விமானத்தில் 130 பேர் பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்

indo-pla2-300x169.jpg
விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விமானநிலையங்களில் தகவல்களிற்காக காத்திருக்கின்றனர்இ
எனது மனைவியும் மூன்று பிள்ளைகளும் விமானத்தில் பயணம் செய்தார்கள் என ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

 

Thinakkural.lk ✂️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மாயமான விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டோம்" - இந்தோனீசிய கடற்படை

10 ஜனவரி 2021
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
"மாயமான விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டோம்" - இந்தோனீசிய கடற்படை

பட மூலாதாரம்,REUTERS

இந்தோனீசியா தலைநகர் ஜகார்தாவிலிருந்து நேற்று (சனிக்கிழமை) புறப்பட்டு சில நிமிடங்களிலே மாயமாகி விபத்துக்குள்ளானதாக கருதப்படும் போயிங் 737 பயணிகள் விமானம் விழுந்ததாக தாங்கள் கருதும் இடத்தை கண்டறிந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஸ்ரீவிஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அந்க நாட்டின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி 62 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமையன்று திடீரென மாயமானது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு கடற்படையை சேர்ந்த முக்குளிப்பு வீரர்களுடன் 10க்கும் மேற்பட்ட கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.

"மாயமான விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டோம்" - இந்தோனீசிய கடற்படை

பட மூலாதாரம்,EPA

கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படும் விமானத்தின் சிதைவுகளாக நம்பும் பொருட்களை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணி, தற்போது இன்று (ஞாற்றுக்கிழமை) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விபத்துக்குள்ளானதாக கருதப்படும் இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் அல்ல என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை பாதுகாப்பு காரணங்களுக்கான இந்த ரக விமானங்களின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நடந்தது என்ன?

வரைபடம்

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை (ஜனவரி 9) பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.

கிளம்பிய நான்கே நிமிடங்களில் இந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.

ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அதே நாட்டில் உள்ள மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

காணாமல் போன விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்களில் 7 பேர் சிறார்கள், 3 பேர் குழந்தைகள் என்றும் இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்தார்.

போர்னியா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த நகருக்கு செல்வதற்கான பயண நேரம் வழக்கமாக ஒன்றரை மணி நேரம்.

கிளம்பிய சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் அந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.

உள்ளூர் நேரப்படி பகல் 2:40 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரம் -7:40) அந்த விமானத்தோடு கடைசி தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

அந்த விமானம் பறந்துகொண்டிருந்த உயரம் திடீரென ஒரே நிமிடத்தில் 10 ஆயிரம் அடி குறைந்தது என்கிறது விமான கண்காணிப்பு இணைய தளமான Flightradar24.com.

விமானம் வந்து சேர வேண்டிய இடத்தில் பதற்றத்தோடு காத்திருக்கும் உறவினர்கள்.

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

விமானம் வந்து சேர வேண்டிய இடத்தில் பதற்றத்தோடு காத்திருக்கும் உறவினர்கள்.

தீவு வாசிகள் கூறுவது என்ன?

விமானம் காணாமல் போன இடத்துக்கு அருகே உள்ள ஒரு தீவினைச் சேர்ந்த பலர் விமானத்தின் பாகங்கள் போன்று தோன்றும் பொருள்களைப் பார்த்ததாக பிபிசி இந்தோனீசிய சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

தேடுதல், மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானம் குறித்த தகவல்களைப் பெற முயன்றுவருவதாக இந்தோனீசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீவிஜயா ஏர் தெரிவித்துள்ளது. இது இந்தோனீசியாவுக்கு உள்ளேயும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் குறைந்த கட்டண விமானங்களை இயக்கும் நிறுவனம் ஆகும்.

ஸ்ரீவிஜயா ஏர் விமானம் - கோப்புப் படம்.

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ஜகார்த்தா விமான நிலைய ஓடுபாதையில் நிற்கும் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று. (கோப்புப் படம்)

எந்த வகை விமானம்?

இந்த விமானம் போயிங் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், சமீப ஆண்டுகளில் அடுத்தடுத்த விபத்துகளால் சர்ச்சைக்குள்ளான 737 மேக்ஸ் ரகம் அல்ல.

