Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி, கம­லுக்கு கிடைக்கும் அடியில், விஜய் அர­சி­ய­லுக்கு வரப் பயப்­பட வேண்டும் - சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ரஜினி, கம­லுக்கு கிடைக்கும் அடியில், விஜய் அர­சி­ய­லுக்கு வரப் பயப்­பட வேண்டும் - சீமான்

'என் தம்பி விஜய் அர­சி­ய­லுக்கு வர வேண்டும்', 'தம்பி விஜய் அர­சி­ய­லுக்கு வர கூடாது என்று சொல்­லா­தீர்கள்..', என்று மேடை போட்டு  அழைத்த நாம் தமிழர் கட்­சியின் ஒருங்­கி­ணைப்­பாளர்  சீமான் தற்­போது  தேர்­தலில் ரஜினி,  கம­லுக்கு கிடைக்கும் அடியில், விஜய் அர­சி­ய­லுக்கு வர பயப்­பட வேண்டும் என தெரி­வித்­துள்ளார். 

spacer.png

இதற்கு விஜய் ரசி­கர்கள் கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்டு சுவ­ரொட்­டிகள் ஒட்­டி­யுள்­ளமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

சட்­ட­ச்சபை தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில்  அ.தி.மு.க. திமு.க. மட்டும் அல்­லாது  ரஜினி ,கமல் உள்­ளிட்­டோரும் சட்ட மன்ற தேர்­தலில் கள­மி­றங்க தயா­ராகி உள்­ளனர். இந்­நி­லையில் நாம் தமிழர் கட்­சியின் ஒருங்­கி­ணைப்­பாளர் சீமான், கடந்த இருநாட்களுக்கு முன்னர் 'ரஜி­னிகாந்த், கமல்­ஹா­சனை அடிக்­கிற அடியில் , விஜய் அர­சி­ய­லுக்கு வர பயப்­பட வேண்டும். தேர்­தலில் ரஜினி, கம­லுக்கு கிடைக்கும் அடியில், எந்த நடி­கர்­களும் அர­சி­ய­லுக்கு வர பயப்­பட வேண்டும். ரஜி­னியும் கமலும் எம்.ஜி.ஆரை தூக்கி பிடிப்­பதால் அந்த வாக்­குகள் அ.தி.மு.க.வுக்கு தான் செல்லும்” என்றார் .

rajini_kamal.jpg

இதே சீமான், கடந்த வருடம் 'உலக காணாமல் போன­வர்­கள்’­ தி­னத்­தன்று நடந்த பத்­தி­ரி­கை­யா­ளர்கள் சந்­திப்பில், "யார் யாரோ அர­சி­ய­லுக்கு வரும்­போது, என் தம்பி விஜய் அர­சி­ய­லுக்கு வந்தா என்ன தப்பு... ரஜி­னிக்கும் எனக்கும் சம்­பந்­த­மில்லை. விஜய் என்­னு­டைய தம்பி. மக்கள் அவ­ருக்கு வாக்­க­ளிச்சா, நான் பாராட்­டு­களைத் தெரி­விப்பேன். எனக்கு வாக்­க­ளிச்சா நன்­றியைத் தெரி­விப்பேன்’’ எனப் பேசி­யி­ருந்தார். அதற்கு முன்­பாக, "ரஜி­னிக்கும் விஷா­லுக்கும் அர­சியல் ஆசை இருக்­கும்­போது, மண்ணின் மைந்தன் என் தம்பி விஜய் அர­சி­ய­லுக்கு வந்தால் என்ன தப்பு?’’ எனவும் மேடை­களில் பேசி­யி­ருக்­கிறார்.

ஆனால், தற்­போது விஜய்க்கும் சேர்த்தே எச்­ச­ரிக்­கை­விடும் வகையில் பேசி­யி­ருக்­கிறார் சீமான் .

இந்த கருத்தை  கண்­டித்து மதுரை எங்கும் விஜய் ரசி­கர்கள் சீமா­னுக்கு எதி­ராக  சுவ­ரொட்­டிகள் ஒட்டி உள்­ளமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சீமானின் இந்த மன மாற்­றத்­துக்­கான காரணம் என்னவாக இருக்கும் என்­பதை விரி­வாகப் பார்ப்போம்.

postar.jpg

நாம் தமிழர் கட்சி முதன்­மு­தலில், 2016-இல் நடந்த சட்­ட­மன்றத் தேர்­தலில் 234 தொகு­தி­க­ளிலும் தனித்துப் போட்­டி­யிட்­டது. அந்தத் தேர்­தலில் 1.07 சத­வி­கித வாக்­கு­களை மட்­டுமே பெற்­றாலும், அது அந்தக் கட்சி நிர்­வா­கிகள், தொண்­டர்கள் மத்­தியில் எந்­த­வித சோர்­வையும் உண்­டாக்­க­வில்லை. 

