Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். காற்றாலை மின் திட்டத்தில் பலித்த இந்தியாவின் இராஜதந்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ். காற்றாலை மின் திட்டத்தில் பலித்த இந்தியாவின் இராஜதந்திரம்

- ரொபட் அன்டனி -
வடக்கில் அரசியல் கட்சிகளும் சீனாவின் நிறுவனம் மேற்கொள்ளும் யாழ். காற்றாலை மற்றும் சூரிய ஒளிமூலமான மின்திட்டத்தை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார்.

யாழ். தீவுகளிலிருந்து இந்தியாவின் எல்லைக்கு சுமார் 48 கிலோ மீட்டர் தூரமே காணப்படுகின்றது. எனவே இந்தியா இதனை இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன் குறித்த திட்டத்துக்கான செலவை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக மின்சக்தி அமைச்சர் டலஸை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார். இதனையடுத்து தற்போது இந்த திட்டம் சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள சூழலில் தற்போது மேற்கு மு‍னையம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் இந்த கிழக்கு முனைய விடயம் தொடர்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளான அனலைதீவு நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சீன நிறுவனத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமான மின் உற்பத்தி திட்டங்கள் இந்தியாவின் கைகளுக்கு மாறும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் இந்தியா இராஜதந்திர ரீதியில் காய்நகர்த்திவருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

daadadadad.jpg

யாழ். தீவுகளின் மின்திட்டம்
யாழ்ப்பாணத்தின் இந்த நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு ஆகிய தீவுகளுக்கு தற்போது டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் சீனாவின் பங்களிப்புடன் இங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருந்தது. இது தொடர்பில் ஜனவரி மாதத்தில் அமைச்சரவை பத்திரமும் முன்வைக்கப்பட்டிருந்தது. 

சீனாவின் காற்று மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடர்பான நிறுவனமான சினோர் இடக்வின்( SINOR ITECHWIN) என்ற நிறுவனம்  இந்த மின்சக்தி திட்டத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்க விருந்தது. வடக்கில் அரசியல் கட்சிகளும் இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்ததன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில் இந்தியா இது தொடர்பில் அவதானம் செலுத்தியது. குறித்த தீவுகளிலிருந்து இந்தியாவின் எல்லைக்கு சுமார் 48 கிலோ மீட்டர் தூரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சீனாவின் பிரசன்னம் அங்குவரும் பட்சத்தில் அது இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதியது. இதனையடுத்து இந்தியா இதனை இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அந்தவகையில் எவ்வாறு இந்த விடயத்தை தடுத்து நிறுத்தி இந்தியாவின் பிரசன்னத்தை அங்கு எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தொடர்பாக இந்தியா இராஜதந்திர ரீதியில் ஆராய்ந்த நிலையிலேயே அண்மையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தியா நன்கொடை 
குறித்த சந்திப்பில் மின்சக்தி உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கான அவசியத்தை அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார். அந்த வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த திட்டத்தை இலங்கையே  முன்னெடுக்க வேண்டும் என்றும் இதற்கான நிதி உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதன்படி 12 மில்லியன் டொலர் உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக மின்சக்தி அமைச்சரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.  இந்நிலையில் இந்தியா இவ்வாறு 12 மில்லியன் டொலர்களை இலவசமாக வழங்குமாயின் தாம் அதனை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தெரிவித்திருக்கின்றார்.

அதன்படி, இந்திய உயர்ஸ்தானிகரின் யோசனையை ஏற்றுக் கொண்ட மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அதுதொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கும் என்றும் அந்த வகையில் இந்தியாவின் நன்கொடையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து  கேசரிக்கு விபரித்த மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும யாழ்ப்பாண மக்களுக்கு போதுமான வகையில் குறைவின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பதே மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் எனது முழுமையான நோக்கமாக இருக்கின்றது. அதற்காக எந்த விதமான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். அந்த வகையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தின் அனலைதீவு நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமான மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இந்தியா இது தொடர்பில் அக்கறை செலுத்தி இருக்கின்றது. என்னை அண்மையில் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த திட்டத்தை முன்னெடுக்க முழுமையான நிதி செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்தார். இந்தியா இந்த செலவை முழுமையாக நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பிராந்தியம் குறித்து அக்கறை செலுத்துகின்ற ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதுமட்டுமன்றி இந்தியாவானது இலங்கையின் மூத்த அண்ணனாகும். எனவே இந்தியா கூறுகின்ற இந்த யோசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

 இந்தியா இவ்வாறு 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் பட்சத்தில் அந்த திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் நாங்கள் முன்னெடுப்போம் என்பதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றேன். இந்தியா எமது நண்பன் என்ற வகையில் நாம் இதனை ஏற்றுக் கொள்கின்றோம். இந்தியா தெற்காசியாவின் ஆன்மாவாகவுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தை தற்போது இந்த புதிய வகையில் செய்வது தொடர்பில் நாங்கள் முழுமையாக கவனம் செலுத்தி இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தார். 

