Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முடிவெடுப்பார் – மத்திய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முடிவெடுப்பார் – மத்திய அரசு

 
6b77fd9978e5e028f19a22de298a4d3f59652fa2
 9 Views

முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் நேற்று தொடங்கியது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முடிவுவெடுக்க வேண்டும் என வாதிட்டார். இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முடிவெடுப்பார் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

https://www.ilakku.org/?p=39981

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறையாவது.... நல்ல முடிவாக எடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்காக பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம்!

இதுவரை பரோல் மட்டுமே பெற்று தனது சொந்த வீட்டில் அவ்வப்போது தங்கி  வந்த பேரறிவாளன் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

1991-ஆம் ஆண்டு தமிழகத்தில் வைத்து முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில்  தண்டனைக்குள்ளாகி பேரறிவாளன் உட்பட எழுவர் வேலூர் சிறையில் 28 ஆண்டுகளாக உள்ளார்கள்.

இவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில்  ஆயுள் தண்டனைக்கைதிகளை அரசியல் சட்டம் 161-வது விதியின் படி மாநில அரசே விடுதலை செய்வதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதாவது ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களை தமிழக அரசே விரும்பினால் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு விடுதலை செய்யலாம் என முடிவெடுத்து அதை ஆளுநருக்கு அனுப்ப, ஆளுநர் அது தொடர்பாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டார்.

இதனையடுத்து பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்தமனு மீதான விசாரணை நேற்று நடந்த போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா “இவர்களின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளது” என்றார்.

இன்றும் அந்த வழக்கின் விசாரணை நடந்த நிலையில் ”தமிழக ஆளுநரே ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பார். என்றும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார்” எனவும் அறிவித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலையில் நேற்றைய நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை இன்று மத்திய அரசு எடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவின் சாதனை என பேரறிவாளன் விடுதலையை பறைச்சாற்றுவதற்காக இவர்கள் எழுவரும் தேர்தலுக்கு முன்பாக விடுதலை  செய்யப்படலாம் என தெரிகிறது. ஆனால், எழுவரில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்து விட்டு  ஏனைய ஆறு பேரையும் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கலாம் என்றும்  அரசுக்கு ஒரு யோசனை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 

https://inioru.com/தேர்தலுக்காக-பேரறிவாளன்/

 

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்!

spacer.png

 

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு ஜனவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு வாதிட்டது. ஜனவரி 21ஆம் தேதி விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், இவ்வழக்கு நேற்று (ஜனவரி 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்தப் பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில், "பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
 

https://minnambalam.com/public/2021/01/23/7/perarivalan-relaese-tn-governor

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7பேர் விடுதலை தொடர்பாக நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் – தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம்

 
e5e31612ccbeba1cacf4fbadb047169720c58fc6
 7 Views

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அதிமுக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

 

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில், தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் துணை முதல்வர் தனது ருவிற்றர் பக்கத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான் என்று ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ளார்.

 

7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அதிமுக அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=40141

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, உடையார் said:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அதிமுக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் லாபத்திற்காக அடைக்கப்பட்டவர்கள்.......
அரசியல் லாபத்திற்காகவே விடுவிக்கப்படுவார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7பேர் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு

 
6b77fd9978e5e028f19a22de298a4d3f59652fa2
 11 Views

முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் ஒப்புதல்  தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஒப்புதல் குறித்து ஆளுநர் 7 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஆளுநர் அலுவலக அலுவலர் மத்திய அரசைச் சந்தித்து ஏழுபேர் விடுதலை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஏழுபேரின் விடுதலை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

https://www.ilakku.org/?p=40666

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.