பதிவுத் தகவல்களின் படி, 26 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விமானத்தின் மாடல் போயிங் 737-500.

2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இன்னொரு இந்தோனீசிய விமான சேவை நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து 189 பேர் இறந்தனர்.

✂️

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான விடையம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசரஅவசரமாக புறப்பட்டுச்சென்ற விமானி- புதிதாக திருமணமான தம்பதியினர்- இந்தோனேசிய விமானத்திலிருந்தவர்கள் விபரங்கள் வெளியாகின

Digital News Team

இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை கறுப்புபெட்டியை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் அதேவேளை விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தவர்கள் பெரும் துயரத்துடன் காத்திருக்கின்றனர்.

210110054800-34-indonesia-plane-0110-sea
ஜகாத்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் தொடர்பை இழந்த விமானத்தில் 62 பேர் காணப்பட்டனர்.
எவரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்பதற்கான நம்பிக்கைகள் எதுவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

210110062517-43-indonesia-plane-0110-sea
விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் உத்தியோகபபூர்வமாக வெளியாகாத போதிலும் குடும்பத்தவர்கள் பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

210110141518-47-indonesia-plane-0109-air

விமானி கப்டன் அவ்வான்

நாங்கள் இன்னமும் துயரத்திலிருக்கின்றோம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கின்றோம் என விமானி கப்டன் அவ்வானின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

indoplane88-300x184.jpg
வழமையாகஅழகாக ஆடை அணிந்து செல்லும் அவர் அன்று அவசரஅவசரமாக சென்றார் என அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பணிக்கு திரும்பவேண்டியுள்ளது குறித்து தனது மூன்று பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர் சென்றுள்ளார்.
அவ்வான் 1987 முதல் விமானவோட்டியாக பணியாற்றி வருகின்றார்.

indo-plane9-300x169.jpg
விமானத்திலிருந்த இன்னொரு நபர்அங்கா பெர்ணான்டோ அவ்ரியோன்.

indo-plane10-300x169.jpg
தனது 29 வயது மகன் உயிருடன் இருப்பார் என நம்பிக்கையுடன் உள்ளதாக அவரின் தாயார் அவ்ரிடா தெரிவித்தார்.
ஜகாத்தாவில் உள்ள குடுபத்தவர்கள் அவர் குறித்த விபரங்களை பெற முயல்கின்றனர் நானும் சென்றிருப்பேன் கொரோனாவினால் செல்ல முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
மாலுமியான அவர் கடந்த வாரம் தந்தையானார் அவருக்கு கடந்த வாரம் ஆண்குழந்தை பிறந்தது என தாயார் தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டம்பிடித்த பயணத்தை மேற்கொண்ட அந்த விமானத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியினரும் பயணித்துள்ளனர்.
விமானநிலையத்திலிருந்து எங்களை தொடர்புகொண்ட இஹ்சான் அட்லான் ஹக்கீம் காலநிலை சரியில்லாததால் பயணம் தாமதமாகியுள்ளது என தெரிவித்தார் என அவரது சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.
திருமண விருந்துபசாரத்தை நடத்துவதற்காகவே அவர்கள் விமானத்தில் பொன்டியானாக்கிற்கு பயணித்துள்ளனர்.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

 

தப்பான திசையில் போன விமானம் - இந்தோனேசியா விமான விபத்து நடந்தது இப்படிதான்" - Pilot Ashokan பேட்டி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது! |  Athavan News

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது!

கடந்த வார இறுதியில் ஜாவா கடலில் விபத்துக்குள்ளான இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜய எயார் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டிகளில் ஒன்றை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கருப்புப் பெட்டியின் பதிவுசெய்யும் சாதனம் ஜகார்த்தாவின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஃபாஜர் ட்ரி ரோஹாடி (Fajar Tri Rohadi)இன்று தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி, விமானத்தின் விமான தரவு பதிவா என்பது உடனடியாகத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்திலிருந்து 62 பேருடன் பயணித்த இந்தோனேசியாவின் போயிங் விமானம் கடந்த சனிக்கிழமை ஜாவா கடலில் வீழ்ந்து மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/விபத்துக்குள்ளான-இந்தோ-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.