இலங்கை விருப்பம் 
அந்தவகையில் இந்தியாவின் உதவியுடன் இந்த காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கத்துடன் இருப்பதாகவே தெரியவருகிறது. முக்கியமாக கிழக்கு முனைய விடயத்தில் இந்தியாவுக்கு ஒரு அதிருப்தி நிலைமை ஏற்பட்டது. அதனை இந்தப்  விடயத்தின் ஊடாக முகாமைத்துவம் செய்யும் ஒரு உபாயமும் இங்கு இருப்பதாக தெரிகிறது. காரணம் கிழக்கு முனைய விடயத்தில் இலங்கை செயற்பட்ட விதம் தொடர்பில் இந்தியா நேரடியாகவே தனது அதிருப்தியை வெளியிட்டுவந்தது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கிழக்கு முனைய விடயத்தில் இலங்கை செயற்பட்ட விதம் தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும் தாம் அதில் மகிழ்ச்சி அடையவில்லை என்றும் நேரடியாக தெரிவித்திருந்தார். அந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் தி‍னேஷ் குணவர்த்தனவே வெளியிட்டிருந்தார். இந்த சூழலிலேயே தற்போது இந்த யாழ். காற்றாலை மின் திட்டம்  இந்தியாவின் கைகளுக்கு மாறும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக அவ்வாறே நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.   

இலங்கை இந்திய உறவு
தெற்காசியாவின் வல்லரசு எனக் கருதப்படும் இலங்கையின் மிக நெருங்கிய அயல்நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாறு தொடக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் நெருங்கிய உறவு நீடித்து வந்திருக்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வரலாற்றிலும் அண்மைய அரசியல் வரலாற்றிலும் இருதரப்பு உறவில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும் இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்பு என்று வரும்போது ஒரு நெருக்கமான நிலை ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இரண்டு நாடுகளிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது அனுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. 

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் கடந்தகாலங்களில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவந்தன. முக்கியமான இலங்கையிலான சீனாவின் பிரசன்னம் இந்தியாவை அதிருப்திக்குள்ளாக்கி வந்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கைக்கு எந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் முதலாவதாக உதவி வழங்குவதில் இந்தியா முதன்மை வகிக்கிறது என்று கூறவேண்டும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக உதவி வழங்குவதில் முதன்மையாக செயற்பட்டு வந்திருக்கின்றது. அண்மைய கால வரலாற்றை எடுத்து நோக்கும் போது 2004ஆம் ஆண்டில் இலங்கையில் சுனாமி பேரனர்த்தம்  ஏற்பட்டபோது இந்தியா முதல் நாடாக இலங்கைக்கு உதவி செய்தது. அதன்பின்னர் இயற்கை அனர்த்தங்கள் வெள்ளம் மண்சரிவு போன்ற நேரங்களில் கூட இலங்கைக்கு இந்தியா உதவி செய்திருக்கின்றது.

யுத்த காலத்தில் கூட இலங்கைக்கு இந்தியா உதவி செய்திருக்கிறது. அதேபோன்றே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கூட இலங்கைக்கு முதலாவதாக தடுப்பூசிகளை வழங்கியது மட்டுமின்றி அதற்கு முன்னர் பல்வேறு மருத்துவ உதவிகளையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியிருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏனைய பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் அதில் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை செலுத்துகின்ற இந்தியாவின் ஒரு நோக்கமும் இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் பிரசன்னம் எப்போதும் இருக்க வேண்டும் என்று இந்தியா கருதுவது இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான அந்த நாட்டின் அக்கறையை எடுத்துக் காட்டுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் கடந்த சில வருடங்களாக அதாவது சுமார் ஒரு தசாப்தகாலமாக இலங்கையில் சீனாவின்  பிரசன்னம் இந்தியாவை அதிருப்தியடைய செய்ததாகவே கருதப்படுகிறது. 2000-ம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் சீனாவின் பிரசன்னம் இலங்கையில் அதிகரித்தமை தொடர்பில் இந்தியா கடும் அதிருப்த்தி அடைந்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. முக்கியமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது சீனாவுக்கு 70 வீத உரிமத்துடன் 99 வருட குத்தகைக்கு வழங்கியபோது பல்வேறு விதமான அதிருப்தி நிலைமை தென்பட்டது.