parliment.jpg

அதற்­க­டுத்­த­தாக, 2019  பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் தனித்தே போட்­டி­யிட்­டது. 20 தொகு­தி­களில் ஆண் வேட்பாளர்களையும் 20 தொகு­தி­களில் பெண் வேட்­பா­ளர்­களையும் கள­மி­றக்கி, 16,45,185 வாக்­குகள் பெற்­றது. வாக்கு சத­வி­கி­தத்தைப் பொறுத்­த­வரை 1.07-லிருந்து 3.87-ஆக அதி­க­ரித்­தாலும் அந்தக் கட்சி நிர்­வா­கி­களின் எதிர்­பார்ப்பை அது பூர்த்தி செய்­ய­வில்லை. எட்டு சத­வி­கித வாக்­கு­களைப் பெற்று கட்சி அங்­கீ­காரம், நிரந்­தரச் சின்னம் என ஆவ­லோடு காத்­தி­ருந்த சீமா­னுக்கும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்­பா­ளர்­க­ளுக்கும் தேர்தல் முடி­வுகள் திருப்­தி­ய­ளிக்­க­வில்லை.

நாம் தமிழர் கட்சி எதிர்­பார்த்த வாக்­குகள் பெறாமல் போன­தற்கு, நடிகர் கமலின் திடீர் அர­சியல் பிர­வே­சமும், அவரின் கட்சி வாங்­கிய 15.73 இலட்சம் வாக்­கு­க­ளுமே காரணம் எனக் கரு­தினர். நாம் தமிழர் கட்­சியின் நிர்­வா­கிகள். கமல் கட்சி ஆரம்­பிக்­கும்­போது, அவரை நேரில் சந்­தித்து ஆத­ரவு தெரி­வித்த சீமான், இந்தத் தேர்தல் முடி­வு­க­ளுக்குப் பிறகு, "தேர்­தலில் அவ­ரு­டைய (கமல்) பங்­க­ளிப்பு என்று எதுவும் இல்லை. திரைப்­ப­டத்தைப் போல­வேதான் அர­சி­ய­லையும் பார்க்­கிறார். 50 வரு­டங்கள் நடித்­தி­ருக்­கிறார். என்­னை­விட அவ­ருக்கு மக்­க­ளிடம் நல்ல அறி­முகம் இருக்­கி­றது. தவிர, அவர் வெள்­ளை­யாக இருக்­கிறார். மக்கள், 'வெள்­ளை­யாக இருப்­பவர் பொய் பேச மாட்டார்' என்ற நம்­பிக்­கையில் இருக்­கி­றார்கள். அவரது வெளித்தோற்றத்தை பார்ப்­ப­வர்­கள்தான் அதிகம்’’ எனக் கடு­மை­யாக விமர்­சித்துப் பேச ஆரம்­பித்தார். 

Seeman_Kamal.jpg

காரணம், நாம் தமிழர் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு ஒன்­பது ஆண்­டு­களில் கடு­மை­யாகக் களப்­ப­ணி­யாற்றி பெற்ற வாக்­கு­களை, கமல்­ஹாசன் தன் திரைப் பிர­ப­லத்தின் மூலம், கட்சி ஆரம்­பித்த ஒரே ஆண்டில் பெற்­று­விட்டார் என்­கிற எண்ணம் சீமா­னுக்கு ஏற்­பட்­டது.

"ரஜி­னிகாந்த் அவர்­களின் அர­சியல் முடிவை வர­வேற்­கிறோம். வாழ்த்­து­கிறோம்! இதே போன்­றுதான், அர­சியல், அமைப்பு, அடிப்­படை மாற்­றத்­துக்­காகக் கடந்த 10 வரு­டங்­க­ளாக உண்­மை­யோடும், உறு­தி­யோடும், உள்ளத் தூய்­மை­யோடும் போரா­டி­வ­ரு­கிறோம்! அதில் நாங்கள் உறு­தி­யாக வெல்வோம்!

தற்­போ­தும்­கூட, போராட்டக் களம் எதற்கும் வராமல், நேர­டி­யாக தேர்தல் களத்­துக்கு கமல் வரு­கிறார் எனக் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­து­வ­ரு­கிறார்.

