Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு – கங்குலி கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு –

கங்குலி கணிப்பு

Ganguly-3

 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும். ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். -

cup

- இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை குவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 46 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில், நெஞ்சுவலி வலி காரணமாக சமீபத்தில் பாதிக்கப்பட்டு மீண்டும் தனது இயல்பான வேலைகளுக்கு திரும்பியுள்ள பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி ஆன்லைன் மூலமாக இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து கங்குலி பேசுகையில் : “இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. இந்த பகல் இரவு போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. -

IND

 

ஏனெனில் இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நான் எப்போதும் வெற்றி தோல்வி குறித்து பேச மாட்டேன். ஆனால் இந்த போட்டி இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று அடித்துக் கூறுவேன்” என்று கங்குலி கூறியிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 33 ரன்கள் அடித்துள்ளதால் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

kohli

பிங்க்பால் டெஸ்ட் : இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு - கங்குலி கணிப்பு | INDvsENG Test | Ganguly (crictamil.in)

 

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இந்தியா வெற்றி உறுதி.49 ஓட்டங்கள் இலக்கு.அத்துடன் இந்தப் போட்டியுடன் அஸ்வின் 400 விக்கட் எடுத்துள்ளார் என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பித்த வேகத்திலேயே நிறைவுக்கு வந்த இங்கிலாந்து - இந்திய அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்தது.

ZGvEHXLk.jpg

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்சமயம் விளையாடி வருகிறது.

முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனிலையில் இருந்தது. இந் நிலைியல் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சுக்காக 112 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் பதிலுக்க துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இந் நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க 13 ஓட்டங்களினால் பின்தங்கியிருந்த இந்தியா மொத்தமாக 53.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னங்சின் முடிவில் 33 ஓட்டங்களினால் பின் தங்கியது.

அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியாவின் ‘சுழல்’ சூறாவளியில் சிக்கியது. 

அக்சர் படேல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கிராலே (0) போல்டானார். மூன்றாவது பந்தில் பெயர்ஸ்டோவ் (0) போல்டாக, ஓட்ட கணக்கை துவக்கும் முன் 2 விக்கெட்டுகளை இழந்தது. 

அதன் பின்னர் சிப்லேயும் (7), அக்சர் ‘சுழலில்’ சிக்கினார். வழக்கம் போல ஸ்டோக்சை (25) பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின். அக்சரிடம் ஜோ ரூட் (19) வீழ்ந்தார்.  ஆர்ச்சரை(0) ஆட்டமிழக்கச் செய்தார் அஷ்வின். அந்த ஆட்டமிழப்பினால் டெஸ்ட் அரங்கில் 400 ஆவது விக்கெட் என்ற மைல்கல்லையும் அஷ்வின் எட்டினார். 

போக்சை (8) வெளியேற்றிய அக்சர், தனது 5 ஆவது விக்கெட்டை பெற்றார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

VOZDmXtg.jpg

இந்திய அணி சார்பில் அக்சர் 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் 49 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

ரோகித் சர்மா 25 ஓட்டங்களுடனும், சுப்மான் கில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயனாக அக்சர் படேல் தெரிவானார்.

EvFJNFKWQAQhEFS.jpg
 

https://www.virakesari.lk/article/101211

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.