அந்தவகையில் இந்தியாவும் இலங்கையில் தனது பிரசன்னத்தை உறுதியாக்குவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறது.  அதன்படியே கொழும்பு கிழக்கு முனையத்தை இலங்கையுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா முயற்சித்தது.  இந்தியாவுக்கு 49 வீத உரிமம் மற்றும் இலங்கைக்கு 51 வீத உரிமைத்துவம் என்ற அடிப்படையில் இதனை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

எனினும் அரசாங்கத்தின் உள்ளேயும்  அரசாங்கத்துக்கு வெளியேயும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த நடவடிக்கை தற்போது கைவிடப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது இந்த யாழ்ப்பாணத்தின் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்ட விவகாரம் களத்துக்கு வந்து இருக்கின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகின்றது. குறித்த திட்டத்துக்கான செலவை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியாவது. அங்கு தனது பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. இலங்கை குறித்த திட்டத்துக்கான நிதியை இந்தியா இலவசமாக வழங்கும் பட்சத்தில் அதனை இந்தியாவுக்கே அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றது. 

அந்த விடயத்தில் இந்தியா ஒரு இராஜதந்திர ரீதியில் காய்நகர்த்தியிருக்கின்றது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தொடர்ந்தும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்வதில் தாமதம் நிலவுகின்றது. பெரும்பாலும் ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கம் அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://www.virakesari.lk/article/100885

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி......உலக நாடுகள் எல்லாம் ஒரு மாதமாவது கண்டியில் குந்தியிருந்து பாடம் பயில வேண்டும்......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

இலங்கையின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி......உலக நாடுகள் எல்லாம் ஒரு மாதமாவது கண்டியில் குந்தியிருந்து பாடம் பயில வேண்டும்......!  😎

இலங்கை செலுத்த வேண்டிய கடன், அது அமைந்திருக்கும் கேந்திர நிலையத்துடன் ஒப்பிடுகையில் தூசு. நன்கொடைகளிலும், கடன்களிலும் காலத்தை ஓட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

வாசகர்களை அடி முட்டாளாகக் கருதியதால் கட்டுரை ஆசிரியர் றொபேட் அந்தனிக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ☹️

கட்டுரையை இங்கே இணைத்த கிருபனின் நகைச்சுவை உணர்விற்கு எனது பாராட்டுக்கள்... 👍

 

😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

வாசகர்களை அடி முட்டாளாகக் கருதியதால் கட்டுரை ஆசிரியர் றொபேட் அந்தனிக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ☹️

கட்டுரையை இங்கே இணைத்த கிருபனின் நகைச்சுவை உணர்விற்கு எனது பாராட்டுக்கள்... 👍

 

😂

ஏன் வாசகர்களை அடிமுட்டாள்களாக்க வேண்டிய தேவை வீரகேசரிக்கு?🤔

இந்தியா இராஜதந்திர ரீதியில் இலங்கையிடம் மூக்குடைபட்டுள்ளது. ஆனால் குத்துவிட்டது சீனாதான்!

சீனாவோ, இந்தியாவோ ஏதோ ஒரு நாடு வடக்கில் மூன்று தீவுகளுக்கு டீசலைப்பாவிக்காமல் மின்சாரம் கொடுத்தால் நல்லதுதானே!

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

1) ஏன் வாசகர்களை அடிமுட்டாள்களாக்க வேண்டிய தேவை வீரகேசரிக்கு?🤔

2) இந்தியா இராஜதந்திர ரீதியில் இலங்கையிடம் மூக்குடைபட்டுள்ளது. ஆனால் குத்துவிட்டது சீனாதான்!

3) சீனாவோ, இந்தியாவோ ஏதோ ஒரு நாடு வடக்கில் மூன்று தீவுகளுக்கு டீசலைப்பாவிக்காமல் மின்சாரம் கொடுத்தால் நல்லதுதானே!

 

1) 😂😂

கிருபன், நான் கட்டுரையாளரை கிண்டலடித்ததை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள் போல..

இந்த விடயத்தில் இராசதந்திர ரீதியில் வெற்றிபெற்றது சீனாவும் சிங்களமுமே. எழுத்து வாசனைகூட இல்லாத சிறு குழந்தைக்குக் கூட இது தெரியும்/புரியும்.

ஆனால் கட்டுரையாளரோ " வாங்கின காசிற்கு மேல கூவுறாண்டா கொய்யால" ரகம் போல , அதனால் நேர் எதிராக இந்தியாவின் இராசதந்திரம் வெற்றி பெற்றதாக புலுடா விடுகிறார். வாசகர்களை முட்டாளாக நினைத்தார் போலும். 😏

2) 1️⃣0️⃣0️⃣

3)

 

😂

 

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இந்த விடயத்தில் இராசதந்திர ரீதியில் வெற்றிபெற்றது சீனாவும் சிங்களமுமே. எழுத்து வாசனைகூட இல்லாத சிறு குழந்தைக்குக் கூட இது தெரியும்/புரியும்.

ஆனால் கட்டுரையாளரோ " வாங்கின காசிற்கு மேல கூவுறாண்டா கொய்யால" ரகம் போல , அதனால் நேர் எதிராக இந்தியாவின் இராசதந்திரம் வெற்றி பெற்றதாக புலுடா விடுகிறார். வாசகர்களை முட்டாளாக நினைத்தார் போலும். 😏

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.