ஆனால், கூடவே, நடிகர் ரஜி­னியின் அர­சியல் பிர­வே­சமும் தற்­போது சீமானை மிகவும் கோபப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஆரம்­பத்தில் ரஜினி அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது எனக் கடு­மை­யாக எதிர்த்­து­வந்த சீமான், பிறகு "நான் முத­ல­மைச்­ச­ராக மாட்டேன்" என ரஜினி அறி­வித்­ததும், வர­வேற்றுப் பேசினார்.

ஆனால், 2019ஆம் ஆண்­டி­லேயே பெற்­றி­ருக்க வேண்­டிய எட்டு சத­வி­கித வாக்­கு­க­ளுக்குத் தடை­யாக தற்­போது கம­லோடு ரஜி­னியும் வந்­து­விட்டார் என்­கிற கோபம் சீமா­னுக்கு இருந்­தாலும், "என்­னு­டைய கோட்­பாட்டை, தமி­ழக அர­சியல் கட்­சி­களில் யாரு­டைய கோட்­பாட்­டோடும் ஒப்­பிட முடி­யாது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது, எனக்­கென்று இருக்­கிற கூட்டம், என்­னோ­டுதான் தொடரும். 

seeman_rajini.jpg

இன்னும் சொல்­லப்­போனால், ரஜி­னியும் அர­சி­ய­லுக்கு வரும்­போது, என்­னு­டைய தேவை இன்னும் கூடு­த­லா­கி­விடும்... அதா­வது, 'சீமான் சொல்­வது சரி­தானே...’ என்­றுதான் மக்கள் சிந்­திப்­பார்கள். எனவே, ரஜினி வந்து எங்­க­ளது வாக்­கு­களைப் பிரிப்பார் என்ற பேச்­சுக்கே இட­மில்லை!" எனப் பேசி­வந்தார் சீமான்.

Suvorotty.jpg

ஆனால், நாளை விஜய் அர­சி­ய­லுக்கு வந்தால் அது நிச்­ச­ய­மாக தன் அர­சியல் எதிர்­கா­லத்தை பாதிக்கும் என தற்­போது நினைக்­கிறார் சீமான்.

ரஜினி, கமல் ஆகிய இரு­வரின் அர­சியல் நிலைப்­பா­டு­க­ளுக்கும் சீமானின் நிலைப்­பா­டு­க­ளுக்கும் பல மாறு­பா­டுகள் இருக்­கின்­றன. ஆனால், ஈழ விவ­காரம், காவிரி, நீட், ஸ்டெர்லைட் உள்­ளிட்ட தமிழர் உரிமை சார்ந்த விடயங்­க­ளி­லெல்லாம் நடிகர் விஜய்யின் நிலைப்­பாடும் சீமானின் நிலைப்­பாடும் ஒரே மாதி­ரி­யா­ன­துதான். 

Vjay1.jpg

ஏனெனினில் விஜய் இப்போது அரசியலுக்கு  வராவிட்டாலும்  நேரடியாக மக்களை சந்திப்பதோடு அரசியலுக்கான ஒரு அடித்தளத்தை ஆழமாக இட்டுள்ளார் என்பது உண்மை. விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்பது என் கருத்து. 

தமி­ழக அர­சியல் களத்தில், அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்­சி­க­ளுக்குப் பிறகு நாம்தான் என நினைத்து வந்தார் சீமான். ஆனால், கமல், ரஜினி, அடுத்­த­தாக விஜய் எனப் பலர் போட்­டி­யாக வரு­வதை அவர் விரும்­ப­வில்லை. காரணம், கடு­மை­யான களப்­ப­ணி­யாற்றி தம் கட்சி பெறும் வாக்­கு­களை திரைப்­பி­ர­ப­லத்தின் மூலம் மிக எளி­தாக நடி­கர்­களின் கட்சி வாங்­கி­வி­டு­கி­றதுஎன்­கிற கோபம்தான். 

அத­னால்தான், விஜய் உட்­பட நடி­கர்கள் யாருக்கும் கட்சி ஆரம்­பிக்கும் எண்­ணமே வரக் கூடாது எனக் கொந்­த­ளித்­தி­ருக்­கிறார்.

seemann.jpg

"கமல், ரஜினி இரு­வரும் இரண்டு ஜாம்­ப­வான்கள். அர­சி­யலில், மிகப்­பெ­ரிய சாத­னையைச் செய்­வ­தற்கு கமல் ஆரம்­பித்­து­விட்டார். இதேபோல் ரஜி­னியும் வரவேண்டும். இவர்கள் இரு­வரும் சேர்ந்தால், தமிழ்­நாட்­டுக்கு நல்­லது. தமி­ழர்­க­ளுக்கு நல்­லது. இரு­வரும் இணைந்து அர­சியல் செய்யவேண்டும் என்­கிற என் ஆசையை, இந்த மேடையில் பகி­ரங்­க­மா­கவே சொல்­லிக்­கொள்­கிறேன்" என விஜயின் தந்தை சந்திரசேகரன் ஒரு விழா மேடையில் கூறியிருந்தார். அவர் மட்டும் அல்ல பலரும் இந்த கருத்தை பல வருடங்களாக முன்வைத்தனர்.

