Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அதிரடிப்படை முகாமில் பாதுகாப்பாக இருந்தபோது, அங்கு வந்த கருணா குழு உறுப்பினர்களில் ஒருவரான அசோக் என்பவர் என்னைப்பார்த்து இவரைக்கொல்ல வேண்டுமென்றும் ஆவேசமாக அதிரடிப்படை அதிகாரி ஒருவரைப்பார்த்து கத்தினார்.

Featured Replies

நான் அதிரடிப்படை முகாமில் பாதுகாப்பாக இருந்தபோது, அங்கு வந்த கருணா குழு உறுப்பினர்களில் ஒருவரான அசோக் என்பவர் என்னைப்பார்த்து இவரைக்கொல்ல வேண்டுமென்றும் ஆவேசமாக அதிரடிப்படை அதிகாரி ஒருவரைப்பார்த்து கத்தினார்.

ஜ வியாழக்கிழமைஇ 21 யூன் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த கருணா குழுவினர் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி தமிழ் மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில் முக்கியமாக கலந்து கொள்வதற்காகவும் எனது தொகுதி மக்கள் குறைபாடுகளைக் கண்டறியும் நோக்குடனும் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குச் செல்லும் நோக்குடனும் கடந்த திங்கட்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டேன். பின்னர், செவ்வாய்க்கிழமை காலையில் அம்பாறையில் இருந்து எனது வாகனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சகிதம் அக்கரைப்பற்றுக்குச் சென்றேன். அங்குள்ள ஆதார வைத்தியசாலைக்கு சென்று பற் சிகிச்சை சத்திர சிகிச்சை பிரிவினை திறந்து வைத்து விட்டு அவ் வைத்தியசாலையின் குறைபாடுகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டேன். பின்னர் எனது சொந்த ஊரான திருக்கோவிலுக்கு எனது சக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் சென்றேன். அங்கு சென்று திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உப பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான அதிகாரிகள் சகிதம் திருக்கோவில் சந்தைக் கட்டட தொகுதிக்கு சென்ற வேளையில் அங்கு வந்தவர்கள் தாங்கள் கருணா குழுவினை சேர்ந்தவர்கள் என்றும் கருணா குழு முக்கியஸ்தர் இனியபாரதி சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். எனது பாதுகாப்பின் நிமித்தம் சந்திக்க முடியாது எனவும் எனது தொகுதி மக்களின் குறைபாடுகளை, அவல நிலைகளை கண்டறிவதற்காகவே இங்கு வந்துள்ளேன் எனவும் அப்படி சந்திக்க விரும்பினால் எனது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டேன். உடனடியாக கோபமுற்ற கருணா குழுவினர் இனியபாரதியை சந்திக்காவிடின் இங்கிருந்து உயிருடன் திரும்பமுடியாது என கூறி என்னை கேவலப்படுத்தும் நோக்குடன் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். அத்துடன், தாம் கொண்டு வந்த ஆயுதங்களை தயார்படுத்தியதுடன் சுடுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, எனது பாதுகாப்பிற்காக வந்த உத்தியோகத்தர்களும் திருக்கோவில், அம்பாறை காவல்துறை அதிகாரிகளும் கருணா குழுவை சுட தடுத்ததுடன் என்னை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள அதிரடிப்படை முகாமிற்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். நான் அதிரடிப்படை முகாமில் பாதுகாப்பாக இருந்தபோது, அங்கு வந்த கருணா குழு உறுப்பினர்களில் ஒருவரான அசோக் என்பவர் என்னைப்பார்த்து இவர் புலி ஆதரவாளர் என்றும் இவரைக்கொல்ல வேண்டுமென்றும் ஆவேசமாக அதிரடிப்படை அதிகாரி ஒருவரைப்பார்த்து கத்தினார். அப்போது அவ்வதிகாரி அந்த நபரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்.

பின்னர், நான் எனது தாயாரைப் பார்ப்பதற்காகவும், எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு விஜயம் செய்ய முற்பட்டபோது காவல்துறை உத்தியோகஸ்தர்கள் என்னைத் தடுத்தனர். நீங்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது எனவும் தங்களது வீட்டிற்கு அருகாமையில் கருணாகுழு உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதாகவும் தற்போது நிலைமை மோசமடைவதால் பாதுகாப்பாக வெளியேறுவதுதான் சிறந்தது என அறிவுறுத்தினர். எனவே, உடனடியாக நான் திருக்கோவில் காவல்துறையில் எனது முறைப்பாட்டினை பதிவு செய்தேன். பதிவிலக்கம் இஐஆ 186ஃ67 நேரம் 13.25 பின்னர் பிராந்திய காவல்துறை அதிபரின் உத்தரவுக்கமைய காவல்துறை என்னை பத்திரமாக தங்களது வாகனத்தில் ஏற்றி அக்கரைப்பற்றிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றி அம்பாறைக்கு கொண்டு வந்தனர். இங்கு நான் ஒன்றை எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன். எனது குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஜனநாயக அடிப்படையிலான அரசியலில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகின்றது. நான் கூட எதிர்பாராதவகையில் தேசியப்பட்டியலில் உள்ளீர்க்கப்பட்டவன். எனது தகப்பனார் அரசியலில் சிறந்த தலைமைத்துவம் ஒன்றைக் கொடுத்து மக்களுக்கு சேவையாற்றிய சமூக சேவையாளர். இன்று எவ் ஆயுதக்குழு எனக்கு கொலைமிரட்டல் செய்ததோ அதே ஆயுதக்குழுவினால்தான் எனது தகப்பனார் 07.02.2005 அன்று மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இன்று எனது குடும்பத்திற்குக்கூட கொலைமிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனது அரசியல் பயணம் சூன்யமயப்படுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். எனது சொந்த தொகுதிக்கு சுதந்திரமாக சென்று என் மக்களின் அவல நிலைகளை நேரில் கண்டறிந்து தீர்க்க முடியாத அளவிற்கு முடக்கப்பட்ட ஒரு நிலையை உணர்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது சிறப்புரிமைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் அரச பாதுகாப்பினர்களினதும் கையாலாகாத்தனம் இந்த நிகழ்வை பறைசாற்றுகின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாத்திரமல்லாது, நான் இந்த நாட்டின் சாதாரண பிரஜை என்ற வகையில் அடிப்படை உரிமைகள் எனக்கு முற்றாக மறுக்கப்பட்டுள்ளன. எனக்கே என் தொகுதியில் சுதந்திரமாக நடமாட முடியாதென்றால் சாதாரண தமிழ் பிரஜைகளின் நிலைமையை தெளிவுபடுத்த வேண்டியதில்லை. எனது சொந்த ஊருக்கு எனது சொந்தங்களை பார்ப்பதற்கு ஆவலாக சென்ற நான் எனது தொகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கீழ்தரமான வேலைகளை செய்பவர்கள் தங்களை தாங்களே "கிழக்கு மாகாணத்தின் விடி வெள்ளிகள்" என கூறுபவர்கள் கேடுகெட்ட வேலைகளில் ஈடுபடுவதும்,ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுவதும் இவர்களின் இயலாமையே காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.