Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்

விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன.


கடந்த 12-ந் தேதி அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 4 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது.

இந்த நிபுணர்களில் ஒருவரான பாரதீய கிசான் சங்க தேசிய தலைவர் பூபிந்தர்சிங் மான், குழுவில் இருந்து திடீரென விலகிக்கொண்டார்.

குடியரசு தினத்தன்று (26-ந் தேதி) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டிராக்டர் பேரணியோ அல்லது வேறுவகையான போராட்டங்களோ நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி டெல்லி போலீஸ் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாரதீய கிசான் சங்கம் லோக்சக்தி என்ற விவசாய அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. நிபுணர் குழுவில் மீதியுள்ள 3 பேரையும் நீக்கிவிட்டு வேறு நபர்களை நியமிக்குமாறு கோரியுள்ளது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுக்கள், இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இவற்றை விசாரித்தது.

அதில், விவசாயிகள் பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது. டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் டெல்லி போலீசுக்கு தான் உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி பேரணி தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனால் தலைநகர் டெல்லியில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/18144041/Supreme-Court-starts-hearing-in-the-case-of-farmers.vpf

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி

டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி
 
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
 
 
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுத்து விட்டது.
 
டிராக்டர் பேரணி தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநில போலீஸ் அதிகாரிகள் டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
நெரிசல் மிகுந்த வெளிவட்டச்சாலைக்கு பதிலாக குண்ட்லி-மானேசர்-பல்வால் விரைவுச்சாலை வழியாக நடத்துமாறு போலீசார் யோசனை தெரிவித்தனர். ஆனால், விவசாய அமைப்புகள் அதை நிராகரித்து விட்டன.
 
இந்தநிலையில், டெல்லி சிங்கு எல்லை அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் நேற்று 2-ம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவுச்சாலையில் டிராக்டர் பேரணி நடத்துமாறு போலீசார் மீண்டும் கேட்டுக்கொண்டனர்.
 
ஆனால், விவசாய அமைப்புகள் ஏற்கவில்லை. இதனால் இழுபறி நிலவி வருகிறது.
 
இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியதாவது:-
 
போலீசார் டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணி நடத்துமாறு வலியுறுத்தினர். ஆனால் அது சாத்தியமல்ல. நாங்கள் டெல்லி நகருக்குள் அமைதியாக பேரணி நடத்த விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
 
மற்றொரு விவசாய சங்க தலைவரும் இதே கருத்தை தெரிவித்தார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி ; விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டம் , ஒருவர் கைது

விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி ; விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டம் , ஒருவர் கைது

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று நடந்த 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையிம் தோல்வியில் முடிந்தது. 

டெல்லி-அரியானா எல்லையில்  சிங்கூர் என்னுமிடத்தில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி இன்று 59 வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அங்கு  இளைஞர் ஒருவரைப் பிடித்து விவசாயிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் விவசாய தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக் கொண்டார். விவசாயிகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்முடன் இதுபோல் பத்து பேர் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

24 ஆம் தேதி, நான்கு பேரை மேடையில் சுட்டுக் கொல்லும் திட்டம் உள்ளது. எங்களுக்கு பிரதீப் சிங் பயிற்சி அளித்தார் .அவர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அவர் எங்களைச் சந்திக்க வரும்போதெல்லாம்  முகமூடி அணிந்து இருப்பார் என அந்த  நபர் குற்றம் சாட்டி  உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/India/2021/01/23145758/The-person-who-revealed-an-alleged-plot-to-shoot-four.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை மறுநாள் பிரமாண்ட பேரணி... 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைகின்றன

நாளை மறுநாள் பிரமாண்ட பேரணி... 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைகின்றன

 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாத காலமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இறுதியாக நேற்று முன்தினம் 11-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

3 வேளாண்மை சட்டங்களையும் 1½ஆண்டு நிறுத்தி வைக்க மத்திய அரசு முன்வந்தது. அதையும் விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். 3 சட்டங்களையும் வாபஸ் பெற்றே தீர வேண்டும் என்று விவசாயிகள் பிடிவாதமாக உள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிராமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

டெல்லியில் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் செங்கோட்டையில் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்து டெல்லி ராஜபாதையில் பிராமாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதற்கு போட்டியாக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதனால் குடியரசு தின விழாவுக்கு இடையூறு ஏற்படும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப் பட்டது.

இதனால் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட மறுத்துவிட்டது. டெல்லி போலீசாரே இது சம்பந்தமாக முடிவு செய்து கொள்ளலாம் என்று கோர்ட்டு கூறிவிட்டது.

எனவே இது சம்பந்தமாக டெல்லி போலீசார் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டெல்லிக்கு வெளியே பேரணியை நடத்திக்கொள்ளுங்கள் டெல்லி நகருக்குள் அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறினார்கள்.

ஆனால் விவசாயிகள் டெல்லி நகருக்குள்தான் பேரணியை நடத்துவோம் என்று பிடிவாதமாக கூறினார்கள். முதலில் அரசு குடியரசு தின பேரணி நடைபெறும் ராஜபாதையிலேயே டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

பின்னர் அதை டெல்லி ரிங்ரோடு பகுதிக்கு மாற்றுவதாக விவசாயிகள் அறிவித்தனர். ஆனாலும் டெல்லி நகருக்குள் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறிவந்தனர்.