ShandraSekar.jpg

"சீமான் முன்­னி­றுத்தும் தமிழ்த் தேசியக் கொள்­கை­களை அவ­ருக்கு முன்பே பலர் இங்கே பேசியும், இயக்­கங்­க­ளாகச் செயல்­பட்டும் வந்­தி­ருக்­கி­றார்கள். ஆனால், அவர்கள் யாருக்கும் கிடைக்­காத மக்கள் ஆத­ரவு சீமா­னுக்குக் கிடைத்­தது. 

2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இனப்­ப­டு­கொ­லையின் கார­ண­மாக தமி­ழ­கத்தில் இளை­ஞர்கள் மத்­தியில் உண்­டான எழுச்­சிதான் அதற்கு முதன்­மை­யான கார­ண­மாக இருந்­தாலும், மற்­ற­வர்­க­ளை­விட சீமா­னுக்கு அதிக முக்­கி­யத்­துவம் கிடைத்­தது என்­ப­தற்கு அவர் திரைத்­து­றையைச் சார்ந்­தவர் என்­பதும் ஒரு கார­ணிதான். அதை நிச்­ச­ய­மாக அவர் மறுக்க முடி­யாது.

Srilanka_Seeman.jpg

அடுத்­த­தாக சீமா­னு­டைய பேச்­சாற்­றலைச் சொல்­லலாம். ஈழப் போராட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்கு நிகழ்ந்த கொடு­மை­களை, மக்கள் அடைந்த துய­ரங்­களை, போருக்குப் பின்னால் இருக்கும் கார­ணி­களை தமி­ழக மக்­க­ளிடம் பாமர மொழியில் கொண்டு சேர்த்­தவர் சீமான். அத­னா­லேயே அவர் பின்னால் பெரு­வா­ரி­யான இளை­ஞர்கள் திரண்­டனர். தொடர்ச்­சி­யான சிறை­வா­சமும், அவர் மீதான அடக்­கு­மு­றை­களும் இளை­ஞர்கள் மத்­தியில் அவர் மீதான மதிப்பை உயர்த்­தி­யது.

seemon.jpg

இன்று, நாம் களப்­ப­ணி­யாற்றிச் சிறுகச் சிறுகச் சேர்க்கும் வாக்­கு­களை, நடி­கர்கள் எளி­தாக தங்­களின் பிர­பல்­யத்தின் மூலம் பெற்­று­வி­டு­கி­றார்கள் என சீமான் குற்­றம்­சாட்­டினால், அவ­ருக்கு முன்­பாக ஈழ விடு­தலைப் போராட்­டத்தை ஆத­ரித்த, அதற்­காக சிறை சென்ற, கொடு­மை­களை அனு­ப­வித்த பல­ரை­யும்­ விட, சீமான் அதிக கவனம் பெற்­றி­ருக்­கி­றாரே; அதற்­காக அவர்கள் சீமான் மீது கோபப்­பட முடி­யுமா? ஆனால், நடி­க­ராக இருந்­தாலும் குறைந்­த­பட்சம் தமிழர் நலன் சார்ந்த விஷ­யங்­களில் தொடர்ந்து குரல்­கொ­டுத்­து­வரும் விஜயை சீமான் எதி­ராக  நினைப்பது தேவை­யற்­றது'' என்­பதே சீமா­னைப்­போல தமிழ்த் தேசி­யத்தை முன்­வைத்து அர­சியல் செய்­ப­வர்­களின் கருத்­தாக இருக்­கி­றது.

Vijay_seeman.jpg

ஆனால், ''விஜயின் அர­சியல் வருகை, ரஜினி, கம­லுக்கு ஆத­ர­வாகப்போக வாய்ப்­பி­ருக்­கி­றது. குறிப்­பாக, ரஜினி, கமல் இணைந்து அர­சி­ய­லுக்கு வர வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சேகர் `கமல் 60' நிகழ்ச்­சியில் கோரிக்கை வைத்­தி­ருந்தார். அப்­போதே, சீமான் உள்­ளிட்ட பல­ருக்கும் கடு­மை­யான அதி­ருப்தி ஏற்­பட்­டது. அத­னால்தான் சீமான் இப்­போதே விஜயையும் எதிர்த்து அர­சியல் செய்­கிறார்'' என்­கின்­றனர் அர­சியல் விமர்­ச­கர்கள்.

