Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாரேனும் கட்சி தாவினால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுவேன்: மகிந்த எச்சரிக்கை.

Featured Replies

யாரேனும் கட்சி தாவினால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுவேன்: மகிந்த எச்சரிக்கை.

மங்கள சமரவீரவின் புதிய கட்சிக்கு யாரேனும் தாவினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்புக் கூட்டம், மகிந்தவின் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்ச, வேறு வழியே இல்லையெனில் தேர்தலைச் சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கியதனைத் தொடர்ந்து அவசர கூட்டம் ஒன்றுக்கு மகிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இக்கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மேல் மாகாண சபை ஆளுநர் அலவி மௌலானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மங்கள மற்றும் சிறீபதி சூரியராச்சி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திரக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கும் மகிந்த உத்தர்விட்டார்.

-Puthinam-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா பத்திக்கிச்சிடா நெருப்பு பத்திக்கிச்சிடா

Edited by suthaharan

  • தொடங்கியவர்

தவறுகளை ஏற்றுக்கொண்டால் மங்கள, ஸ்ரீபதியை ஏற்றுக்கொள்ளத்தயார் - நிமல் சிறிபால டி. சில்வா.

மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் தமது தவறுகளை ஏற்றுக்கொண்டு எம்மிடம் வந்தால் அவர்களை வரவேற்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். கட்சியிலும் அரசாங்கத்திலும் அவர்களுக்கு உரிய இடம் கொடுப்பது பற்றி பரிசீலிக்கவும் தயாராக இருக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற வைத்தது தவறான விடயம் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அப்படியானால் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றாரா? இந்த யுகத்தில் நாம் பெற்ற பாரிய அரசியல் வெற்றியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை பெருமையுடன் குறிப்பிடுகின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மங்கள சமரவீரவினதோ ஜனாதிபதியினதோ எமதோ சொத்தல்ல. அது மக்களின் சொத்தாகும். எமது கட்சியை பலவீனமடையச் செய்ய சதி திட்டம் மேற்கொள்கின்றபோதெல்லாம் எமது கட்சி பலமடையும். தவறுகள் எங்கும் இடம் பெறலாம். அந்த வகையில் தவறிழைத்துள்ள மங்கள, ஸ்ரீபதி சூரியõராச்சி ஆகியோர் தவறுகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் அரசாங்கத்துடன் இணைய வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். கட்சியின் ஒழுக்காற்று ஒழுங்கு விதிகளின் படி அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம். அவர்கள் இருவரும் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

1994 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை ஆட்சி செய்து வருகின்றோம். அந்த வகையில் இடையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை ஐ.தே.க. நாட்டை ஆட்சி செய்தது. அதன் போது அமைச்சரவைக்கும் தெரியாமல் அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க போர் நிறுத்த உடன்படிக்கையை உருவாக்கினார். இதனால் புலிகள் வடகிழக்கில் பாரியளவில் பலமடைந்துள்ளனர். ஆயுதங்களை கொள்வனவு செய்தனர். முக்கியமான புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களை நாங்கள் இழந்தோம். மங்களவினதும் ஸ்ரீபதியினதும் சவால் புஷ்வாண மானதாகும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம். சில அரசியல்வாதிகள் சில தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் அரசியல் அநாதைகளாக ஆகிவிடுகின்றனர். அவ்வாறே நாங்கள் மங்களவைப் பார்க்கின்றோம்.

-Virakesari-

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவும் தயாராக உள்ளோம் - மைத்திரிபால சிறீசேனா

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பலமாகவே உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவும் தயாராகவே உள்ளோம் என சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உறுப்பினர்கள் வெளியேறுவதினால் எதுவித பாதிப்பும் கட்சிக்கு இல்லை எனத் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியைப் பலவீனப்படுத்த மங்கள சமரவீர மற்றும் சூரியாச்சி முயற்சி செய்வதோடு ரணிலுக்கு அதிகாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஒருபோதும் கவிழ்க முடியாது என மைத்ததிரிபால சிறீசேன சுட்டுக்காட்டியுள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யூலை மாதம் 21ம் நாள் நடத்தவிருக்கும் 17வது தேசிய மாநாட்டில் ஜனாதிபதி அரசியல் முக்கியம் வாய்ந்த அறிவிப்பை மேற்கொள்வார் எனவும் சிறீசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு

நல்ல வேளை

நாடாளுமன்றத்தையே கொளுத்திவிடுவேன் அப்பிடின்னு மகிந்து சொல்லாமா விட்டுதே :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.