விவசாயிகள் டெல்லி நகரை தவிர வேறு எங்கும் பேரணி நடத்த முடியாது என்று உறுதியாக கூறி விட்டனர்.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று டெல்லி போலீசார் 5-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர். எந்த வழியாக பேரணி செல்ல வேண்டும் என்பது தொடர்பாக இன்று போலீசார் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு பேரணி வழிகள் பற்றி தெரிவிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

போலீஸ் அனுமதியை அடுத்து சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எவ்வளவு தூரத்துக்கு பேரணி நடத்துவது, எந்த வழியாக பேரணி செல்வது என்று முடிவு செய்தனர்.

அதன்படி தற்போது விவசாயிகள் முகாமிட்டு இருக்கும் காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைவது. அதன்பிறகு 5 முனைகளில் இருந்தும் பேரணியை தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சிங்கு, திக்ரி, காசிப்பூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 முனைகளில் இருந்தும் டிராக்டர்கள் டெல்லி நகருக்குள் செல்லும்.

மொத்தம் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார்.

மேலும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறிய தாவது:-

இந்த பேரணியில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும். முதலில் இருந்ததைவிட இப்போது விவசாயிகள் எழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

இதனால் போராட்டத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட போராட்டத்துக்கு வரும் டிராக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

டிராக்டர் பேரணி எவ்வளவு நேரம் நடக்கும் என்பதை சொல்ல முடியாது. 24 மணிநேரத்தில் இருந்து 72 மணிநேரம் வரை பேரணி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

பேரணியை ஒழுங்குபடுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் 2,500 தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர். பேரணியை வழிநடத்த கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்படுகிறது.

டிராக்டர் பேரணி மிக அமைதியான முறையில் நடைபெறும். எந்த வன்முறைக்கும், தவறுகளுக்கும் இடம் இருக்காது. டிராக்டர்களில் விவசாயிகள் சங்க கொடி மற்றும் தேசிய கொடி கட்டப்பட்டு இருக்கும். வேறு கொடிகளுக்கு அனுமதி இல்லை.

பேரணியில் பங்கேற்போர் விவசாயிகள் வாழ்க, விவசாயிகள் இல்லை என்றால் உணவு இல்லை, 3 சட்டங்களை ரத்து செய், ஆகிய கோ‌ஷங்களை மட்டுமே எழுப்ப வேண்டும். போராட்டத்தில் பெண்களும் பெருமளவு பங்கேற்பார்கள்.

பேரணி முடிந்ததும் அனைத்து டிராக்டர்களும் எல்லை பகுதிக்கு திரும்பி விடும். டெல்லி நகருக்குள் யாரும் இருக்க மாட்டோம். பழைய முகாம்களுக்கே வந்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/24141603/2288532/Tamil-News-Farmers-Protest-2-Lakh-farmers-likely-to.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

 

டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி; போலீசார் அனுமதி

 

 

:டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். புதுடெல்லி, டெல்லி எல்லையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21ந்தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

 
18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
 
குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.  இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், டெல்லியில் வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன.  இதற்காக விவசாயிகள் மற்றும் டெல்லி போலீசார் இடையே ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது என்றும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், டெல்லி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி எந்தெந்த வழியே நடத்தப்படும் என்பது பற்றி எழுத்து வடிவில் எதுவும் அளிக்கவில்லை.
 
வருகிற 26ந்தேதி நடத்தப்படும் டிராக்டர் பேரணி எந்தெந்த வழியாக செல்லும் என்பது பற்றி விவசாயிகள் எழுத்து வடிவில் எங்களுக்கு விவரம் அளித்த பின்னரே நாங்கள் அதனை ஆய்வு செய்து அதன்பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம் என கூறினர்.
 
இந்த சூழலில், பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியை சேர்ந்த சத்னம் சிங் பன்னு என்பவர் சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள திரளான விவசாயிகள் டெல்லிக்கு வருகின்றனர்.
 
டெல்லி போலீசார் அனுமதி கொடுக்கிறார்களா அல்லது இல்லையா? என்பதெல்லாம் விசயமில்லை.  நாங்கள் டெல்லியின் வெளிவட்ட சாலையில் பேரணியை நடத்த இருக்கிறோம் என்று கூறினார்.
 
இந்நிலையில், டெல்லி போலீசின் உளவு பிரிவு அமைப்பின் சிறப்பு அதிகாரி தேவேந்திர பதக் இன்று கூறும்பொழுது, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குவது என நாங்கள் இறுதி முடிவு எடுத்துள்ளோம்.
 
குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க கவனத்தில் கொள்ளப்படும்.
 
டிராக்டர் பேரணியானது திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூர் எல்லைகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும்.  இதன்பின்னர் பேரணியை முடித்து கொண்டு பழைய பகுதிகளுக்கே அவை திரும்பும்.
 
சிங்குவில் புறப்படும் பேரணி கஞ்ச்வாலா, பாவனா, ஆச்சண்டி எல்லை, கே.எம்.பி. விரைவு சாலை வழியே செல்லும்.  பின்பு சிங்கு எல்லைக்கு திரும்பும் என அவர் கூறியுள்ளார்.
 
டிராக்டர் பேரணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய சம்பவங்கள் நடைபெற சாத்தியம் உள்ளது என கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான கூடுதல் போலீசார் குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
dailythanthi.com
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.