ஆனால், வாக்­கு­ வங்­கிக்கும் இதற்கும் எந்தச் சம்­பந்­தமும் இல்லை. பத்­தி­ரி­கை­யா­ளர்கள் விஜய் குறித்துக் கேட்­க­வும்தான் எங்கள் அண்ணன் பதில் சொன்னார். எங்கள் அண்ணன் சீமான் கட்சி ஆரம்­பித்து மக்­களைச் சந்­தித்தார். இரசிகர் மன்ற நிர்­வா­கி­களைச் சந்­திக்­க­வில்லை. அதனால், ரஜினி, கம­லையும் எங்கள் அண்ணன் சீமா­னையும் திரைத்­து­றை­யி­லி­ருந்து வந்­த­வர்கள் என ஒப்­பி­டு­வது சரி­யல்ல. இது குறித்து எங்கள் அண்­ணனே விளக்­கமும் கொடுத்­து­விட்டார்'' என்­கின்­றனர் நாம் தமிழர் கட்­சி­யினர்.

nam_thamilar_katchi.jpg

இந்­நி­லையில்,  சீமா­னுக்கு எதி­ராக விஜய் இரசி­கர்கள் கள­மி­றங்­கி­யுள்­ள­மையால் மீண்டும் சீமான், விஜய் இரசி­கர்கள் கோபப்­பட்டு என்ன ஆகப்­போ­கி­றது. விஜய் தகு­தி­களை வளர்த்துக்‌கொண்டு அர­சி­ய­லுக்கு வந்தால்‌ வரட்டும். குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். தகுதிகளை வளர்த்துக்‌ கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால்‌ வரட்டும். விஜயை தொடக்க காலத்தில் இருந்து தற்காத்தவன் நான். சினிமா கவர்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு விஜய் அரசியலுக்கு வர வேண்டாம்.  தம் மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும். எனது வேலையில் நான் மன நிறைவு பெறுகிறேன். மக்கள் என்னை அங்கீகரிக்கவில்லை என வருத்தப்படவில்லை” என்றார்.

last.jpg

சீமான் தனது அரசியல் இருப்பு தொடர்பான அச்சம் காரணமாகவே இவ்வாறு விஜய் உள்ளிட்டவர்களை விமர்சிக்கின்றார் என்றே தோன்றுகின்றது. ஆயினும், நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று அவர் கூறுவது முறையா? ஏனெனில் சீமானே ஒரு நடிகர்தான்... அவரே பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு சினிமாதான் முதலில் பிரபல்யம் என்ற முகத்தை கொடுத்தது. சினிமா நட்சத்திரங்கள்தான் தமிழக முதல்வர்களாக பலமுறை ஆட்சி பீடம் ஏறியுள்ளனர். எனவே, தமிழக அரசியலில் இருந்து சினிமாவை என்றும் பிரிக்க முடியாது... இதனை அறியாதவராக சீமான் இருக்க முடியாது.

 

 

https://www.virakesari.lk/article/100795

  • கருத்துக்கள உறவுகள்

என்னது ரஜனி மீன்டும் அரசியலுக்கு வாராரா.😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னது ரஜனி மீன்டும் அரசியலுக்கு வாராரா.😃

அது பழைய நியூஸ். புது நியூஸ் இல்லாட்டில் பழசை வைச்சு கயிறு திரிக்கிறதுதானே இப்பத்தையான் ஊடகங்களின்ரை வேலை.

வீரகேசரி பழைய செய்திக்கு புதிசா கட்டுரை எழுதியுள்ளது.

சினிமா கதாநாயக பிம்பத்தை மட்டும் நம்பி, அதற்கு வாக்கு போட்டு மக்கள் தம்மை வெல்லவைப்பார்கள் என்று மக்களை கேவலமாக நினைக்கும் விஜய் போன்ற களத்தில் இறங்கி நின்று அரசியல் செய்யாத நடிகர்களை விட, அவரின் அரசியல் மீது பல எனக்கு கேள்விகளும் முரண்பாடுகளும், ஒவ்வாமையும் இருப்பினும்  மக்கள் மத்தியில் இறங்கி அவர்களை நோக்கி அரசியல் செய்யும் சீமான் பலமடங்கு மேல் என்பதே என் எண்ணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.